Wednesday, July 1, 2009

மனசு = அறிவு இல்லாத மூளை !

பொதுவாகவே, நம்ம மூளை ஒன்று சொல்லும், அதற்கு எதிர்மாறாக மனசு ஒன்றைச் சொல்லும். இதையே சில சமயங்களில் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம்.

நம்ம வழக்குமுறைகளில் கூட மனசுல இருக்குறத அப்படியே சொல்லுங்க என்று தான் சொல்லுவோம். மூளையில இருக்குறத, நல்லா யோசிச்சு சொல்லுங்கன்னு சொல்லுவோம்.


இந்த மாதிரி வேறுபடுத்தி சொல்கிற வழக்கம் நம்ம ஊரில் மட்டுமல்ல..உலகெங்கும் இருக்கற விஷயம் தான். உதாரணமா, காதலுக்கு, இதயத்தை தான், சின்னமாக உலகமே அங்கீகரித்து இருக்கிறது. காதல் வயப்படுபவர்கள் "I have fallen in love" நு தான் சொல்லுவாங்க, "I have decided to love" நு சொல்ல மாட்டாங்க. அறிவைத்(மூளையை) தோற்கடித்து, மனம் வெற்றி பெறுவது தான் காதல். அதே மாதிரி, கல்யாணம்னு வரும்போது "I have decided to marry her " நு சொல்லுவாங்க. இங்க நம்ம ஆளுங்க நிறைய யோசிப்பாங்க. பல ஃபார்முலாக்கள் போட்டு வொர்க் ஒவுட் ஆகுதான்னு பாப்பாங்க. இங்க அறிவு(மூளை) வெற்றி அடைகிறது, மனம் அதனை ஆதரிக்கிறது.

அது என்ன மனசு? எங்கே இருக்கிறது மனசு? நம்மைப் பொறுத்த வரையில், ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு சொல்லணும்னா, நெஞ்சில் கை வைத்து சொல்லுவோம். பெரியவங்க, யாரையாவது வாழ்த்தும் போது கூட மனசார சொல்றேன் மா, நீ ரொம்ப நல்லா இருக்கணும்னு, நெஞ்சில் கை வச்சு சொல்லுவாங்க. மலேசியா போன்ற நாடுகளில் கூட
நாம் கை கொடுக்கும் போது, அவங்க நெஞ்சில் கை வச்சுட்டு, அதுக்கு அப்புறம் தான் கை குலுக்குவாங்க. வெறும் வாய்சொல்லில் மட்டுமல்லாமல், உங்களை மன்சார வரவேற்கிறேன் என்று சொல்லுவதாக அமைகிறது அதன் அர்த்தம்.

இதை எல்லாம் வச்சு பார்க்கும் போது, மனசு என்பதை இதயமாக பாவிக்கிறோம். அறிவு என்பதை மூளையாக பாவிக்கிறோம்.
அறிவியலின் படி பார்த்தால், மனசு என்கிற உணர்வு மூளையில் இருந்து தான் தோன்றுவதாக படிக்கிறோம். இருந்தாலும், நம்ம எல்லோருக்கும் இதை தனி தனியா பாக்குறதுல தான் விருப்பம்.

முதலில் தோன்றிய ஆதாம் ஏவாளுக்கு விதித்த கட்டளை, அந்த பழத்தை( Fruit of Knowledge) மட்டும் உண்ணாதீர்கள். பெரும் துன்பத்திற்கு ஆளாவீர்கள் என்று எச்சரித்ததாக கூறுகிறது பைபிள். அதாவது, மனம் மட்டும் இருந்தால், நல்ல வாழ்க்கையை வாழ முடியும், அறிவை தேடிக் கொண்டால் கஷ்டம் தான் வரும் என்று கூறுவது போல அமைந்து இருக்கிறது.

அப்படி, மூளை என்ன சொல்லும், மனசு என்ன சொல்லும் என்பதற்கான சின்ன உதாரணங்கள்.

காதல்
மூளை: டேய் அந்த பொண்ணு வேணாம்டா...ரொம்ப வசதியான பொண்ணு....வேற சமயத்து பொண்ணு வேற...நம்ம குடும்பத்துக்கு சரி வராதுடா...விட்டுறு டா......
மனசு: இல்லைடா எனக்கு புடிச்சு இருக்கு...எனக்குன்னே பொறந்தவ மாதிரி இருக்கா அவ....யாரு என்ன சொன்னாலும் பரவாயில்ல...நான் அவள தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்...
(அதுக்கு அப்புறம் அவர் படுகிற அவஸ்தை எல்லாம் அனுபவிக்குறவனுக்கு தெரியும்).

கிரிக்கெட் T20 இலங்கை Vs பாகிஸ்தான்
மூளை: கண்ணா, நம்ம எல்லாம் இந்தியர்கள், பாகிஸ்தான் காரன் எவ்ளோ கொடுமை பண்ணி இருக்கான் நம்ம நாட்டுக்கு...அவன் தாண்டா தோத்து போகணும்..
மனசு: பாகிஸ்தான் எதிரி தான்...ஆனா முதல் எதிரி இலங்கை தான்......பாகிஸ்தான் ஜெயிச்சா கூட பரவாயில்லை..இலங்கை ஜெயிக்க கூடாது.....

சரி, எப்பொழுதும் மனம் சொல்படி நடக்கலாமா என்று யோசித்தால், அதுவும் முடியாது. நம்முடைய சமூக அமைப்பை உருவாக்கியது மூளை. அந்த மூளை, நிச்சயம் மனதை வெற்றி பெற விடாது.

என்ன தான்டா சொல்ல வர்றே...சினிமா ஸ்டைல்ல சொல்லணும்னா...

மனசுல இருந்து சொல்றது INNOCENCE
மூளையில இருந்து சொல்றது INTELLIGENCE


நம்ம லெவலுக்கு கொஞ்சம் ஓவரான ஸ்ப்ஜெக்ட் தான்னு தெரியுது, சரி நம்ம எண்ணங்களை மட்டும் பகிர்ந்துக்குவோம்னு சொன்னது மனசு. இதுல கருத்து சொல்ற அளவுக்கோ, முடிவு சொல்ற அளவுக்கோ எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வது அறிவு.

சரி அதென்ன இப்படி ஒரு பேரு பதிவுக்கு....இதோ வர்றேங்க..

அறிவியலின் படி மனசு என்பது மூளையின் அங்கமே.
அதன்படி,

அறிவு + மனசு = மூளை
மனசு = மூளை - அறிவு
மனசு = அறிவு இல்லாத மூளை

=> மனசு = அறிவு இல்லாத மூளை
(Thus the pythogores theorem has been proved... hehehe)

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

//மனசு: பாகிஸ்தான் எதிரி தான்...ஆனா முதல் எதிரி இலங்கை தான்......பாகிஸ்தான் ஜெயிச்சா கூட பரவாயில்லை..இலங்கை ஜெயிக்க கூடாது.....
//

மனச படிக்கிற வித்தைய எங்க நண்பா கத்துக்கிட்ட ?

http://inthiyaa.blogspot.com/2009/06/blog-post_21.html

கபிலன் said...

"யூர்கன் க்ருகியர்..... said...
//மனசு: பாகிஸ்தான் எதிரி தான்...ஆனா முதல் எதிரி இலங்கை தான்......பாகிஸ்தான் ஜெயிச்சா கூட பரவாயில்லை..இலங்கை ஜெயிக்க கூடாது.....
//

மனச படிக்கிற வித்தைய எங்க நண்பா கத்துக்கிட்ட ?

http://inthiyaa.blogspot.com/2009/06/blog-post_21.html"

"எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்"

படித்தேன் பதிவை. மனதில் பட்டதை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் : ).
மனதைப் படிக்க ஆசை தான்.....ஆனா கத்துக்க முடியலிங்க..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Satish said...

romba simple sollanumna, manasu oru korangu, moolai ennoru korungu, intha rendu korungum senthu manushana aati padaikum. pavam manushan.

கபிலன் said...

"Satish said...
romba simple sollanumna, manasu oru korangu, moolai ennoru korungu, intha rendu korungum senthu manushana aati padaikum. pavam manushan."

நீங்கள் சொல்வது சரிதாங்க சதீஷ்!

LinkWithin

Blog Widget by LinkWithin