Thursday, February 4, 2010

கிராமத்துப் பாரிஜாதமா ?? நகரத்துப் பிரதிக்க்ஷா வா?

கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? இதுல, எந்தப் பெண் உனக்கு மனைவியாக வரணும்னு ஆசைப்படுவ ? என்று ஆண்களிடம்(தமிழக) ஒரு கேள்வி கேட்டால், பெரும்பாலானவர்களிடமிருந்து, கிராமத்துப் பொண்ணு தான் என்று சடார்னு ஆணித்தரமா பதில் வரும்.


அது என்னடா பொண்ணுல, கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு அப்படிங்குற வித்யாசம். இதுல நம்மாளுக்கு ஏன் கிராமத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு பிரியம், நகரத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு என கொஞ்சம் அலசுவோம்.


கடைசியில் போட வேண்டிய டிஸ்கிய பதிவிலேயே சொல்லிடுறேன். பொதுவாக ஆண்களின் எண்ணத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம். எல்லா ஆண்களும் இப்படித்தான்னு நான் சொல்ல வரலைங்க. எல்லா கிராமத்துப் பொண்ணும் இப்படித்தான், எல்லா நகரத்துப் பொண்ணும் இப்படித்தான்னு சொல்ல வரல.
ஆலமரம், நாட்டாமை, சொம்பு எல்லாம் இங்க இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் : ).


சரி மேட்டர்க்கு வருவோம்.


பொதுவாகவே ஒரு மெண்டாலிட்டி. கிராமத்துப் பொண்ணுன்னா(பாரிஜாதம்), அடக்க ஒடுக்கமா இருப்பாள், குடும்பத்து நிலைமையை அனுசரிச்சு நடந்துப்பாள், சொந்த பந்தங்களிடம் நன்றாக நடந்துப்பாள், உள்குத்து வெளிக்குத்து தெரியாத வெகுளியா இருப்பாள். மொத்தத்தில எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டாள். சந்தோஷமா குடும்பத்தை ஓட்டலாம் என்பது நினைப்பு.


நகரத்துப் பெண் (பிரதிக்க்ஷா), ஈகோ புடிச்ச பொண்ணு, ரூல்ஸ் பேசுபவள்.குடும்பத்தை அனுசரிக்கத் தெரியாதவள், உள்குத்துக்களின் ராணி, கூட்டுக் குடும்பத்தினை உடைக்க வந்த உளவாளி. கிட்ட தட்ட, ஆப்பைத் தேடி தானே உட்கார்ந்து கொள்வது மாதிரி நினைக்குறாங்க.


இந்த மாதிரி ஒரு definition கொண்ட பெண் தான் கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என ஸ்ட்ராங்கா மண்டையில ஏற்றிவிட்டிருக்காங்க. சும்மா ஒரு அடையாளத்துக்குத் தான் இந்த கிராமத்துப் பெண்,நகரத்துப் பெண் என்ற பெயர்களெல்லாம். எல்லா ஊர்களிலும் இவ்விருவரும் இருக்காங்க.


கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு சாதக-பாதகங்கள் என்ன ? ஏன் நம்மாளு கிராமத்துப் பொண்ண prefer பண்றார்னு பார்க்கலாம்.


ஏன் மா, இன்னைக்கு சனிக்கிழமை...வீக் எண்ட்... பீச் போகலாமா...?

பாரிஜாதம் : ஹ்ம்ம் போகலாங்க...!
(பட்ஜெட் பத்மனாபி : ) )
பிரதிக்க்ஷா :பீச் வேணாம்ங்க....முதல்ல கிளம்பி, பிட்சா கார்னர் போயிட்டு ஒரு Combo Pack முடிச்சிட்டு...அப்புறம் மாயாஜால் போயிட்டு சினிமா பார்த்துட்டு, அப்படியே வரும்போது அஞ்சப்பர்ல டின்னர் முடிச்சுட்டு வந்துடுலாம்ங்க...
(ராயல் சீமா ராஜலக்ஷ்மி : ) )

என்ன மா, நேத்து வச்ச, அதே குழம்பை ஃப்ரிட்ஜ்ல வச்சி கொடுக்குற, வேற செய்யக் கூடாதா ?

பாரிஜாதம் : கடைக்குப் போகணும். வீட்ல ஒண்ணுமே இல்லை. உங்க கிட்ட நேத்தே சொன்னேன் நீங்களும் மறந்துட்டீங்க.
பிரதிக்க்ஷா :ஏன், இதுக்கு முன்னாடி நேத்து வச்ச குழம்பு, நீங்க சாப்பிட்டதே இல்லையா ? அவ்வளவு பாக்குறவர், நேத்தே, நான் கேட்டதை வாங்கிட்டு வர வேண்டியது தானே...!


எங்க அக்காவோட கல்யாண நாள் வருது. புடவை எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்....நீ வர்றீயா...

பாரிஜாதம் :நான் வர்றேங்க....உங்க அக்கா கிட்ட சிவப்பு கலர், ராமர் கலர் புடவை எல்லாம் இருக்கு, மயில் கழுத்துக் கலர்ல வஸ்திரகலா பட்டு எடுத்துக் கொடுப்போம்ங்க. போத்தீஸ் போலாம்...
பிரதிக்க்ஷா : ஹ்ம்ம்...வர்றேங்க...உங்க அக்காவுக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல போய் ஒரு அருமையான காட்டன் சேரி எடுத்துட்டு....அப்படியே அங்க இருந்து நல்லி சில்க்ஸ் வந்து, எங்க அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை எடுத்துட்டு வரலாம்ங்க...

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட, கிராமத்துப் பெண்ணின் அணுகுமுறையும், நகரத்துப் பெண்ணின் அணுகுமுறையும் பெருமளவு வித்தியாசமா இருக்குங்க. அதுல கிராமத்துப் பெண்ணின் அப்ரோச் நல்லா இருக்க மாதிரி தெரியுது.

சரி இதையெல்லாம் ஒரு புறம் யோசிச்சுப் பார்த்தாலும், நமக்குள்ள ஒரு சின்ன டவுட்...

நம்மாளு பயப்படுறாரோன்னு ஒரு சந்தேகம். இன்றும் கூட, பொதுவாகவே பெண் தேடும் போது தன்னைவிட குறைவா படிச்ச, தன்னைவிட குறைவா சம்பாதிக்குற பெண்ணைத் தான் நம்மாளு தேடுவார். இது தான் பேசிக் மாதிரி ஆயிடுச்சு. ஆக, தன்னைவிட எதிலும் உயர்வான பெண்ணை ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லையோ ?

அதுவும் இல்லாம, நம்முடைய வீட்டு சூழல் பார்த்தீங்கன்னா, நம்ம அப்பா, அம்மாவை பார்த்து வளருகிறோம். பெரும்பாலான, வீடுகளில் அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல). அம்மா அமைதியா அப்பா சொல்லை எதிர்த்துப் பேசாமல், அப்படியே நடக்கக் கூடியவராக இருப்பார். அதைப் பார்த்தே வளர்ந்த நம்மாளு, நமக்கு வரப் போகின்ற மனைவியும் கிட்ட தட்ட அதே மாதிரி வேணும்னு எதிர்ப்பார்க்குறான்னு நினைக்கத் தோணுது.

குடும்பம் நடத்துறதுல இரண்டே ஆப்ஷன்ஸ் தான். ஒண்ணு, சிதம்பர ஆட்சின்னு நாம சொல்றது. அதாவது ஆண் தான் CEO. இன்னொன்று மதுரை ஆட்சி,அதில் பெண் தான் CEO. ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்,ஒரு அதிபர் மாதிரி, ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் தான். இந்த வகையில் பார்க்கும் போது, கிராமத்துப் பெண்ணை மணந்தால், அந்தத் தலைவர் பதவி நமக்கே கிடைக்கும் என்று நம்மாளு நினைக்கிறாரோ? நம்மாளு தான் CEO என்றால், கூட்டுக்குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.

இப்படி நம்மாளு கிராமத்துப் பெண்ணைத் தேடுவதில் பல காரணங்கள் இருக்கு.

பெண் என்று பார்த்தால் அனைவரும் ஒன்று தான். எல்லோருக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான குணம் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தும் முறைகளில் தான் மாற்றமே தவிர, அடிப்படையில் இருவருமே ஒரே மாதிரி தான்!

சரி, கடைசியா ஒரே ஒரு கேள்வி, பார்த்திபன் கனவுல உங்களுக்கு புடிச்சது (பாரிஜாதம்)சினேகாவா ?
(பிரதிக்க்ஷா) சினேகாவா?

13 comments:

jothi said...

எனக்கு பிடித்தது விஜிதான். அவ அப்பாதான் செம டப்பு பார்ட்டி, பொண்ணும் அழகான படித்த அடக்கமான நாகரிக கிராமத்துப் பொண்ணு (ஹி ஹி ஆனந்தம் ஹீரோயின்),..

எப்புடி?? ஏன் நீங்க சொல்ற ஆளதான் நாங்க செலக்ட் பண்ணனுமோ??

என்னை பொறுத்தவரை பெண்ணும் ஆணும் சமம். நாம் வெளினாட்டையும் நம் நாட்டையும் கலாச்சாரத்தை ஒப்பீடு செய்ய முடியாது.நம்மிடம் சில வசதிகளும் இருக்கின்றன, இடைஞ்சள்களும் இருக்கின்றன. உண்மையில் இது ஒரு சமூக சூழ்னிலை. சமூகத்தின் எண்ணங்களும், துருப்பிடித்த கோட்பாடுகளும் மாற வேண்டும்

கபிலன் said...

" jothi said...
எனக்கு பிடித்தது விஜிதான். அவ அப்பாதான் செம டப்பு பார்ட்டி, .....(ஹி ஹி ஆனந்தம் ஹீரோயின்),.. "


இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு : )

"எப்புடி?? ஏன் நீங்க சொல்ற ஆளதான் நாங்க செலக்ட் பண்ணனுமோ??"

இரெண்டு விரல்ல எதாவது ஒண்ணு தொடுங்கன்னு கேட்டா, மூணாவது விரல்ல தொடுறீங்களே ..!

"உண்மையில் இது ஒரு சமூக சூழ்னிலை. சமூகத்தின் எண்ணங்களும், துருப்பிடித்த கோட்பாடுகளும் மாற வேண்டும் "


நிஜம் தாங்க. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ஜோதி !

Anonymous said...

ya,this is a general perception. Iam not sure it holds true.

-Mahesh

puduvaisiva said...

கபிலன் இன்று நச்சு டிவி சீரியல் பாதிப்பால் கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? என்று வேறுபாடுகள் எதுவும் இல்லை.

கபிலன் said...

"♠புதுவை சிவா♠ said...
கபிலன் இன்று நச்சு டிவி சீரியல் பாதிப்பால் கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? என்று வேறுபாடுகள் எதுவும் இல்லை. "

அதென்னவோ உண்மை தான் : )
நன்றிங்க புதுவை சிவா!

சோழன் said...

சினிமா வ பாத்து தான் இந்த உளறலா? வர வர வீட்லயே இருந்து உங்களுக்கு சினிமா சீரியல் பைத்தியம் பிடிச்சு போச்சு நு நெனைக்குறேன்!

Anbarasu S said...

அனுபவம் சொல்லறிங்க. ம். உண்மை தான்.

அன்பரசு செல்வராசு

கபிலன் said...

"Anbarasu Selvarasu said...
அனுபவம் சொல்லறிங்க. ம். உண்மை தான்.

அன்பரசு செல்வராசு"

அடேங்கப்பா...உண்மை தான்னு ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றீங்க : )
நன்றிங்க அன்பரசு செல்வராசு!

கபிலன் said...

"சோழன் said...
சினிமா வ பாத்து தான் இந்த உளறலா? வர வர வீட்லயே இருந்து உங்களுக்கு சினிமா சீரியல் பைத்தியம் பிடிச்சு போச்சு நு நெனைக்குறேன்! "

இப்போ தானே கல்யாணம் முடிஞ்சு இருக்கு...இனிமேல் சீரியல் கதையை உங்க கிட்டயே கேட்டுக்குறேன்!
நன்றிங்க சோழன்!

மதார் said...

//அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல).//

?????????????
யாருக்கு குடும்பத்த நல்லா கொண்டுபோற ஒரு லீடிங் ,பொறுமை , எதையும் சமாளித்து கொண்டு போற சக்தி இருக்கோ அவங்கதான் அங்க குடும்ப தலைவர் .எங்க வீட்ல அம்மாதான் .என் அம்மாகிட்ட நா கத்துகிட்டது நெறைய , சமையல் உள்பட .

கபிலன் said...

"மதார் said...
//அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல).//

?????????????"

இங்க நான் சொல்ல வருவது Decision-making authority !

"யாருக்கு குடும்பத்த நல்லா கொண்டுபோற ஒரு லீடிங் ,பொறுமை , எதையும் சமாளித்து கொண்டு போற சக்தி இருக்கோ அவங்கதான் அங்க குடும்ப தலைவர் ."

இங்க தான் மேட்டரே....இந்த விஷயத்தை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , சரியான முடிவை எடுக்கணும். இக்காலத்து நகரத்துப் பெண்களிடம் விட்டுக்கொடுத்து வாழ்தல் என்பது அரிதாகி, ஈகோவே மலைபோல் மேலோங்கி நிற்பதாகத் தெரிகிறது.

"எங்க வீட்ல அம்மாதான் .என் அம்மாகிட்ட நா கத்துகிட்டது நெறைய , சமையல் உள்பட ."

ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் என்ற முறையில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்லது தான்.

நன்றி மதார்!

மதுரை சரவணன் said...

ponnuka ellaam nalla ponnuka thaan. naam natanthu kollum muraiyil aval mananilai velipatum. mana velippaattil aan enna pen enna? ellaam or innam thaan.

NO said...

எல்லோர் கவனத்திற்கும்
---------------------------------------------
தன்னுடைய கடவுளை அவமானப்படுத்துகிறார்கள் என்று எண்ணி தன்னின் எதிர்ப்பை எழுத்துகளில் காண்பித்தால் அது மதவாதம்! அதுவும் இந்த்துக்கள் செய்தால் அது இந்துதுவம்!

அவமானம் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் அந்த படங்களை மறுபடியும் தன்னின் தளங்களில் போட்டு இவர் இது மட்டும்தானே செய்தார், இதில் என்ன தவறு, இதை கண்டித்து மறுப்பு தெரிவிப்பவறேல்லாம் இந்து மத வாதி, இந்து பாசிஸ்டு என்று வேறு விளாசல்கள்!
சரி. தன்னுடையய மதத்தை அவமானப்படுத்தினார் ஒருவர் என்று செய்யப்பட்ட ஒரு காரியத்தை வைத்து (இந்த விடயத்தில் ஒரு நிர்வாண படம் வரையப்பட்டது, அது பலராலும் மறு பதிவு செய்யப்படுகிறது) பதிவு போட்டாலோ பின்னூட்டம் போட்டாலோ அது இந்துத்துவவாதம்.

ஒப்புக்கொள்கிறோம்!
இதை தற்ச்சமயம் ஒரு பதிவு போட்டு சொன்னது திரு செந்தழில் இரவி! அதாவது, இவரின் கொள்கைப்படி தன்னுடைய கடவுளாரை தூக்கிப்பிடித்தால் அது மதத்துவம்! அதாவது, கடவுள் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும், நம்பும் ஒரு உருவத்தை நிர்வாணமாக வரைந்தாலும் கூடஅதை எதிர்த்தோ விமர்சித்தோ பேசினால் அது இந்துத்துவம்!
இதை கொஞ்சம் கவனியுங்கள்!
புதுச்சேரி இரா சுகுமாரன் என்பவர் 2006 ஆம் வருடம் "தேவாலயங்களில் இயேசு இல்லை" என்ற ஒரு பதிவை அவரின் தளத்தில் எழுதினர்!!
http://rajasugumaran.blogspot.com/2006/04/blog-post_20.html

அதில் இயேசு கிருத்துவைப்பற்றி ஒரு விமர்சனமும் இருக்கிறது! அதில் இயேசு ஒரு மத போதகரோ, காவலரோ இல்லை மற்றும் கிருத்துவ மதம் எந்த இயேசுவின் அங்கீகாரம் பெற்றதும் அல்ல என்று மட்டும் நில்லாது, இயேசு ஒரு நாத்திகர் என்று சொல்ல விழைகிறது! கவனிக்கவேண்டிய விடயம் இப்பொழுது நான் எழுதுவது இயேசு பற்றிய விமர்சனம் அல்ல. அதில் எனக்கு ஆர்வமும் அல்ல. மாறாக அந்த பதிவிற்கு வந்த வந்த ஒரு எதிர்ப்பை
பற்றிதான் இது!
தான் வணகும் கடவுளாரை பற்றி யாரவது விமர்சனம் செய்தால் அதை கோபம்கொண்டு மறுப்பது இயல்புதான் என்ற நோக்கில் ஒரு சிலர் எழுதிய பின்னூட்டங்களை படித்ததில் ஒருவரின் பின்னூட்டம் பளீரென்று நம்மை அறைகிறது!
அந்த பின்னூட்டத்தை முதலில் கவனிப்போம்!

"அன்பை போதித்தவரை இழி சொல் கூற வேண்டாம்..நீங்களும் இது போன்ற உபயோகமற்ற பதிவுகள் போட வேண்டாம்..."

அதாவது தன் கடவுளை இழிசொல் கொண்டு தாக்கவேண்டாம் மேலும் இந்த மாதிரி குப்பையான பதிவுகளை எழுதவேண்டாம் என்று இந்த பின்னூட்டக்காரர் ஆணித்தரமாக சொல்லுகிறார்!

OK, தவறில்லை என்றுதான் முதலில் சொல்லத்தோன்றுகிறது! Afterall he is defending his own beliefs and Gods!

திருமதி கிருபா நந்தினியும் இதேபோல்தான் ஒருவரின் சரஸ்வதி பற்றிய பதிவிற்கு பதில் போட்டார்கள்! என்ன பின்னூட்டத்திற்கு பதிலாக ஒரு பதிவையே போட்டு தன கோபத்தை வெளிப்படுத்தினார்! அது அவர் இஷ்டம். அவரின் நம்பிக்கையை சாடிய ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடினால் அவருக்கு வந்தது கோபம்! ஆனால் அவருக்கு இப்பொழுது கொடுக்கப்படும் பெயரோ, இந்து மதவாதி!!! அவருக்கு மட்டும் அல்ல, ஹுசைனை கண்டித்து எழுதிய அத்துணை மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட பெயர் "இந்துத்துவவாதி"!!!

அப்படியானால் அதேபோல தன் கிருத்துவ கடவுளை விமர்சித்ததால் கோபம்கொண்டு பின்னூட்டம் போட்டவரை என்னவென்று சொல்லலாம் ??????????

கிருத்துவவாதி அல்லது கிருத்துவ மதவாதி, கிருத்துவ பாசிஸ்டு !!!!!!!!!!!

அந்த பின்னூட்டத்தை போட்டவர் திரு செந்தேழில் ரவி அவர்கள்! இது நடந்தது
Monday, April 24, 2006 4:18:00 PM
அதாவது சரஸ்வத்தியை களங்க படுத்தி பேசுவதை எதிர்த்தால் அது இந்து மதவாதம்! சொல்லுவது திரு ரவி! அதே அவர் தன் கடவுளாரை தூக்கி பிடித்தால் அது பகுத்தறிவு!!!!

வெட்கக்கேடு

நன்றி

LinkWithin

Blog Widget by LinkWithin