Monday, October 12, 2009

அருள்வாக்கு ஜெக்கம்மா - ஒரு கற்பனை!


அருள்வாக்கு கேட்க, ஜெக்கம்மாவிடம் வரும் சிலருக்கு, அவர்எப்படி அருள் வாக்கு கூறுவார் என்று சின்ன கற்பனை.இதை கொஞ்சம் அருள்வாக்கு கொடுக்குறவங்க ஸ்டைல்ல படிக்கவும்...

சிஷ்யர் : ஜெக்கம்மா....நம்ம கம்பூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக் கண்ணு வந்திருக்காரும்மா அருள் வாக்கு கேக்க...என்ன சொல்லப் போற..

ஜெக்கம்மா : டேய்....ஏகாதிபத்யம்..ஏகாதிபத்யம் னு சொல்றீங்களே...அது என்ன பத்தியம் டா........என் கிட்ட இல்லாத பத்தியமா....டா....ஜெய்ய்ய்ய் ஜெக்கமாஆஆ..........4 1/2 வருஷம் கூடவே இருந்து ஆதரவு கொடுத்து குப்பை கொட்டிட்டு, வெளியே வந்து விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்னு ஓட்டுக் கேட்ட இல்லை....குத்தனாங்க பாருங்க ஜனங்க...ஓட்டு இல்லை...உங்களுக்கு ஆப்பு.......இனிமேலாவது நல்ல புள்ளையா இரு...போ......ஜெய்ய் ஜெக்கம்மா...

சிஷ்யர்: ஜெக்கம்மா தாயே...நம்ம வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஷஷி தரூர் வந்திருக்காரு மா...

ஜெக்கம்மா : வாய்யா...ஷஷி தரூர்....ஒரு மனுஷனுக்கு ஜாதகத்துல ஒரு கட்டத்துல தான் சனி இருப்பார்....ஆனா உனக்கு எல்லா கட்டத்துலயும் சனி சப்பலங்கால் போட்டு உட்காந்துட்டு இருக்காருடா.........இனிமேல், ட்விட்டர்ல திட்டும் போது...ச்சே...ட்விட்டும் போது, அருள்வாக்கு ஜெக்கம்மா துணைன்னு போட்டுட்டு, அப்புறம் ட்விட்டு பண்ணு....எல்லாப் பிரச்சினையும் போயிடும் டா...ஜெய்ய் ஜெக்கம்மாஆஆ....

சிஷ்யர்: அருள்வாக்குத் தாயே....அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வந்திருக்கார் மா...அருள்வாக்கு கேட்க...

ஜெக்கம்மா : வாய்யா.....ஒபாமா...உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு டா...என் பேரு ஜெக்-கம்-மா....உன் பேரு ஒ-பா-மா. ஒரு நல்ல காரியத்துக்கு குடும்பத்தோட போகும் போது, ஜெக்கம்மாவுக்கு கடா வெட்டி, பொங்கல் வைக்கணும்னு கூட தெரியாதாடா ? நீயெல்லாம் எப்படி அமெரிக்க ஜனாதிபதி ஆன? அப்படி மதிக்காமப் போனீயே, ஒலிம்பிக்ல சிகாகோ பிட்....என்னாச்சு...? நோபல் பரிசு கிடைச்சும், அது உனக்கு தகுதியான்னு உலகமே பேசுறத கவனிச்சியா...? இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்கோ....ஹெல்த் கேர் பில் பாஸ் ஆகணும்னா...உன் கோட் பாக்கெட்ல ஒரு எலுமிச்சம் பழத்தை எப்பவும் வச்சிக்கோ.....ஜெக்கம்மா சொல்றா...ஒபாமா செய்றான்....ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆ....

சிஷ்யர்: எல்லோருக்கும் அருள்வாக்கும் சொல்லும் அருள்வாக்கு அம்மா, உங்களைப் பார்க்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வந்திருக்காரும்மா...அவரே ஏதோ கேக்கணுமாம் தாயே...

ஜெக்கம்மா : ஜெய்ய்ய்ய் ஜெக்கம்மா......டேய்...ஆசிப் அலி சர்தாரி...பாகிஸ்தான்ல நீயே ஒரு டம்மி பீசு.....நீ எதுக்குடா வந்தே.....நீ போயிட்டு ராணுவத் தளபதி பர்வேஸ் கியானியை வரச் சொல்லுடா....அவன் தாண்டா எல்லாமே.......சரி இவ்ளோ தூரம் வந்துட்ட பரவாயில்ல கேளு.
ஆசிப் அலி சர்தாரி :
ஜெக்கம்மா தாயே...பாகிஸ்தான்ல தீவிரவாதம் எப்பம்மா போகும்.....

ஜெக்கம்மா : ஹ்ம்ம்ம்ம்...... உலக அமைதிக்கு வாக்கு சொல்லட்டா அல்லது உங்க நாட்டுக்கு மட்டும் நல்லது உலகுக்கே கெட்டது.... அந்த வாக்குச் சொல்லட்டா...

ஆசிப் அலி சர்தாரி: எங்க நாட்டு நல்லதுக்கு மட்டும் சொல்லு தாயி...உலகம் கெட்டாலும் பரவயில்லை...

ஜெக்கம்மா : அதான பார்த்தேன்...எங்க இருந்து புத்தி வந்துருச்சோன்னு நினைச்சேன்.. ஜெய்ய்ய் ஜெக்கம்மா.......உங்க நாட்டோட GDP யே தீவிரவாதத்தை நம்பித் தாண்டா இருக்கு....அது மட்டும் இல்லைன்னா...ஒரு நாய் கூட உங்க ஊரை சீண்டாது...தீவிரவாதி இல்லைன்னா...அமெரிக்க காரன் பைசா கொடுக்க மாட்டான்...இந்தியாவை எதிர்க்கிற தீவிரவாதி இல்லைன்னா...சீனாக் காரன் ஆயுதம் கொடுக்க மாட்டானே டா..........தீவிரவாதம் இல்லைன்னா பாகிஸ்தான் ராணுவம் என்னடா பண்ணும்...அவனுங்க வேலையே அது தானே...? தீவிரவாதம் இல்லைன்னா உங்க நாட்டு மக்களுக்கு என்ன வேலை வாய்ப்புடா கொடுக்க முடியும்...? ஹ்ம்..... கம்முனு போய் அமெரிக்கனுக்கு கால் அமுக்குற வேலையையே கண்டின்யூ பண்ணுடா...அதான் உங்க நாட்டுக்கு சரி...ஜெய்ய்ய் ஜெக்கம்மா....ஹ்ம்ம்ம்....

சிஷ்யர் : இது வரைக்கும் பார்த்த எல்லாரையும் விட ரொம்ப டேஞ்சரான ஆள் ஒருத்தர் வராரு மா....ஜெக்கம்மா...

ஜெக்கம்மா : ஹ்ம்ம்....டேய்....யாருடா அவன்.....நமக்கே டேஞ்சரான ஆளு யாருடா அவன்....

சிஷ்யர் : வலையுலகத்துல பதிவராம். ப்ளாக்ஸ் எல்லாம் எழுதுவாராம்...ஏதோ கேக்கணும்னு வந்திருக்காரு...

ஜெக்கம்மா : ஐயோ ஜெக்கம்மா.....வலைப்பதிவரா.....எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பானே டா அவன்....சும்மா நின்னுட்டு இருக்கும் போதே....ஏன்மா நிக்குற அங்க தான் நாற்காலி இருக்கே..ஏன் உட்காரல?ந்னு கேப்பான். சரின்னு உட்கார்ந்த உடனே....என்னா ஜெக்கம்மா நாற்காலி கிடைச்ச உடனே உட்கார்ந்துடுவியான்னு இன்னொருத்தன் கேப்பான்.....அவனை அப்படியே கிளம்பச் சொல்லு.....நம்மால முடியாதுடா.....ஜெய்ய்ய் ஜெக்கம்மா....

சிஷ்யர் : அருள்வாக்குத் தாயே..உங்கள பாத்துட்டுத் தான் போகணும்னு அடம்பிடிக்கிறாருங்க அந்தப் பதிவர்..

ஜெக்கம்மா : சரி வரச் சொல்லு....ஹ்ம்ம்ம்ம்ம்

பதிவர் : ஜெக்கம்மா தாயே...ஒரே ஒரு கேள்வி தான்மா உங்கிட்ட...எப்படிம்மா ஹிட்ஸ் வாங்குறது...

ஜெக்கம்மா : ஜெய்ய் ஜெக்கம்மாஆஆஆ......இது ரொம்ப சிம்பிள்டா.....நாலு பேரு வலைத்தளத்துக்கு போயி, பதிவைக் கூட படிக்காமல், திட்டிட்டு வரணும். அதற்கு பதிலாக, அந்த நாலு பேரு, நாற்பது பேரை கூட்டிட்டு வந்து உங்க வலைத்தளத்துல திட்டுவாங்க...இப்படியே கண்டின்யூ பண்ணீங்கன்னா....ரேங்கிங்க்ல உன் சைட் கூடிய சீக்கிரம் வந்துடும் டா.......ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆஆ...

பதிவர் : நன்றிம்மா...கடைசியா ஒரே ஒரு குட்டிக் கேள்வி...பதிவுலகத்துல இருக்க சண்டை எப்பம்மா முடியும்...?

ஜெக்கம்மா : ஹ்ம்ம்ம்...டேய் சிஷ்யா....கேட்டான் பாருடா கேள்வியை....வலைஉலகமா...கொக்கான்னானாம்....இந்தக் கேள்விக்கு பதில் சொல்ற சக்தி என் கிட்ட இல்லைடா........ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா டா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா.....

கைதுறப்பு : சிரிப்புக்காக மட்டும் : )

Wednesday, October 7, 2009

உங்களுக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கிடையாதுங்க..!

"என்னங்க...உங்களைத்தான்...இன்னைக்கு கிருத்திகை, கடைக்கு போய் இலை, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் எல்லாம் வாங்கிட்டு வாங்க....அப்படியே இந்தப் பையனையும்(என் மகன் தீபு) கூடவே கூட்டிட்டி போய்ட்டு வாங்க" என தங்கமணி ஆர்டர் போட்டாங்க. ஆபீஸ்க்கு வேற ரொம்ப நேரமாச்சு..ஹ்ம்ம்..சரி என சொல்லி, எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துட்டு, அவசர அவசரமா ஆபீஸ் கிளம்பினேன்.

தெரு முனையில், பயங்கர மக்கள் கூட்டம். ஒவ்வொருவர் கையிலும், ரேஷன் அட்டை, மற்றும் ஒரு விண்ணப்பத் தாள் இருந்தது. அதோடு, கருப்பு சிவப்பு கரை வேட்டித் தொண்டர்களும், திமுகவின் கட்சிக் கொடிகளும் ஒரு புறம் என ஏரியாவே கலை கட்டியிருந்தது. அடடா....இந்த மாதிரி, நாம கடைசியா பார்த்தது வெள்ள நிவாரண நிதி கொடுத்த போதும், தேர்தலுக்கு முந்தைய நாள் பைசா கொடுத்த போது தானே. இப்போ என்னவா இருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன்.


சரி, திமுக நிர்வாகியிடம் கேப்போம். என்ன எல்லாரும் ரேஷன் கார்டுடன் நிக்குறாங்கன்னு கேட்டேன்.


"கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செஞ்சிட்டு இருக்காங்க...அதாங்க" என்றார் திமுக கட்சி நிர்வாகி.


"என்ன திட்டம், அதுக்கு நான் என்ன செய்யணும்" நு கேட்டேன்.

"அதாவது, இதயம், கர்பப்பை, சிறுநீரகம் கோளாறுன்னால நடக்குற ஆபரேஷன் செலவு, கேன்ஸ்ர் போன்ற நோய் வந்துச்சுன்னா அதுக்கான ம்ருத்துவசிகிச்சைக்காக, எங்கள் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, ரூ 1 லட்சம் ரூபாய் வரைக்கும் காப்பீடு தர்றாங்க...இது தான் உயிர் காக்கும், உயர்சிகிச்சைக்காக கலைஞரின் காப்பீட்டுத் திட்டம். நீங்க போய் உங்க ரேஷன் கார்டு எடுத்துட்டு வாங்க...அதுல இருக்க நபர்களை கூட்டிட்டு வாங்க....இங்க பதிவு செய்த பிறகு, அதோ அந்த பள்ளிக்கூடத்துல போய் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க...அவ்ளோ தான்....சீக்கிரம் போய் கூட்டிட்டு வாங்க சார்....", என்றார் அவர்.


தங்கமணிக்கு உடனே ஒரு போன். ஏன்மா, உடனே நீயும், பையனும் ரெடி ஆவுங்க....இன்சூரன்ஸ் திட்டத்துக்காக போட்டோ எடுக்கறாங்களாம். கொஞ்சம் போயிட்டு வந்துறுவோம் என்றேன். அவசர அவசரமா கிளம்பி வந்தோம். விண்ணப்பம் வாங்குற இடத்துலயும் சரி, போட்டோ எடுக்குற வரிசையிலும் சரி, மிக நீண்ட வரிசை. நம்ம தான் பயங்கரமா ப்ளான் போடுவோமே... "தங்கமணி, நீ அந்த ஸ்கூல்ல போய் போட்டோ எடுக்குற வரிசையில போய் நில்லு....நான் விண்ணப்பம் பதிவு பண்ணுற வரிசையில போய் நிக்குறேன்...கரெக்டா இருக்கும்" என்றேன்.


வெகுநேரக் காத்திருத்தலுக்கு பிறகு, நான் பதிவு செய்யும் முறை வந்தது. ரேஷன் கார்டை கொடுத்தேன். வெள்ளை கார்டு. அப்படியே ஒரு லுக் விட்டுட்டு, "என்ன வேலை செய்றீங்க", என்றார் அங்கிருந்து ஒரு பெண் அலுவலர்.

"சாப்ட்வேர்ல இருக்கேங்க", என்றேன்

"எவ்ளோ சம்பளம் வாங்குவீங்க...." என்றார் அலுவலர்.

என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்..

"இங்க பாருங்க சார்...தங்களுடைய உடம்பை சரியா பாத்துக்கக் கூட வசதியில்லாத, ரொம்ப ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்றவங்க போன்றவர்களுக்கு அரசாங்கம் கொடுக்குற காப்பீட்டுத் திட்டம் தான் இது. உங்களுக்கு எல்லாம் நீங்க வேலை பாக்குற கம்பெனியிலேயே கொடுத்திருப்பாங்க....ஆனா இவங்களுக்கு அதெல்லாம் கிடையாதுங்களே.... வருட வருமானம் ரூ 72,000 த்துக்கும் கம்மியா இருக்கவங்களுக்குத் தான் இந்த திட்டம். உங்களுக்கு எல்லாம் இந்த திட்டம் இல்லைங்க..." என சொல்லி முடித்தார் அந்த அலுவலர்.


அட எல்லா விவரத்தையும் சொன்ன அந்த கரைவேட்டிக்காரர், இந்த மேட்டர சொல்லாம விட்டுட்டாரேன்னு நினைச்சேன்.


கைப்பேசி அலறியது, மறுமுனையில் தங்கமணி "ஏங்க....சீக்கிரம் வாங்க....அடுத்து நம்ம தான் போட்டோ எடுக்கணும்" என்றார். "இல்லைம்மா...நமக்கெல்லாம் கிடையாதாம்மா.." என்றேன். "இது முதலிலேயே தெரியாதா? உங்களை எல்லாம் என்னா தான் சொல்றதுன்னே தெரியல" என்று புலம்பல்களை கேட்டுக் கொண்டே கிளம்பினேன்.


இதுல என்ன மேட்டர்னா. ஒபாமாவின் ஹெல்த் கேர் பில் க்கு இன்னும் முழு ஒப்புதலே கிடைக்காத நிலையில், நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்பது சந்தோஷத்தைத் தருகிறது.


என்ன தான் கும்பல் கூடி பதிவுகளில் கலைஞரை விமர்சித்தாலும், மக்களின் வாழ்வில், எதிர்பாராத விதமான,தவிர்க்க முடியாத செலவான மருத்துவச் செலவிற்கு காப்பீடு வழங்கும் கலைஞர் அரசுக்கு நிச்சயம் ஒரு Very Good சொல்லியே ஆக வேண்டும்.

Saturday, October 3, 2009

பெண்களின் சுகமான திருமண வாழ்க்கைக்கு சில யோசனைகள் !

திருமண வாழ்க்கை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு இருப்பது சகஜம். ஆனால், திருமணம் முடிஞ்ச ஒன்றிரண்டு மாதங்களிலேயே, "அவர் நம்ம நினைச்ச மாதிரி இல்லயே..." என்று நினைக்கத் தோன்றுவது மிக இயல்பு. இது ரொம்ப பொதுவான மேட்டர். இதுல காதல் திருமணங்களும் விதி விலக்கல்ல. காதலில், காதலர்கள் நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்துவர், மற்றவரை கவருவதற்காக. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு உண்மைக் குணம் வெளியில் வரும். அந்த உண்மைக் குணம், பத்து வருஷ உண்மைக் காதலிலும் வெளிவந்திருக்காது. என்னைப் பொருத்தவரை ஒருவரை ஒருவர் மனதார புரிந்து கொண்டு தான் காதலிக்கிறோம் என்பதே ஒரு பொய்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்தால், இவை எல்லாவற்றையும் தகர்த்து, நல்ல அமைதியான, சுகமான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்த காலத்து இந்தியப் பெண்களுக்கு, ஏதோ நமக்கு தெரிஞ்ச யோசனைகள் இங்கே !

1. கல்யாணம் முடிந்து புகுந்த வீடு போகும் போது, புது இடம், எல்லாமே புது உறவுகள். கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும். சாதாரணமா அன்பா பேசுறாங்களா, திட்றாங்களா, கிண்டல் பண்றாங்களான்னு புரியவே கொஞ்ச நாள் ஆகும். நிலைமை இப்படி இருக்க, நீங்க அவங்கள நல்லா புரிஞ்சுக்குற வரைக்கும், அனைவரிடமும் சிரித்த முகத்துடன்,கலகலன்னு,அன்பா பேசுவது தான் முதல் படி. இதை பார்த்ததும், உங்க ஆளு உச்சி குளிர்ந்து, அன்பு மழையைப் பொழிவார்.

புகுந்த வீடு செல்வதும், முதல் நாள் கல்லூரிக்கும் செல்வதும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான். சீனியர்சின் ரேக்கிங்க் இருக்கும், கிண்டல் இருக்கும், நான் தான் பெரிய ஆள் ந்னு நிறைய பேரு காமிச்சிக்க முயற்சி செய்வாங்க. எல்லார் கிட்டயும் சரிங்க சார், செய்றேன் சார்ன்னு சொல்றதில்லை? அதே மாதிரி. ஆனா போகப் போக, அப்படி ரேக்கிங்க் செய்தவர்களே நமக்கு உதவும் சிறந்த நண்பர்களாக மாறுவர். அதே போலத் தான் புகுந்த வீடும்.

இல்லை. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி, புகுந்த வீட்டில் கால் எடுத்து வச்ச உடனே, ஒரு கை பாத்துடுவோம்னு களத்தில் இறங்குவது என்பது...

கிரிக்கெட்டில், Opening Batsman, அவர் முதல் முறையாக விளையாடும் கிரவுண்டில், பிட்ச் ரிப்போர்ட் கூட பாக்காம, Helmet,Guard என எந்த கவசமும் அணியாமல், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, Brett Leeயின் முதல் பந்தை சிக்சர் அடிக்க முய்ற்சி செய்ற மாதிரி, ரொம்ப ஆபத்தா தான் முடியும்..

2. கணவர் செய்கிற, ஒண்ணுத்துக்கும் உதவாத வேலையா இருந்தாலும், அப்ப, அப்ப சின்ன சின்ன பாராட்டுதல்கள் (appreciation) சொல்றது நிறைய சமயங்களில் நல்லா வொர்க் அவுட் ஆகும். இதுல ஒண்ணும் இமேஜ் டேமேஜ் ஆகப் போறதில்லையே : )

பொதுவாகவே, பெண்களுக்கு எப்படி அழகையும் வயதையும் புகழ்வது பிடிக்குமோ, அதே போல ஆண்களுக்கு அவர் செய்யும் வேலைகளை பாராட்டுவதைப் பெரிதும் ரசிப்பர்.

உதாரணத்துக்கு, என்னங்க, நேத்து நீங்க வாங்கிட்டு வந்த தக்காளி அவ்ளோ சுப்பரா இருந்துச்சுங்க...எங்க வாங்கிட்டு வந்தீங்க..... அப்படின்னு சொல்லலாம்.

இதுக்கு பெங்களூர் தக்காளி எப்படி இருக்கும், நாட்டுத் தக்காளி எப்படி இருக்கும்னே தெரியாது...அதுமட்டுமல்ல, இதை எப்படியும் அவர் பொறுக்கி போட்டு வாங்கி வந்திருக்கமாட்டார், கடைக்காரரே எடுத்துக் கொடுத்திருப்பார் என்று நன்றாக தெரிந்தாலும், இப்படி சொல்றதால, அடுத்த முறை கடைக்கு போகச் சொன்னா சந்தோஷமா ஓடி ஓடி போவார் பாருங்க : )

3. இரு வீட்டாரிடமும் ஒரே மாதிரியான மரியாதையும்,அன்பையும் வெளிப்படுத்துறது ரொம்ப முக்கியம். இதை செஞ்சாலே பல பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.

மனைவி :ஏங்க, இன்னைக்கு மதியம், எங்க பெரியப்பா பையன் வந்திருந்தாருங்க... ஆஸ்திரேலியாவில் இருந்து ஹாரி பாட்டர் டிவிடி வாங்கிட்டு வந்தாருங்க...
கணவன் :அப்படியா...சரி வேற யாரு வந்தாங்க...
மனைவி : ஹ்ம்ம்...வேற யாரு...உங்க அக்கா தான்...சரவணா ஸ்டோர்ஸ்ல இருந்து ஒரு ஓட்டை சோனி டிவிடி ப்ளேயர் வாங்கிட்டு வந்தாங்க...

இந்த மாதிரி விஷயங்கள் நம்ம ஆளை ரொம்ப கடுப்பேத்துற மேட்டர். நம்ம ஆளு,அப்ப, அமைதியா தலையை ஆட்டிப்பார். ஆனா, இன்னொரு சான்ஸ் வரும் பாருங்க...

மனைவி : ஏங்க இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்குங்க...?
கணவன் : உனக்கு ரொம்ப நல்லா இருக்கு மா...
மனைவி : எங்க அம்மா எடுத்து கொடுத்ததுங்க...
கணவன் : நெனச்சேன்...ரெங்கநாதன் தெரு பிளாட்பார்ம்ல விற்கிற சுரிதார் பிட்டை, அந்த தெரு சந்துல இருக்க டைலர் கிட்ட கொடுத்து ஒரு மணி நேரத்துல தச்சு வாங்கிட்டு வந்த மாதிரியே இருந்தப்பவே நினைச்சேன்...

இப்படித் தான் நம்மாளு கிட்ட இருந்து பதில் வரும். இதை எல்லாம், இருவீட்டாரிடமும ஒரே மாதிரி நடந்துகிட்டா வராது. உள்ளுக்குள்ள யாரு வீட்டுக்கு வேணும்னா சப்போர்ட் பண்ணிக்கோங்க...வெளியில எஃஸ்போஸ் பண்ணாதீங்க...

4. நம்மாளு அலுவலகத்திலிருந்து எப்படி வர்றார்னு, அவருடைய Moodஐ புரிஞ்சுக்கோங்க. முகம் லைட்டா நம்ம மூஞ்சூர் மாதிரி இருந்துச்சுன்னா...அல்ர்ட் ஆயிடுங்க. மாமா வொர்க் டென்ஷன்ல இருக்கார். மெதுவா விசாரிச்சுப் பாருங்க. பெரிய ரெஸ்பான்ஸ் இல்லைன்னா அவரை அப்படியே விட்டுறுங்க. அரை மணி நேரத்துல தானா நார்மல் நிலைமைக்கு திரும்பி வந்துருவார். நம்மல கண்டுக்கவே இல்லைன்னு, ஒரு மூளைல மூஞ்சைச் தூக்கிக் கொண்டு உட்கார்ந்து, இன்னொரு மூஞ்சூராக மாறுவதை தவிர்க்கவும் : ) .

பொதுவாகவே பிரச்சினைன்னு வந்தா, பெண்களுக்கு அதைப் பற்றி பேசுவதில் தான் திருப்தி இருக்கும். ஆனால், ஆண்களுக்கு அந்தப் பிரச்சினைகளை யாரிடமும் சொல்லாமல் தானே சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பிரச்சினையில் இருந்து வெளிவர தன்னை ஒரு குகையில் தனியாக விட்டுவிடுவதையே ஆண்கள் விரும்புவர்.(Men are from Mars, Women are From Venus - John Gray என்கிற புத்தகத்திலிருந்து சுட்ட கருத்து.

5. திருமண வாழ்க்கையில சின்ன சின்ன சண்டை வருவது ரொம்ப சாதாரணம். அந்தச் சண்டையை யார் ஆரம்பித்தாலும், அதில் உணர்ச்சிவசப்பட்டு, வாதத்தை வளர்த்து பெரும் சண்டையாக மாற்றி விடுவது பெரும்பாலும் பெண்கள் தான். அதனால, காதலன் சங்கர் ஸ்டையில்ல, கோபமோ சோகமோ துக்கமோ ஒரு 10 நிமிஷம் தள்ளி போடுங்க மேடம். அப்புறம் 15 ஆவது நிமிடத்துல சண்டை ஆட்டோமேட்டிக்கா போயிடும். இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலா ஹேண்டில் பண்ணா, ஊடலாகவே மாறிடும் வாய்ப்புகள் அதிகம்.
மனைவி : உன்னைப் போல் ஒருவன் ரொம்ப நல்ல படம்.
கணவன் : யார் சொன்னது அது ஒரு மொக்கை படம்.
மனைவி : கமல், எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு வேணும்னே சொல்றீங்களா?
கணவன் : கமல், அதுல ஒரு பாசிச கருத்தை சொல்லி இருக்கார்...அது மோசமான படம்...
மனைவி: இதையே தான் கொஞ்சம் வேற விதமா இந்தியன்ல சொல்லி இருக்காங்க, அப்புறம் அன்னியன்ல சொல்லி இருக்காங்க...அப்போ எல்லாம் , பூச்சி போறது கூட தெரியாம,ஆ ன்னு வாயை திறந்துட்டுப் பார்த்தீங்க...ஹீரோயின் இடுப்பை காட்டிட்டு ஆட்டம் போடலைன்னா உங்களுக்கெல்லாம் எந்தப் படமும் பிடிக்காதே....

ஸ்டாப்.....10 நிமிஷம் பிரேக் கொடுங்க...(Have a Kit kat..)

மனைவி : சரி, அதை விடுங்க....வாங்க நம்ம கோலங்கள் சீரியல் பார்க்கலாம். அதுல தோழரை, தில்லா அடித்துக் கொண்டிருக்கிறார்..
கணவன் : அடடே...ஆமா..மா...இந்த சமயத்துல அந்த தொல்காப்பியன் எங்க போய் தொலைஞ்சான்...
: )

6. SEX.
சாதாரணமாவே, நம்மாளு ஒரு கல்லுளி மங்கன் மாதிரி. அன்பு, பாசம், காதல் எல்லாம் டின் டின்னா டப்பால இருந்தும்,அதை வெளிப்படுத்தவே மாட்டார். ஆனா, இந்த சமயத்துல, காதல் வசனங்களை அள்ளி வீசுவார். உடல்கள் இணைவது மட்டுமல்ல, அந்த சமயத்தில் மனங்களும் இணையும் அதுவே தாம்பத்யம். கணவன் மனைவியரிடம் தோன்றும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் பாம்பன் பாலமாக இருப்பது இந்த மேட்டர் தான்.
(டேய்...டேய்...போதும்டா...நிறுத்து...)

7. அன்பு. இந்த விஷயத்தில் பெண்களை அடிச்சிக்க ஆள் இல்லை. அதனால இதுல எந்த யோசனையும் கிடையாது. நம்மாளு அன்பை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அன்பை வெளிப்படியாக பெருவதில் பெரு மகிழ்ச்சி அடைவார். அதைக் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் : )

8. மருமகள், மாமியார் - சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு. இதைப் பெரிதுபடுத்தி, நம்ம ஜெண்டில்மேன் கிட்ட போய் சொன்னீங்கன்னா, ஒரு ரெஸ்பான்சும் பண்ண மாட்டார். எவ்வளவோ ப்ரூவ் பண்ண நினைச்சாலும், அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார். அட நம்ம அம்மாவை வில்லியாக சித்தரிக்க முயற்சி செய்றாளே, என உங்களைத் தான் வில்லியாக நினைப்பார். ஏன்னா, எப்பேற்பட்ட, தில்லாலங்கடியா இருந்தாலும், இந்த விஷயத்துல பெரும்பாலான ஆண்கள் ஒரே மாதிரி தான். அப்படி ஒரு நினைப்பை வளர விட்டால், உங்கள் மேல் செலுத்தும் அன்பு அரை குறையான அன்பாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, பெண் வீட்டாரிடம் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதும் இதில் இருக்கிறது.


இதுல மட்டும் சீரியசா இல்லைன்னா, நம்ம ஜெண்டில்மேன் WWF ல நடக்கும் குத்துச் சண்டை வீரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொள்ளும் Referee வேலையையே, வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டி வரும். அன்பிற்கு நேரம் இருக்காது : )

இதெல்லாம் கொஞ்சம் adjust பண்ணி, ஒரு இரண்டு வருடம் பின்பற்றினால், அப்புறம் என்ன எல்லாமே சூப்பர் தான். ஜெண்டில்மேன் மட்டும் இல்ல, அந்த மொத்த குடும்பமே உங்களை மகாராணியா தூக்கி வைத்து கொண்டாடும். பிறகென்ன, கணவனும்,மனைவியும், டிவி விளம்பரத்தில் வரும் சன்ரைஸ் ஜோடி மாதிரி ஒருவொருவருக்கொருவர் அன்பாகவும்,சந்தோஷமாகவும் காபி குடிச்சே காலத்தை ஓட்டலாம் : )

கைதுறப்பு: நகைச்சுவைக்காக எழுதியவையே, யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல.

LinkWithin

Blog Widget by LinkWithin