Tuesday, September 29, 2009

குடி போதையில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?


குடிப்பதே தவறு : ) அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது மகா மோசமான தவறு என்பதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். இது உண்மையாக நடந்த சம்பவம்.

இரவு சுமார் 9:00 மணிக்கு, கைப்பேசி அலறியது. எடுத்து பேசினேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் அழுகுரல், "ஏன் பா, ரமேஷ்க்கு Accident ஆயிடுச்சு பா....அவன் போன காரை ஒரு லாரி மோதிடுச்சாம் பா...தலையில அடியாம், ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டு இருக்காங்களாம்.....போலீஸ் கேஸ் அது இதுன்னு சொல்றாங்கப்பா...எங்களுக்கு ஒண்ணுமே புரியல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீயா பா..". இதோ உடனே வர்றேங்க...நீங்க பயப்படாதீங்க..தைரியமா இருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். விபத்து நடந்த இடம் சென்னையில் இருந்து 3 மணிநேரப் பயணம். நானும் எனது நண்பரும் காரில் புறப்பட்டோம்.

அதிகாலை சுமார் 1:30 மணிக்கு விபத்து நடந்த பகுதிக்கு வந்தடைந்தோம். புத்தம் புது கார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் ரமேஷ்,அந்த காரை எடுத்தார். நம்பர் இடப்பட்டிருந்தது, ஆனால் RC புத்தகம் வரவில்லை. காரின் வலது புறம் முற்றிலும் நொறுங்கி இருந்தது. லாரி இடித்த வேகத்தில், கார் கிட்டத் தட்ட 160 டிகிரி சுழன்று சாலையில் இருந்தது. அங்கு நடந்த சம்பங்களைப் பார்த்த போது, தவறு நம்ம ரமேஷ் மீது தான் என்பது தெளிவாக தெரிந்தது.

பிறகு, ரமேஷின் உடல்நிலை விசாரித்தோம். "தலையில் லேசாக அடி மற்றபடி ஒன்றுமில்லை. ஆனால்,Drink and Drive கேஸ் புக் பண்ணி, FIR போட்டாச்சாம். லாரி ஸ்டேஷன்ல இருக்காம். காரையும் tow பண்ணி ஸ்டேஷனுக்கு தான் கொண்டு போகணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க போய் கொஞ்சம் ஸ்டேஷன்ல பார்த்து பேசுறீங்களா...அவரை கைது பண்ணி ஜெயில்ல வச்சுடப் போறாங்க..கொஞ்சம் பார்த்துக்கோங்க..." என்றார் ரமேஷின் மனைவி.

ஓகே. சரியான ஆளு கிட்ட தான் கேட்டு இருக்கீங்க. நம்ம்லே இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் ஏறினது கிடையாது. சட்டமும் தெரியாது. கிழிஞ்சது கிருஷணகிரின்னு நினைச்சுகிட்டேன். சரி, முதல்ல காரை ஸ்டஷ்னுக்கு எடுத்துட்டு போகணும். Tow செய்கிற வண்டியை வரவழைத்தோம். சுமார் ஒரு கிமீ தூரத்துல இருக்க ஸ்டேஷன்ல விட 3500 ரூ. அந்த நேரத்துல விலை பேச முடியல. ஆளும் கிடைக்கல. மெதுவா ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். அங்க ஆம்புலன்சுக்கு 1500 ரூபாய்.

வேற ஏதோ பிரச்சினைகளில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. பலரும் கை கால்களில் பேண்டேஜ்களுடன் போலீசாருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். மெதுவா உள்ளே போனோம்.

"என்னப்பா..என்னா" என்றார் அங்கிருந்த ஏட்டு.

"சார்...இந்த கார் Accident சம்பந்தமா..." என்று இழுத்தேன்.

"ஓஹோ...அந்த Drink and Drive கேசா? நீங்க யார்..என்ன பண்றீங்க.." என்றார்.

"அவரோட சொந்தக்காரர் சார்...சென்னையில கம்புயூட்டர்ல வேலை செய்றேன்.." என்றேன்.

"ஏன்யா...குடிங்க வேணாம்னு சொல்லல....குடிச்சுட்டு எதுக்குய்யா வண்டியை ஓட்டுறீங்க...லாரிக்காரன் பிரேக் பிடிச்சி இருக்கார்....அவன் தான்யா மப்புல வந்து இடிச்சு இருக்கான்...சொல்லுங்க...என்ன பண்ணனும்.." என்றார்.

"சார்..எப்படியாச்சும் கேஸ் போடாம விட்டுற்ங்க சார்...லாரிக்காரரோட சமாதானம் பேசிக்கலாம்" என்றேன்.

"ஆமாம்யா...இப்போ சொல்லுங்க இதை....அப்பவே சொல்லி இருந்தா பேசி முடிச்சு இருக்கலாம்..யாருமே சொல்லலியே...சரக்குல இருந்த பார்ட்டி கூட சொல்லலியே...இப்போ FIR எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணி ஆச்சு...அது முடியாது...கேஸ் போட்டா தான்யா வண்டிக்கு இன்சுயூரன்ஸ் கொடுப்பான்...உங்களுக்கு நல்லது அது தான்" என்றார்.

(எம்டன் மகன்ல வடிவேலு சொல்ற மாதிரி...முன்ன பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க...சரியாப் போச்சே...அப்பா...நீ எங்க இருக்க அப்பா...)

"சார்...Drink & Driveனு கேஸ் போடாம விபத்துன்னு மாத்திடுங்களேன்" என்றேன்."எல்லாமே ரொம்ப லேட்டாவே சொல்றீங்களே...படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க...இதை முதல்லேயே சொல்லி இருந்தீங்கன்னா...அவரை GHக்கு கொண்டு போகாம தனியார் ம்ருத்துவமனைக்கு கொண்டு போய் இருப்போம். இப்போ டாக்டர் ரிபோர்ட்ல , ரமேஷ் குடிச்சுட்டு தான் வண்டி ஓட்டினார்னு எழுதிட்டாரே..இனிமே Hit & Runனு மாற்றம் செய்ய முடியாது " என்றார்.

"சரிங்க சார்...இப்போ என்ன தான் வழி...நாங்க என்ன பண்ணனும்... அவ்வளவா...இதை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது சார்...நீங்களே சொல்லுங்களேன்..." என்றேன்.

"நாளைக்கு ரமேஷை எல்லா ஒரிஜினல் டாகுமெண்டையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்கள்,கைது செஞ்சி, ஸ்டேஷன் பெயிலில் உடனே விட்டுறுவோம். எப்பொழுது ஆஜராகச் சொல்றோமோ...அப்போ வந்து கோர்ட்ல 750 ரூ ஃபைன் கட்டிருங்க..அவ்ளோதான்...காரைப் பொறுத்த வரை, ஆர் டி ஒ க்ளியரன்ஸ் கொடுக்கணும். ஆர் டி ஓ பொதுவா இங்க வரமாட்டாங்க....கொஞ்சம் கவனிச்சீங்கன்னா...இங்க வருவாங்க...அவங்க க்ளியரன்ஸ் கொடுத்த உடனே, எங்க கிட்ட FIR காபி வாங்கிட்டு இன்சுயூரன்ஸ் க்ளைம் க்கு போங்க....அதுக்கு முன்னாடி, இன்சுயூரன்ஸ் கம்பெனிக்காரங்கள வந்து வண்டியை ஒரு போட்டோ எடுத்துக்க சொல்லுங்க...அவ்ளோதான்..." என்றார்.

(ஆஹா....இப்பவே கண்ண கட்டுதே....டேய் ரமேஷ்....கம்முன்னு குவார்ட்டரை அடிச்சுட்டு குப்புற படுத்திருந்தா...இவ்ளோ கஷ்டம் வந்திருக்காதே.....)

"அவ்ளோ தானா சார்...ரொம்ப தேங்க்ஸ் சார்..." என எழுந்தேன்.

"அப்புறம், அதோ இருக்கார் பாருங்க கான்ஸ்டபிள், அவர் கிட்ட போங்க...Formalities எல்லாம் சொல்லுவார்...முடிச்சிட்டு போங்க..." என்றார்.

(ஹ்ம்ம்....லஞ்சத்துக்குப் பேரு Formalities ங்களா ஐயா?...ஓகே... )

2500 ரூபாய் கொடுத்தேன்.

"சரிப்பா....எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க..." என சொல்லி அனுப்பி வைத்தார். மணி காலை 5:30. மறுநாள் ஆர்.டி.ஓ 2000 ரூபாய், காரை சர்வீஸ் செண்டர்க்கு விட 2500 ரூபாய் என காந்தி பறந்துகொண்டிருந்தார். மொத்தம் கிட்ட தட்ட 12000 ரூபாய் செலவு. பண விரயத்தை விடுங்க, ரமேஷ்க்கு ஒண்ணும் அடி படாம இருக்கே...அதுவே ரொம்ப நல்லதுன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்.

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா...

1. இவ்வளவு கஷ்டங்களுக்கும், பண விரயத்துக்கும், அலைச்சலுக்கும் வொர்த்தா குடிபோதையில் வண்டி ஓட்டுவது.
(12000 ரூபாய், புது கார் நொறுங்கி கிடக்குது,லேசா அடி வேற பட்டு இருக்கு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்..ஃபைன்...அப்பப்பா...நிச்சயமா...அவ்ளோ வொர்த் கிடையாது....)

2. நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா...நம்மை விட, நம் டாகுமெண்ட்ஸ் தான் பேசும். அதை பத்திரப் படுத்தி பாதுகாக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஒரிஜினல் டாகுமெண்ட் இல்லைன்னா....பல செக்ஷன்ல கேஸ் போட்றுவாங்க. பெரிய வெயிட் கையா இருந்தா சமாளிக்கலாம்...நம்மல மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்.

(தங்கமணி, என் டிகிரி சர்டிபிகேட் எந்த பரணை மேல இருக்கு...கொஞ்சம் தேடிக் கொடுக்குறீயா...)

3. சரக்கு அடிச்சீங்கன்னா...வண்டி எடுக்காதீங்கோ.....ஏன்னா, நம்மாளுடைய Split Personality, மது உள்ள போன பிறகு தான் தெரியவரும்.

(வடிவேலு பாணியில், ஆமா....அது வேற வாயி....இது நார்ற வாயி...)

4. அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?

(அட நன்னாரிப் பயலே இதெல்லாம் ஒரு வாதமா? )

இவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்..."டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்..."

Friday, September 18, 2009

பிரபலங்களின் வேண்டுதல்கள் !


பொதுவாகவே கோவிலுக்கு போயிட்டு வரும்போது மனசு ரொம்ப நிம்மதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். இதுக்கு ஒரு முக்கிய காரணம், நம்ம மனசுல இருக்குறது அப்படியே இன்னொருத்தர் கிட்ட சொன்ன திருப்தி கிடைக்குறது தான் இந்த நிம்மதிக்கு முக்கிய காரணமாக தெரியுது.

சரி. இந்த மாதிரி நம்முடைய பிரபலங்கள் இப்ப இருக்க நிலைமையில தங்கள் மனசுல இருக்குறத கடவுள் கிட்ட சொல்ற மாதிரி இருந்தா...என்ன சொல்லுவாங்க...என்ன கேப்பாங்கன்னு ஒரு கற்பனை தான், சீரியசா எடுத்துக்காதீங்க : )

சோனியா காந்தி : கடவுள்ஜி, எப்படியாவது என் மகன் ராகுலை பிரதமர் ஆக்கிடுங்கஜி. இப்போ, லுதியானாவிலிருந்து டில்லிக்கு ரயிலில் அனுப்பி வச்சது போல, தில்லியிலிருந்து திருப்பதிக்கு நடை பயணம் அனுப்பி, மொட்டை அடிச்சு காது குத்துறேன் பெருமாள் ஜி...!


கருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!

(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)


ஜெயலலிதா :
என்னுடைய பிரதமர் ஆசையை கூட விட்டுடுறேன்....ஆனா, எப்படியாவது இந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செஞ்சுடு.

(கடவுள்: என்னம்மா....என்னிடமும் மைனாரிட்டி திமுக அரசு அடைமொழி தேவையாம்மா?)

விஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் ! இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...!


கி.வீரமணி : முருகா நான் திருந்திட்டேன் முருகா...கடவுள் இல்லைன்னு கூட்டத்துல பேசுறத பார்த்து தப்பா நினைச்சுக்காத முருகா....அதெல்லாம் சும்ம லுலுலாயிக்கு....திராவிட கழகத்தின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன, ஆனால் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே.....கல்வியறிவு படைத்தவரிடம் நம் கொள்கையை விற்று காசாக்க முடியவில்லையே....ஆகையால், சாமானிய மக்களுக்கு கல்வி அறிவை கொஞ்சம் பொறுமையாகவே கொடு, பதவியையும் பணத்தையும் மட்டும் எங்களுக்கு உடனே அள்ளிக் கொடு !

(கடவுள்: உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு. ரத்தம் சூடா இருக்க வரைக்கும் ஆட வேண்டியது, அதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் ஓடி வர வேண்டியது. சரி வாங்க...வந்து பஞ்சாமிர்தம் சாப்பிடுங்க..! )

விஜய டி.ஆர் : வேலாயுதா, லட்சிய திமுக ஆரம்பிச்சு கிட்ட தட்ட 5 வருஷம் ஆகப் போகுது, ஆனா, போன தேர்தல்ல என் பையன் கூட என் கட்சிக்கு ஓட்டு போடல. என் குடும்பத்துல இருக்கவங்க மட்டுமாவது எனக்கு ஓட்டு போட வச்சுடு. டண்டனக்கா...டனக்கனக்கா....

அழகிரி : எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...

மன்மோகன் சிங் : My God, People of India, Love you . Ho, GOD, Inflation, GDP, Consumer Price Index, Fiscal deficit, 123 Agreement..........



( கடவுள்: ஹலோ மன்மோகன், ஜனங்களுக்கு புரியுற மாதிரி பேசலைன்னா கூட பரவாயில்லை....எனக்கு புரியுற மாதிரியாவது பேசுறீங்களா?)

LinkWithin

Blog Widget by LinkWithin