Thursday, February 27, 2020

CAA வுக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் என்னய்யா சம்மந்தம் ?


குடியுரிமை திருத்த சட்டம் CAA வை எதிர்த்து நாடெங்கும் இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் தங்களின் கட்சி நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு கதை திரைக்கதை எடிட்டிங்க் செய்து செய்தி வெளியிடுகின்றனர்.

திடீர்னு நம்ம வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். CAA வுக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் சம்மந்தம் இருக்கா என்றால்... சுத்தமாக இல்லை... ரொம்ப மொக்கை போடாம நேரா சொல்றேன்..


அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் தான் CAA. இந்தியக் குடிமகனின் குடியுரிமையை பறிப்பதல்ல..! சரி மேட்டர்க்கு வருவோம்...

1.  பங்க்ளாதேஷ் அகதிகளால் தங்கள் வாழ்வாதாரம், கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக அசாம் மாணவர் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக 1985 இல் அன்றைய பிரதமர் அசாம் ஒப்பந்தத்தில் கைழுத்திடுகிறார். அதாவது பங்களாதேஷ் அகதிகளைக் கண்டறிந்து அசாமில் இருந்து இடம் பெயரச் சொல்கிறோம் என்பது ஒப்பந்தம்.


படம் :கொடுமைகளுக்கு பயந்து இந்தியா நோக்கி வரும் அகதிகள்..1971 இல்

2. 1971 இல் நடந்த பங்களாதேஷ் - பாக் பிரிவினை கலவரத்தில் இந்துக்கள் என்ற காரணத்தால் மதரீதியாக இந்து மக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனர்... உயிருக்கு பயந்து பலரும் அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு ஓடி வந்தாங்க... இந்துக்களோடு சேர்த்து இஸ்லாமிய அகதிகளும் வந்தாங்க... (இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியருக்கு மத ரீதியாக துன்புறுத்தல் இருக்க வாய்ப்பில்லை.. பின் எதுக்கு வந்தாங்கன்னு தெரியல..)

3. ஏன் இவ்வளவு நாள் கணக்கெடுக்கல...ஒழுங்கா NRC அமல்படுத்துங்க...என 2013 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கொட்டியதோடு மட்டுமல்லாமல்... என் மேல்பார்வையில் நடக்கட்டும்னு சொன்னது கோர்ட்.

5. ஆக, அசாம் மாநிலத்துக்காக பிரத்யேகமாக NRC வழிமுறைகள் செய்து அகதிகளைக் கண்டறிந்தார்கள். இன்னும் மற்ற மாநிலங்களுக்கு இதற்கான வழிமுறைகள் வரவே இல்லை...! வராத சட்டத்துக்கு வண்ணாரப்பேட்டையில் எதுக்கு போராடுறாங்கன்னு தெரியல..

6. இஸ்லாமிய நாட்டிலிருந்து தப்பி உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் ஓடி வந்தவர்கள் இந்துக்கள். ரெக்கார்டு படி...சுமார் 31000 பேர் என்கிறார்கள். ரொம்ப வருஷமா இங்கு எவ்வித சலுகைகளும் இல்லாமல் அகதியாக இருந்துட்டு இருக்கவங்களுக்கு குடியுரிமை வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.



இங்கிருக்கும் இஸ்லாமியரை வெளியில் அனுப்பிடுவாங்கன்னு மக்கள் மனதில் தவறான கருத்துக்களை விதைத்து... மத உணர்வோடு கலந்து கொடுத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் சில கட்சித் தலைவர்களும் இஸ்லாமிய இயக்கங்களும்...!

சந்தேகம்,பிரச்சினை என்றால் நேராக அமித் ஷா கிட்ட போய் கேளுங்க... அவர் தான் 3 நாட்களுக்குள் அப்பாய்ண்ட்மென்ட் தருகிறேன் என சொல்கிறாரே..!

அம்புடுதேன்..!




Tuesday, December 12, 2017

ஆதிக்க சாதி வெறியன்னு திட்டிட்டுப் போங்க...!

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை - தீர்ப்பு - எனது பார்வை  (கொஞ்சம் பெரிய பதிவு....ஆதிக்க சாதி வெறியன்னு திட்டிட்டுப் போங்க...)

கோர்ட்...கேஸ்...மரண தண்டனை வேணுமா...இத்தனை பேருக்கு தூக்களிக்கும் அளவுக்கு இது ரொம்ப அரிய வழக்கா என்ற விவாதங்களுக்குள் நான் வரலை. கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கு என்ற வகையில் நீதி நிலை நாட்டப்பட்டிருக்கு என்பது மட்டும் நிஜம். தன் பெண் இப்படி போயிட்டாளே என்ற வேதனை பெற்றோருக்கு இருக்கவே செய்யும்...அதுக்காக கூலிப் படை வைத்து தன் சொந்த மகளையே கொலை செய்ய நினைக்கும் மனநிலை தவறான ஒன்று. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று...! நிற்க !

இப்போ, தன் பெண்ணை நல்ல வேலையில், நல்ல குடும்பத்தில், நல்ல பழக்க வழக்கங்களுடன் உள்ள ஒருத்தருக்கு திருமணம் செய்யணும் என பெற்றோர் நினைப்பது தவறா என தெரியவில்லை. மணமகனுக்கு படிப்பு, வேலை என எதுவும் இருக்காது, குடும்பத்திலும் சொத்து பத்து இருக்காது, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாத ஒருவரை நம் பெண் காதலித்தால் நாம் என்ன செய்வோம் ?  சரிம்மா...18 வயசு ஆயிடுச்சு...நீ மேஜர்...காதலிக்குறீங்க.....எவன் கூடன்னாலும் போயிடும்மா...நீ எப்படி போனா எனக்கென்ன..ந்னு எந்த பெற்றோர் சொல்வாங்கன்னு தெரியலை....(வாழ்கைக்கு காதல் மட்டும் இருந்தா போதும்னு சொல்றவங்க லெப்ட்டுக்கா திரும்பி போயிடுங்க..)

இன்றளவும் சொந்த சாதியாக இருந்தாலுமே காதல் எதிர்ப்புகள் இருந்துட்டு தான் இருக்கு.  சொந்த சாதியாகவே இருந்தாலும் இப்படி தங்கள் மகளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதில்லை. ஏங்க ஒரு 10, 20 பவுன் அதிகம் போட்டு கூட, நல்ல இடமா கொடுக்கணுங்கன்னு அம்மாக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் வீடுகள் ஏராளம். அதே மாதிரி, நல்ல நிலையில் இருக்கும் தலித் சமுதாயத்தவர் எத்தனையோ பேர் தலித் அல்லாத சமுதாயத்தில் பெண் எடுத்து (அதாவது சாதி மறுப்பு திருமணம் செய்து) சந்தோஷமாகத் தான் வாழ்கின்றனர்.

மேல்சாதிப் பெண்ணை பணத்திற்காக திருமணம் செய்து, கடைசியில் பெற்றோரிடம் விலை பேரம் பேசி, பணம் பிடுங்கிய பின் பெண்ணை அனுப்பி வைக்கும் சம்பவங்கள் இங்கு ஏராளம்.  காதல் தோல்வி என்றோ, குடும்பத் தகராறு என்றோ வேறு சில பெயர்கள் சொல்லி சாதிப் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மானம் போயிடும்னு இதெல்லாம் ரகசியமா வச்சுக்க வேண்டிய மோசமான கட்டாயத்தில் இருப்பவர்கள் பலர். தர்மபுரி போன்ற வட மாவட்டங்களில் மட்டுமே பெரிதாக இருந்த இந்த விஷயங்கள் தற்போது கோவை திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் இது போன்ற சம்பவங்கள் தான் சாதி மறுப்பு திருமணங்கள் என நீட்டி முழங்கப்படுகிறது.

கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் என்ற இரெண்டு சொல்லாடல்களும் ஒரே பொருள் பட தோன்றினாலும், அவைகளுக்கு வித்தியாசம் உண்டு. தலித் அல்லாத பிற சமூகங்களுக்குள் சாதி மாறி நடக்கும் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் எனவும் தலித் சமுதாயத்தவர் தலித் அல்லாதவரை திருமணம் செய்வது சாதி மறுப்புத் திருமணங்கள் எனவும் வரையறுக்கப் படுகிறது.

ஆக மொத்தம், டேடி நான் இவனை லவ் பண்றேன்...இவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நம்ம பொண்ணு வந்து கேட்டா.....காதலன் நல்லவனோ கெட்டவனோ....எதுவும் கண்டுக்காம கண்ணை மூடிட்டு, பெற்றோர்கள் திருமணம் முடித்து வைக்க வேண்டும். இவங்க கணக்குல இது தான் சாதி மறுப்பு திருமணம். மறுத்தால் ஆதிக்க சாதி வெறி பெற்றோராக அடையாளப்படுத்தப்படுவீர்....என்று சொல்லிக்கொண்டு முடிக்கிறேன்..!

இப்படியெல்லாம், அடுத்த சாதிப் பெண்ணை ஏமாற்றி, பெற்றோரை மிரட்டி, வருத்தி, குடும்பத்தை அழித்து, திருமணம் செய்து தான் சாதி ஒழியணும் என்றிருந்தால், அந்த சாதி இருந்துவிட்டு போகட்டும் என்பதே என் பதிலாக இருக்கும்..!

கல்வியும் பொருளாதாரமும் காலத்தோடு இணைந்து பயனிக்கும் போது, இயல்பாக சாதி ஏற்றத் தாழ்வுகள் நீங்கும் !

LinkWithin

Blog Widget by LinkWithin