Thursday, February 4, 2010

கிராமத்துப் பாரிஜாதமா ?? நகரத்துப் பிரதிக்க்ஷா வா?

கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? இதுல, எந்தப் பெண் உனக்கு மனைவியாக வரணும்னு ஆசைப்படுவ ? என்று ஆண்களிடம்(தமிழக) ஒரு கேள்வி கேட்டால், பெரும்பாலானவர்களிடமிருந்து, கிராமத்துப் பொண்ணு தான் என்று சடார்னு ஆணித்தரமா பதில் வரும்.


அது என்னடா பொண்ணுல, கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு அப்படிங்குற வித்யாசம். இதுல நம்மாளுக்கு ஏன் கிராமத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு பிரியம், நகரத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு என கொஞ்சம் அலசுவோம்.


கடைசியில் போட வேண்டிய டிஸ்கிய பதிவிலேயே சொல்லிடுறேன். பொதுவாக ஆண்களின் எண்ணத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம். எல்லா ஆண்களும் இப்படித்தான்னு நான் சொல்ல வரலைங்க. எல்லா கிராமத்துப் பொண்ணும் இப்படித்தான், எல்லா நகரத்துப் பொண்ணும் இப்படித்தான்னு சொல்ல வரல.
ஆலமரம், நாட்டாமை, சொம்பு எல்லாம் இங்க இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் : ).


சரி மேட்டர்க்கு வருவோம்.


பொதுவாகவே ஒரு மெண்டாலிட்டி. கிராமத்துப் பொண்ணுன்னா(பாரிஜாதம்), அடக்க ஒடுக்கமா இருப்பாள், குடும்பத்து நிலைமையை அனுசரிச்சு நடந்துப்பாள், சொந்த பந்தங்களிடம் நன்றாக நடந்துப்பாள், உள்குத்து வெளிக்குத்து தெரியாத வெகுளியா இருப்பாள். மொத்தத்தில எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டாள். சந்தோஷமா குடும்பத்தை ஓட்டலாம் என்பது நினைப்பு.


நகரத்துப் பெண் (பிரதிக்க்ஷா), ஈகோ புடிச்ச பொண்ணு, ரூல்ஸ் பேசுபவள்.குடும்பத்தை அனுசரிக்கத் தெரியாதவள், உள்குத்துக்களின் ராணி, கூட்டுக் குடும்பத்தினை உடைக்க வந்த உளவாளி. கிட்ட தட்ட, ஆப்பைத் தேடி தானே உட்கார்ந்து கொள்வது மாதிரி நினைக்குறாங்க.


இந்த மாதிரி ஒரு definition கொண்ட பெண் தான் கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என ஸ்ட்ராங்கா மண்டையில ஏற்றிவிட்டிருக்காங்க. சும்மா ஒரு அடையாளத்துக்குத் தான் இந்த கிராமத்துப் பெண்,நகரத்துப் பெண் என்ற பெயர்களெல்லாம். எல்லா ஊர்களிலும் இவ்விருவரும் இருக்காங்க.


கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு சாதக-பாதகங்கள் என்ன ? ஏன் நம்மாளு கிராமத்துப் பொண்ண prefer பண்றார்னு பார்க்கலாம்.


ஏன் மா, இன்னைக்கு சனிக்கிழமை...வீக் எண்ட்... பீச் போகலாமா...?

பாரிஜாதம் : ஹ்ம்ம் போகலாங்க...!
(பட்ஜெட் பத்மனாபி : ) )
பிரதிக்க்ஷா :பீச் வேணாம்ங்க....முதல்ல கிளம்பி, பிட்சா கார்னர் போயிட்டு ஒரு Combo Pack முடிச்சிட்டு...அப்புறம் மாயாஜால் போயிட்டு சினிமா பார்த்துட்டு, அப்படியே வரும்போது அஞ்சப்பர்ல டின்னர் முடிச்சுட்டு வந்துடுலாம்ங்க...
(ராயல் சீமா ராஜலக்ஷ்மி : ) )

என்ன மா, நேத்து வச்ச, அதே குழம்பை ஃப்ரிட்ஜ்ல வச்சி கொடுக்குற, வேற செய்யக் கூடாதா ?

பாரிஜாதம் : கடைக்குப் போகணும். வீட்ல ஒண்ணுமே இல்லை. உங்க கிட்ட நேத்தே சொன்னேன் நீங்களும் மறந்துட்டீங்க.
பிரதிக்க்ஷா :ஏன், இதுக்கு முன்னாடி நேத்து வச்ச குழம்பு, நீங்க சாப்பிட்டதே இல்லையா ? அவ்வளவு பாக்குறவர், நேத்தே, நான் கேட்டதை வாங்கிட்டு வர வேண்டியது தானே...!


எங்க அக்காவோட கல்யாண நாள் வருது. புடவை எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்....நீ வர்றீயா...

பாரிஜாதம் :நான் வர்றேங்க....உங்க அக்கா கிட்ட சிவப்பு கலர், ராமர் கலர் புடவை எல்லாம் இருக்கு, மயில் கழுத்துக் கலர்ல வஸ்திரகலா பட்டு எடுத்துக் கொடுப்போம்ங்க. போத்தீஸ் போலாம்...
பிரதிக்க்ஷா : ஹ்ம்ம்...வர்றேங்க...உங்க அக்காவுக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல போய் ஒரு அருமையான காட்டன் சேரி எடுத்துட்டு....அப்படியே அங்க இருந்து நல்லி சில்க்ஸ் வந்து, எங்க அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை எடுத்துட்டு வரலாம்ங்க...

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட, கிராமத்துப் பெண்ணின் அணுகுமுறையும், நகரத்துப் பெண்ணின் அணுகுமுறையும் பெருமளவு வித்தியாசமா இருக்குங்க. அதுல கிராமத்துப் பெண்ணின் அப்ரோச் நல்லா இருக்க மாதிரி தெரியுது.

சரி இதையெல்லாம் ஒரு புறம் யோசிச்சுப் பார்த்தாலும், நமக்குள்ள ஒரு சின்ன டவுட்...

நம்மாளு பயப்படுறாரோன்னு ஒரு சந்தேகம். இன்றும் கூட, பொதுவாகவே பெண் தேடும் போது தன்னைவிட குறைவா படிச்ச, தன்னைவிட குறைவா சம்பாதிக்குற பெண்ணைத் தான் நம்மாளு தேடுவார். இது தான் பேசிக் மாதிரி ஆயிடுச்சு. ஆக, தன்னைவிட எதிலும் உயர்வான பெண்ணை ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லையோ ?

அதுவும் இல்லாம, நம்முடைய வீட்டு சூழல் பார்த்தீங்கன்னா, நம்ம அப்பா, அம்மாவை பார்த்து வளருகிறோம். பெரும்பாலான, வீடுகளில் அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல). அம்மா அமைதியா அப்பா சொல்லை எதிர்த்துப் பேசாமல், அப்படியே நடக்கக் கூடியவராக இருப்பார். அதைப் பார்த்தே வளர்ந்த நம்மாளு, நமக்கு வரப் போகின்ற மனைவியும் கிட்ட தட்ட அதே மாதிரி வேணும்னு எதிர்ப்பார்க்குறான்னு நினைக்கத் தோணுது.

குடும்பம் நடத்துறதுல இரண்டே ஆப்ஷன்ஸ் தான். ஒண்ணு, சிதம்பர ஆட்சின்னு நாம சொல்றது. அதாவது ஆண் தான் CEO. இன்னொன்று மதுரை ஆட்சி,அதில் பெண் தான் CEO. ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்,ஒரு அதிபர் மாதிரி, ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் தான். இந்த வகையில் பார்க்கும் போது, கிராமத்துப் பெண்ணை மணந்தால், அந்தத் தலைவர் பதவி நமக்கே கிடைக்கும் என்று நம்மாளு நினைக்கிறாரோ? நம்மாளு தான் CEO என்றால், கூட்டுக்குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.

இப்படி நம்மாளு கிராமத்துப் பெண்ணைத் தேடுவதில் பல காரணங்கள் இருக்கு.

பெண் என்று பார்த்தால் அனைவரும் ஒன்று தான். எல்லோருக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான குணம் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தும் முறைகளில் தான் மாற்றமே தவிர, அடிப்படையில் இருவருமே ஒரே மாதிரி தான்!

சரி, கடைசியா ஒரே ஒரு கேள்வி, பார்த்திபன் கனவுல உங்களுக்கு புடிச்சது (பாரிஜாதம்)சினேகாவா ?
(பிரதிக்க்ஷா) சினேகாவா?

LinkWithin

Blog Widget by LinkWithin