tag:blogger.com,1999:blog-88286181106458656372024-03-13T05:11:16.946+05:30லோக்கல் தமிழன்சுவாரஸ்யமான சம்பவங்கள்,எண்ணங்கள்,வினாக்கள், தேடல்கள்,விவாதங்கள்,மொக்கைகள் மற்றும் லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் என என்னுடைய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு!கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-40896665477924284872020-02-27T15:57:00.000+05:302020-02-27T15:57:09.009+05:30CAA வுக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் என்னய்யா சம்மந்தம் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgURcCCMUMFji4W6pxZtqCtdqwvdRAp4pnB50A_rtJCzXr7rYyxhkBIAXqOc-JEe3ceCnOJt03aB-tjv3mUOgossRaNlCJRueQixTi9YB-Sg2U6F1JjI1LJFXnmvIgIbD4QV7kJi8U2TkQ/s1600/caa-photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="568" data-original-width="711" height="255" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgURcCCMUMFji4W6pxZtqCtdqwvdRAp4pnB50A_rtJCzXr7rYyxhkBIAXqOc-JEe3ceCnOJt03aB-tjv3mUOgossRaNlCJRueQixTi9YB-Sg2U6F1JjI1LJFXnmvIgIbD4QV7kJi8U2TkQ/s320/caa-photo.jpg" width="320" /></a></div>
<br />
குடியுரிமை திருத்த சட்டம் CAA வை எதிர்த்து நாடெங்கும் இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் தங்களின் கட்சி நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு கதை திரைக்கதை எடிட்டிங்க் செய்து செய்தி வெளியிடுகின்றனர்.<br />
<br />
திடீர்னு நம்ம வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். CAA வுக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் சம்மந்தம் இருக்கா என்றால்... சுத்தமாக இல்லை... ரொம்ப மொக்கை போடாம நேரா சொல்றேன்..<br />
<br />
<br />
அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் தான் CAA. இந்தியக் குடிமகனின் குடியுரிமையை பறிப்பதல்ல..! சரி மேட்டர்க்கு வருவோம்...<br />
<br />
1. பங்க்ளாதேஷ் அகதிகளால் தங்கள் வாழ்வாதாரம், கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக அசாம் மாணவர் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக 1985 இல் அன்றைய பிரதமர் அசாம் ஒப்பந்தத்தில் கைழுத்திடுகிறார். அதாவது பங்களாதேஷ் அகதிகளைக் கண்டறிந்து அசாமில் இருந்து இடம் பெயரச் சொல்கிறோம் என்பது ஒப்பந்தம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-KZR5HEt5EvPym7WgUxqVz07mEOV7py1pXX6b87S1uXZHUVQhpHEwMiW7h8mE8g-ddNK1OEg2K-X3_VK50yi8iAoge6knmDPs2sdkH_8XjxYv4IY87J0YhWk__WC-AvA_3EKczaxZt_4/s1600/refugee-exodus.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="353" data-original-width="500" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-KZR5HEt5EvPym7WgUxqVz07mEOV7py1pXX6b87S1uXZHUVQhpHEwMiW7h8mE8g-ddNK1OEg2K-X3_VK50yi8iAoge6knmDPs2sdkH_8XjxYv4IY87J0YhWk__WC-AvA_3EKczaxZt_4/s320/refugee-exodus.jpg" width="320" /></a></div>
<br />
<span style="color: #274e13;">படம் :கொடுமைகளுக்கு பயந்து இந்தியா நோக்கி வரும் அகதிகள்..1971 இல்</span><br />
<span style="color: blue;"><br /></span>
2. 1971 இல் நடந்த பங்களாதேஷ் - பாக் பிரிவினை கலவரத்தில் இந்துக்கள் என்ற காரணத்தால் மதரீதியாக இந்து மக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனர்... உயிருக்கு பயந்து பலரும் அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு ஓடி வந்தாங்க... இந்துக்களோடு சேர்த்து இஸ்லாமிய அகதிகளும் வந்தாங்க... (இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியருக்கு மத ரீதியாக துன்புறுத்தல் இருக்க வாய்ப்பில்லை.. பின் எதுக்கு வந்தாங்கன்னு தெரியல..)<br />
<br />
3. ஏன் இவ்வளவு நாள் கணக்கெடுக்கல...ஒழுங்கா NRC அமல்படுத்துங்க...என 2013 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கொட்டியதோடு மட்டுமல்லாமல்... என் மேல்பார்வையில் நடக்கட்டும்னு சொன்னது கோர்ட்.<br />
<br />
5. ஆக, அசாம் மாநிலத்துக்காக பிரத்யேகமாக NRC வழிமுறைகள் செய்து அகதிகளைக் கண்டறிந்தார்கள். இன்னும் மற்ற மாநிலங்களுக்கு இதற்கான வழிமுறைகள் வரவே இல்லை...! வராத சட்டத்துக்கு வண்ணாரப்பேட்டையில் எதுக்கு போராடுறாங்கன்னு தெரியல..<br />
<br />
6. இஸ்லாமிய நாட்டிலிருந்து தப்பி உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் ஓடி வந்தவர்கள் இந்துக்கள். ரெக்கார்டு படி...சுமார் 31000 பேர் என்கிறார்கள். ரொம்ப வருஷமா இங்கு எவ்வித சலுகைகளும் இல்லாமல் அகதியாக இருந்துட்டு இருக்கவங்களுக்கு குடியுரிமை வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi16XkfYOD52YkAuV6WyFOB7sKhE0ukDRY1hSJXbrY3GJSODz2Qj_S6F4LoNL-veXPN56SdtZhnctPQkiEoAV9EC9Y2Ct25IkWRHM9ZqfIcQlpyoKIbmx6XJ_VkqnDWBYo5mxcEKDTse_Q/s1600/refugee_trrop-movement.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="386" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi16XkfYOD52YkAuV6WyFOB7sKhE0ukDRY1hSJXbrY3GJSODz2Qj_S6F4LoNL-veXPN56SdtZhnctPQkiEoAV9EC9Y2Ct25IkWRHM9ZqfIcQlpyoKIbmx6XJ_VkqnDWBYo5mxcEKDTse_Q/s320/refugee_trrop-movement.jpg" width="247" /></a></div>
<br />
<br />
இங்கிருக்கும் இஸ்லாமியரை வெளியில் அனுப்பிடுவாங்கன்னு மக்கள் மனதில் தவறான கருத்துக்களை விதைத்து... மத உணர்வோடு கலந்து கொடுத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் சில கட்சித் தலைவர்களும் இஸ்லாமிய இயக்கங்களும்...!<br />
<br />
சந்தேகம்,பிரச்சினை என்றால் நேராக அமித் ஷா கிட்ட போய் கேளுங்க... அவர் தான் 3 நாட்களுக்குள் அப்பாய்ண்ட்மென்ட் தருகிறேன் என சொல்கிறாரே..!<br />
<br />
அம்புடுதேன்..!<br />
<br />
<br />
<br />
<br /></div>
கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-48171232355926865302017-12-12T17:13:00.000+05:302017-12-12T17:13:00.130+05:30ஆதிக்க சாதி வெறியன்னு திட்டிட்டுப் போங்க...! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>உடுமலைப்பேட்டை சங்கர் கொலை - தீர்ப்பு - எனது பார்வை (கொஞ்சம் பெரிய பதிவு....ஆதிக்க சாதி வெறியன்னு திட்டிட்டுப் போங்க...)</b><br />
<br />
கோர்ட்...கேஸ்...மரண தண்டனை வேணுமா...இத்தனை பேருக்கு தூக்களிக்கும் அளவுக்கு இது ரொம்ப அரிய வழக்கா என்ற விவாதங்களுக்குள் நான் வரலை. கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கு என்ற வகையில் நீதி நிலை நாட்டப்பட்டிருக்கு என்பது மட்டும் நிஜம். தன் பெண் இப்படி போயிட்டாளே என்ற வேதனை பெற்றோருக்கு இருக்கவே செய்யும்...அதுக்காக கூலிப் படை வைத்து தன் சொந்த மகளையே கொலை செய்ய நினைக்கும் மனநிலை தவறான ஒன்று. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று...! நிற்க !<br />
<br />
இப்போ, தன் பெண்ணை நல்ல வேலையில், நல்ல குடும்பத்தில், நல்ல பழக்க வழக்கங்களுடன் உள்ள ஒருத்தருக்கு திருமணம் செய்யணும் என பெற்றோர் நினைப்பது தவறா என தெரியவில்லை. மணமகனுக்கு படிப்பு, வேலை என எதுவும் இருக்காது, குடும்பத்திலும் சொத்து பத்து இருக்காது, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாத ஒருவரை நம் பெண் காதலித்தால் நாம் என்ன செய்வோம் ? சரிம்மா...18 வயசு ஆயிடுச்சு...நீ மேஜர்...காதலிக்குறீங்க.....எவன் கூடன்னாலும் போயிடும்மா...நீ எப்படி போனா எனக்கென்ன..ந்னு எந்த பெற்றோர் சொல்வாங்கன்னு தெரியலை....(வாழ்கைக்கு காதல் மட்டும் இருந்தா போதும்னு சொல்றவங்க லெப்ட்டுக்கா திரும்பி போயிடுங்க..)<br />
<br />
இன்றளவும் சொந்த சாதியாக இருந்தாலுமே காதல் எதிர்ப்புகள் இருந்துட்டு தான் இருக்கு. சொந்த சாதியாகவே இருந்தாலும் இப்படி தங்கள் மகளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதில்லை. ஏங்க ஒரு 10, 20 பவுன் அதிகம் போட்டு கூட, நல்ல இடமா கொடுக்கணுங்கன்னு அம்மாக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் வீடுகள் ஏராளம். அதே மாதிரி, நல்ல நிலையில் இருக்கும் தலித் சமுதாயத்தவர் எத்தனையோ பேர் தலித் அல்லாத சமுதாயத்தில் பெண் எடுத்து (அதாவது சாதி மறுப்பு திருமணம் செய்து) சந்தோஷமாகத் தான் வாழ்கின்றனர்.<br />
<br />
மேல்சாதிப் பெண்ணை பணத்திற்காக திருமணம் செய்து, கடைசியில் பெற்றோரிடம் விலை பேரம் பேசி, பணம் பிடுங்கிய பின் பெண்ணை அனுப்பி வைக்கும் சம்பவங்கள் இங்கு ஏராளம். காதல் தோல்வி என்றோ, குடும்பத் தகராறு என்றோ வேறு சில பெயர்கள் சொல்லி சாதிப் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மானம் போயிடும்னு இதெல்லாம் ரகசியமா வச்சுக்க வேண்டிய மோசமான கட்டாயத்தில் இருப்பவர்கள் பலர். தர்மபுரி போன்ற வட மாவட்டங்களில் மட்டுமே பெரிதாக இருந்த இந்த விஷயங்கள் தற்போது கோவை திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் இது போன்ற சம்பவங்கள் தான் சாதி மறுப்பு திருமணங்கள் என நீட்டி முழங்கப்படுகிறது.<br />
<br />
கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் என்ற இரெண்டு சொல்லாடல்களும் ஒரே பொருள் பட தோன்றினாலும், அவைகளுக்கு வித்தியாசம் உண்டு. தலித் அல்லாத பிற சமூகங்களுக்குள் சாதி மாறி நடக்கும் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் எனவும் தலித் சமுதாயத்தவர் தலித் அல்லாதவரை திருமணம் செய்வது சாதி மறுப்புத் திருமணங்கள் எனவும் வரையறுக்கப் படுகிறது.<br />
<br />
ஆக மொத்தம், டேடி நான் இவனை லவ் பண்றேன்...இவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நம்ம பொண்ணு வந்து கேட்டா.....காதலன் நல்லவனோ கெட்டவனோ....எதுவும் கண்டுக்காம கண்ணை மூடிட்டு, பெற்றோர்கள் திருமணம் முடித்து வைக்க வேண்டும். இவங்க கணக்குல இது தான் சாதி மறுப்பு திருமணம். மறுத்தால் ஆதிக்க சாதி வெறி பெற்றோராக அடையாளப்படுத்தப்படுவீர்....என்று சொல்லிக்கொண்டு முடிக்கிறேன்..!<br />
<br />
இப்படியெல்லாம், அடுத்த சாதிப் பெண்ணை ஏமாற்றி, பெற்றோரை மிரட்டி, வருத்தி, குடும்பத்தை அழித்து, திருமணம் செய்து தான் சாதி ஒழியணும் என்றிருந்தால், அந்த சாதி இருந்துவிட்டு போகட்டும் என்பதே என் பதிலாக இருக்கும்..!<br />
<br />
கல்வியும் பொருளாதாரமும் காலத்தோடு இணைந்து பயனிக்கும் போது, இயல்பாக சாதி ஏற்றத் தாழ்வுகள் நீங்கும் !<br />
<div>
<br /></div>
</div>
கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-16691739488791924982013-11-23T13:07:00.002+05:302013-11-23T13:07:32.750+05:30இந்த சாதிக்காரன் இப்படித் தான் இருப்பான்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சாப்ட்வேர் ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஒரு தொழிலதிபரிடம் பேச நிகழ்ந்தது. அவர் ஒரு இஸ்லாமியர். பல்வேறு தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறக்கும் அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு விவிஐபி. மிகவும் எளிமையான மனிதர்.<br />
<br />
ப்ராஜெக்ட் நிமித்தமாக பேசி முடித்த பிறகு, அவர் ஆரம்பிக்கும் நிறுவனம் பற்றி சொன்னார். பிறகு அதற்கு ஒரு தலைமை செயல் அதிகாரி (CEO) வேண்டும் என்றார்.<br />
<br />
<b>"கபிலன், எனக்கு ஒரு நல்ல திறமையான சேல்ஸ் அல்லது மார்கெட்டிங்க் போன்றவற்றில் 15 வருடம் அனுபவமுள்ள, கம்பெனி நிர்வாகம் அறிந்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள். மாதம் 10 லட்சம் சம்பளம் தருகிறேன். மற்றும் கார், தங்குவதற்கு பங்களா போன்ற வசதிகளையும் செய்து தருகிறேன். இருந்தால் சொல்லு ப்பா "</b><br />
<br />
அடடா.... 10 லட்சம் சம்பளமா...நம்மலே ஒரு பிட்டை போட்டு பாத்துறலாமான்னு யோசிச்சிட்டே...சார்...அந்த மாதிரி ஒரு 3 அல்லது 4 பேர் எனக்குத் தெரியும் நான் உங்களுக்கு இமெயில் அனுப்பச் சொல்கிறேன் சார். என்றேன்.<br />
<br />
உடனே அவர்,<br />
<b>" சரி பா...ஆனா ஒரே ஒரு கண்டிஷன், அவர் ஐயர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்ற வகுப்புகள் வேண்டாம்"</b> என்றார்.<br />
<br />
ஓகே...நமக்கு பேசிக் தகுதி அவுட்...அது சரி....ஆனால் ஒரு இஸ்லாமிய தொழிலதிபர், தான் தேர்ந்தெடுக்கும் ஒருவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்படி சொல்கிறாரே என விழித்தேன். ஆச்சர்யத்தில் விழித்த என்னைப் பார்த்த அவர்,<br />
<br />
<b>"கபிலா...உலகத்துலயே ரொம்ப உஷாரான திறமையான அறிவாளியான இனம் எது தெரியுமா?"</b> என்றார்.<br />
<br />
<b>"தெரியலிங்க"</b> என்றேன்.<br />
<br />
<b>"யூதர்கள். நம் ஊரில் அது போலத் தான் ஐயர் வகுப்பினர். நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் துணிச்சலுடன் சில முடிவுகள் எடுத்து அதன் மூலம் பொருள் ஈட்ட வேண்டும். அந்த விஷயத்தில் ஐயர் தான் டாப்"</b> என்றார்.<br />
<br />
சரிங்க...சொல்றேன்...என்று கிளம்பினேன்.<br />
<br />
ஐயர் வகுப்பினர் திறமையானவர்கள் என்பதை மறுக்கவில்லை.<br />
<br />
ஆனால், சாதியை வைத்து அவன் இப்படித் தான் இருப்பான், இவன் இப்படித் தான் இருப்பான் என்ற நம்பிக்கை உயர் மட்டத்திலும் ஆழமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.<br />
<br />
என்ன ஒரு ஆறுதல் என்றால், அந்த இஸ்லாமிய தொழிலதிபருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அந்த தலைமுறையில் இருப்பவர்கள் அப்படித் தான் நினைப்பார்கள் என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.<br />
<br />
இப்போதைய தலைமுறை சாதியை வைத்து குணத்தையும், திறமையையும் எடை போடாது என்று நம்பிக்கை கொள்வோம்.<br />
<div>
<br /></div>
</div>
கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-59847474755867964002012-10-01T16:23:00.003+05:302012-10-01T16:23:30.292+05:30ஆய் கழுவ மட்டும் ஆயா வேணுமா ?இன்று முதியோர் தினம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இன்று உலக முதியோர் தினம் !<br />
<br />
நம்மை எல்லாம் பள்ளிக் கூடத்திற்கு கை பிடித்து ஆசையாய் அழைத்துச் சென்ற தாய் தந்தையரை, முதியோர் இல்லம் தேடிச் சென்று சேர்த்து விடும் படித்த மேதாவிகள் நாம். இதைப் பற்றி கொஞ்சம் நேரமாச்சும் நம்ம யோசிச்சு பார்க்கணும்.<br />
<br />
நம்ம சின்ன வயசுல, நம்ம தாத்தா பாட்டி கிட்ட, ஆயா வடை சுட்ட கதையில் தொடங்கி ராமாயணம், மகாபாரதம் வரை ஆர்வமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். நம் தாய் தந்தையரிடமிருந்து அன்றைய காலகட்ட சிந்தனைகளையும், தாத்தா பாடியிடம் இருந்து நம் முன்னோருடைய வாழ்க்கை முறையும் சேர்த்து கற்றுக் கொண்டோம். ஆக மொத்தம் நம் வாழ்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை, நல்ல பண்புகளை கற்றுக் கொண்டோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphen2X1YSyhjY7j1hXkbwq6rnVE1q9dZPPovyroFI_uxCVGE56OLNxJcEwZJOl0Hq8xAP5mxcNWR-JE8Oe2oFDznxkNjPBSBz4sV3q_9pjnqn1Q3LsUvN7HkoxztvcJ3nuTnS8OZv1BF3w/s1600/OLDAGE.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="281" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhyphenhyphen2X1YSyhjY7j1hXkbwq6rnVE1q9dZPPovyroFI_uxCVGE56OLNxJcEwZJOl0Hq8xAP5mxcNWR-JE8Oe2oFDznxkNjPBSBz4sV3q_9pjnqn1Q3LsUvN7HkoxztvcJ3nuTnS8OZv1BF3w/s320/OLDAGE.jpg" width="320" /></a></div>
<br />
பொதுவாக நம்ம ஊர்ல பெண்கள் புருஷன் வீட்டுக்குப் போயிட்டு, அந்த குடும்பத்தைப் பார்க்க வேண்டிய பொறுப்பை ஏற்கிறார்கள். ஆண்கள், தன் தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த வரை ஒரு பேச்சலர் கூட் தன் தாய் தந்தையரை முதியோர் இல்லம் கொண்டு போய் சேர்த்ததாக தெரியவில்லை. ஆக, இந்த இரு நிலைகளிலும், ஆணுக்குத் திருமணம் ஆகும் வரை தாய் தந்தையரை நல்லா தான் பார்த்துக்குறாங்க. அதுக்கு அப்புறம் தான் மேட்டரே. என்ன வித்தியாசம்னு பார்த்தீங்கன்னா...புதுசா ஒரு பொண்ணு எண்ட்ரீ : ) ஆக, இந்த நிலைமைக்கு பெரும்பான்மயான காரணம் பெண்கள் தான்.<br />
<br />
மீடியாக்கள் இந்த விஷயத்தை மேலோட்டமாக எழுதுறாங்க. கொஞ்சம் டீடெய்லா எழுதினா பெண் அமைப்புகள் சண்டைக்கு வந்துடுவாங்க...வியூவர்ஷிப் போயிடும்னு ஒரு பயம் கூட காரணமா இருக்கலாம். அதனால, இது தொடர்பாக எனக்குத் தோன்றிய சில விஷயத்தை இங்க சொல்றேன்.<br />
<br />
1.பெரும்பாலும் ஒரு ஜெனரேஷன் கேப். படித்த மருமகள் படிக்காத மாமியார். அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, அதனால அவங்க சொல்றத நான் என்ன கேக்குறது என்ற மெண்டாலிட்டி.<br />
<br />
2.ஒரு ஆணைப் பொறுத்த வரை, ஒரு பெண் கொடூரமான சித்தியாக இருக்கலாம், மோசமான அத்தையாக இருக்கலாம், ஏன் சுயநல அக்கா தங்கையா கூட இருக்கலாம். ஆனால், அம்மா என்பவள் தான் உலகமே. என்ன தான் மனைவி கதை கதையா சொன்னாலும், பெரும்பாலும் அம்மா சைடு தான் இருப்பாங்க (வெளியில் மனைவிக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியும் :) ). இந்த மாதிரி விஷயங்களில் மருமகளுக்கு ஒரு வித பயம், பாதுகாப்பின்மை எல்லாம் வருது இயல்பு. அதுக்கு டைம் பார்த்து கௌண்ட்டர் அட்டாக் கொடுக்க வெயிட் பண்றாங்க. இது ஒரு continuous process. இது விரிசலில் தான் முடியுது.<br />
<br />
3. என் புள்ளைக்கு ஆய் கழுவ மட்டும் ஆயா வேணும் என சுயநலமாக தன் வேலைச் சுமைகளை இறக்கி வைப்பதற்காகவே முதியவர்களை பயன்படுத்துவது. இது தப்பில்ல, ஆனால் அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்யணும்னு நினைக்கணும்.<br />
<br />
4. மூன்று வேளை சாப்பாடு போட்டு, அவர்கள் தங்க வீட்டில் ஒரு ஓரமாக இடம் கொடுக்க கூட முடியாத ஒரு மகன், எவ்வளவு தான் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், அவன் ஒரு ..............................(நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்).<br />
<br />
5. வயசு ஆக ஆக, முதியவர்களின் செயல்பாடுகளும் சற்று மாறுவது இயல்பு தான். இதனை அறிந்து விட்டு கொடுக்க மறுப்பது என்பது நம்முடைய அறியாமையை காட்டுகிறது. நேருக்கு நேர் நின்று நீயா நானா என்று சண்டையிட்டு யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடையவது என்னவோ குடும்பம் தான்.<br />
<br />
6. இவ்வளவு கஷ்டப்ப்ட்டு வளர்த்த தாய் தந்தையரை......இந்த பாயிண்ட் நிறைய பேர் சொன்னதால இதோட நிறுத்திக்குறேன்.<br />
<br />
7. அன்பு, பாசம், வாழ்க்கை மட்டுமல்ல அவர்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த சொத்தையும் பிடுங்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்ப்பவனுக்கும், கொள்ளைக்காரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.<br />
<br />
<br />
இதை எல்லாம் ஏதோ சமூக நலத்தோடு மட்டும் சொல்லல. ஒரு சுயநலத்தோட கூடிய பயத்தில் தான் சொல்றேன். நமக்கும் ஒரு நாள் நரம்புகள் தளரும், ரத்தம் சுண்டும், மாத்திரைகளே உலகமாகும், Adult Diaperகளே உடையாகும். நமக்கும் முதியோர் இல்லங்கள் தானா ? என்ற ஒரு பயம் தான்.<br />
<br />
யாரையும் புன்படுத்தனும்னு நினைச்சு இதை எழுதல. முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான காரணங்களாக எனக்கு தோன்றியவையைத் தான் எழுதி இருக்கேன். உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்கள்.<br />
<br />
<br />
நம்முடைய குழந்தைகளை நாம் எப்படி கவனிச்சுக்குறோமோ...அதே மாதிரி நம்மைப் பெத்தவங்களையும் கவனிச்சுப்போமே!<br />
அன்பான வார்த்தையும், மரியாதையான வாழ்க்கையும் முதியோர்களுக்கு அளிப்போம் என உறுதி எடுப்போம்!<br />
<br />
<br />
</div>
கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-59190377280266275772010-04-30T11:47:00.004+05:302010-04-30T11:51:12.097+05:30அழகை நிர்வாணமாக்கிய அசிங்கம் -எது அழகு ? எது அசிங்கம் ?<p>சமீபத்தில் படித்த ஒரு சின்ன கதையோடு தொடங்குகிறேன்.</p><p>கடவுள் சொர்கத்திலிருந்து அழகு, அசிங்கம் இரண்டையும் ஒரு சேர பூமிக்கு அனுப்பினார். அழகும், அசிங்கமும் தொலைதூரப் பயணத்தால் அழுக்குண்டு, கலைப்புற்று பூமியை வந்தடைந்தன. </p><p>அழகு தன் ஆடைகளைக் கழற்றி கரையில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளத்தில் இறங்கியது. அழகு குளித்துக்கொண்டிருந்தபோது, கரையில் இருந்த அசிங்கம், அழகின் உடைகளைப் உடுத்திக் கொண்டு போய்விட்டது. குளித்துவிட்டு கரைக்கு வந்த அழகு, தன் ஆடைகள் காணாமல் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. அதற்கு மாறாக அசிங்கத்தின் உடைகள் அங்கு இருந்தன. நிர்வாணமாக இருந்த அழகு, வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டது. தன்னுடைய உடையை அசிங்கம் அணிந்து சென்றதை தெரிந்து கொண்ட அழகு, அசிங்கத்தைத் தேடி ஓடியது.</p><p>அழகு அசிங்கத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது !<br />உலகம் இப்படித் தான் இருக்கு என்பது போல முடியுது கதை !</p><p>அழகாகத் தெரியும் அனைத்தும் அழகும் அல்ல<br />அசிங்கமாகத் தெரியும் அனைத்தும் அசிங்கமும் அல்ல.பெரும்பாலும் வெளித்தோற்றத்தின் சிறப்பைச் சொல்லும் ஒன்றாகவே அழகு பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இயல்பான உணர்ச்சிகளான சிரிப்பு, அழுகை போன்றவற்றை வெளிப்படுத்துவதில் கூட மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிகிறோமா என்று பார்க்கும் அளவிற்கு அழகு என்ற ஒன்று வெளித்தோற்றத்தின் கைகூலியாகவே சமுதாயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. </p><p>எத்தனையோ மீட்டிங்க்ஸ்ல சுத்தமா சிரிப்பே வராத ஒரு மொக்கை ஜோக்கை Client சொல்லுவார், இருந்தாலும் நாம விழுந்து விழுந்து சிரிப்பது போல பாவணை செய்வோம். ரொம்ப மட்டமான ஒரு ஐடியாவை நம் மேலாளர் சொல்லும் போது, சார் அருமையான ஐடியா சார்..நிச்சயம் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு சொல்லுவோம். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும், நம்முடைய போலியான உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மை அழகாக காட்டிக்கொள்கிறோம்.</p><p>அழகு மாதிரியே தான் நாகரிகமும். இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஒரு இடத்தில் அல்லது ஒரு குழுவில் அழகு என்று சொல்லப்படும் ஒன்று மற்றொரு குழுவில் அழகில்லாமல் தெரியும். ஒவ்வொரு குழுவிற்கும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக நடிப்பதின் பெயர் தான் நாகரிகமோ என்ற சொல்லும் அளவிற்கு இருக்கிறது நாகரிகம். நம்ம ஊர்ல வெறும் கைகளால் சாப்பிடுகிறோம், சீனாவில்/கொரியாவில் எதற்கெடுத்தாலும் குச்சி கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். என்னை மாதிரி புதுசா பயன்படுத்துற பலருக்கு குச்சியில் எடுத்து சாப்பிட முடியாமல் போகும். அப்பொழுது கூட, ஒண்ணுமே சாப்பிடாம வந்தாலும் வருவோமே தவிர...கையில் மட்டும் சாப்பிட மாட்டோம்...நாகரிகம் : ) இது தான் அழகு, இது தான் நாகரிகம் என்று சொல்ல வரலைங்க..ஆனால் நமக்கு இப்படித் தான் விளங்கவைக்கிறாங்கன்னு தோணுது.</p><p>சமீபத்தில், என் தாய் தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்தோம். அதற்காக அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்றிருந்தோம். நிறைய கிராமங்களுக்கு சென்றோம். பெரும்பாலும் நான் இதற்கு முன்பு நான் செல்லாத இடங்கள். ஒருத்தவங்க வீட்டுக்கு போனோம். கூரை வீடு 8க்கு 8 அடி இருக்கும். சானம் மொழுகி, சுத்தமாக இருந்த மண் தரை. வறுமையின் அடையாளங்கள் அனைத்தும் நிறைந்த வீடு. இரண்டு சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். குரல் கொடுத்தோம். ஒரு அம்மா ஓடி வந்தாங்க. "அடடே...வாங்க....வாங்க....." என்று சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்றார். அவர் முகத்தில் அடுப்புக் கறி அடையாளங்கள். பற்கள் சற்று வித்தியாசமாக(மேல் தூக்கி) இருந்தது. முதற்கணத்தில் இவை அனைத்தையும் மூளை படம் பிடித்தது. உடனே அவர், அந்த சிறுவனை எழுப்பி, பக்கத்து வீட்ல போய் ஸ்டூல் கொண்டு வா..மாமா க்கு...என்று சொல்லியபடி...என்ன சாப்பிடுறீங்க...என்று கேட்டார். அவர் முகமெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு, சந்தோஷம். நான் பல இடங்களில் பார்த்த சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும், முற்றிலும் மாறாக இருந்தது. போலித்தனமே இல்லை. நம்ம மனசுக்கு அது அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. அட இது தான் அழகோ... நானெல்லாம் அசிங்கம் என்ற எண்ண வைத்தது.</p><p>எந்த ஒரு விஷயத்தையும் முதலில் உணர்ந்து கொள்வது நம் தலை தான். அதாவது, நம்முடைய கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புக்கள் தான் வெளியில் என்ன நடக்கிறது என்பதை சொல்பவை. இவைகள் வெறும் மெசெஞ்சர்கள் தான். நடப்பவைகளை இந்த உறுப்புக்கள் முதலில் மூளைக்கு கொண்டு செல்கின்றன. ஏன்னா மூளைக்கும், கண்-மூக்கு-காது போன்ற உறுப்புக்களும் டிஸ்டன்ஸ் கம்மி. ஆனால்,மனசு(அ) இதயம்னு நாம சொல்லிக்கொள்கிற மேட்டர் தலையிலிருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ். இதனால தான் என்னவோ....ஒருவரைப் பார்க்கும் பொழுது, ஒரு செயலை உணரும் பொழுது தலையின் உள்ளயே இருக்கும் மூளைக்கு முதலில் செல்வதால், முடிவை மூளையே எடுத்துக் கொள்கிறது. பெரும்பாலும், மனதிற்கு செல்ல விடாமல் செய்கிறது. </p><p>மூளை,போலியை பொலிவுபடுத்துகிறது நிஜத்தை நிராகரிக்கிறது.<br />அகம் (அ) மனசு உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது.</p><p>அகத்தின் அழகு முகத்தில் தெரியும் : )</p><p>கடைசியா என்ன தான் சொல்ல வர்ற என்று நீங்கள் கேட்பது புரியுது....தெரியல...அழகைப் பற்றி கொஞ்சம் யோசிச்ச போது எனக்கு தோன்றியவை இவை. சரியா தவறான்னு நீங்க தான் சொல்லணும் !<br /> </p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-25772909189214014142010-03-25T17:10:00.015+05:302010-03-26T10:46:35.970+05:30ECONOMICS -கொஞ்சம் லோக்கலா !<p>ரொம்ப நாளாவே ECONOMICS பற்றி ஒரு சின்ன பதிவு போடணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ரொம்ப விரிவா எழுத உள்ள சரக்கு இல்லாத காரணத்தால், பொதுவாக உபயோகப்படுத்தும் ECONOMICS வார்த்தைகளை கொண்டு ஒரு பதிவு இது. அதுவும் கொஞ்சம் லோக்கலா...</p><br /><p>பதிவுலகத்துல பல எகனாமிக்ஸ் ஜாம்பவாங்கள் எல்லாம் இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச எகனாமிக்ஸ் சொல்லி இருக்கேன். தவறான புரிதல் இருக்கலாம், ஏன் தப்பாக் கூட சொல்லி இருக்கலாம். குற்றம் குறை இருந்தால் சொல்லுங்க...தெரிஞ்சிக்குறேன்,திருத்திக்குறேன் !<br /><br /><strong>INFLATION :</strong></p><br /><p>படிக்குற சமயத்தில் பாக்கெட் மணி 20 ரூ தான். அதுலயே...5 சிகரெட், 3 டீ, 2 வெண்ணை பிஸ்கட், போக வர ப்ஸ் டிக்கெட் என எல்லா செலவுக்கும் போதும். ஆனால், இப்போ அதே 20 ரூபாய்ல 4 சிகரெட் மட்டும் தான் வாங்க முடியும். அதாவது, போன வருஷம் ஒரு ரூபாய்ல இரண்டு கடலை மிட்டாய் வாங்க முடிஞ்சுது, அதே ஒரு ரூபாய்க்கு இந்த வருஷம் ஒரு கடலை மிட்டாய் தான் வாங்க முடியுது. அப்போ கடலை மிட்டாய் INFLATION 50% அதிகரித்தது என்று பொருள். இது தான் INFLATION. ஆனால், இதை எந்தெந்த பொருட்களை வைத்து கணக்கிடுகிறார்கள்...முக்கியமான பொருட்கள் அனைத்து இரண்டு மூன்று மடங்கு விலை உயர Inflation 10% தான் இருக்குதாமே...! அதுமட்டுமல்ல, கடந்த வருடம் INFLATION 0% க்கும் குறைவாக இருந்த போது கூட எல்லாவற்றின் விலையும் உச்சத்திலேயே இருந்துச்சே...அது எப்படி ?</p><br /><p>அதனால, என்னைப் பொருத்த வரை, எகனாமிக்ஸ்லியே கிட்ட தட்ட ஒரு டுபாக்கூர் டேட்டா எதுன்னு பார்த்தோம்னா அது INFLATION தான்.</p><br /><p><strong>DIVESTMENT</strong></p><br /><p>கல்லூரிக் காலங்களில், கையில, கழுத்துல போட்டு இருக்க நகையை அடகு வச்சு,விற்று சரக்கு அடிப்போமே...அதே மாதிரி அரசிடம் உள்ள கம்பெனியின் பங்குகளை விற்று, தற்காலிகமாக துண்டு விழும் தொகையை சமாளிப்பது தான் DIVESTMENT. இந்த துட்டை வச்சிகிட்டு தான் ரோடு, பிரிட்ஜ் கட்டுவாங்களாம் ! நாம கொடுக்குற வரிப்பணம் என்ன ஆச்சுன்னு கேட்கக் கூடாது. உனக்கு economics தெரியாதுன்னு சொல்லிடுவாங்க பொம்மை சிங்கும், ப்ளேனிங்க் கமிஷனும் : ) !</p><br /><p><strong>Gross Domestic Product (GDP)</strong></p><br /><p>GDP- இதை வச்சி தான் நாட்டோட பொருளாதாரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிப்பாங்களாம். ஏழை நாடா...வளரும் நாடா, வளர்ந்த நாடா என கண்டுபிடிப்பாங்களாம்.</p><br /><p>நாட்டினுடைய Consumption, முதலீடு, ஏற்றூமதி, இறக்குமதி, அரசின் செலவுகள் இதெல்லாம் வச்சி, கூட்டி கழிச்சு இந்த GDP யை கணக்கு செய்றாங்க. GDP நல்லா இருந்தால், அந்த நாட்டு மக்கள் சூப்பரா இருப்பாங்க, கம்மியா இருந்தா கர்ம கொடூரமா இருப்பாங்கன்னு சொல்றது தான் இந்த GDP. நல்ல GDP உள்ள நம்ம நாட்டுல தான், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களே கிட்ட தட்ட 30 சதவிகிதம் மக்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். (அதாவது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 25 ரூபாய்க்கும் கம்மியா வருமானம் இருக்கவங்க தான் வறுமைக் கோட்டிற்கு கீழ இருக்கவங்க.) </p><br /><p>இது தான் India Growth Story : )</p><br /><p><strong>LIBERALISATION / GLOBALISATION</strong></p><br /><p>உங்க ஊர்ல நான் கடை போடுவேன்...எங்க ஊர்ல நீ கடை போட்டுக்கோ....இது தான் LIBERALISATION / GLOBALISATION.ஆனால், நம்ம இந்திய அரசு போடுகிற டீல்ஸ் எல்லாம் ரொம்ப வித்யாசமானது. நாமலே....தேடிப் போய் ஆப்பு மேல உட்கார்ந்துக்குற மாதிரியான டீல்கள் தான் பெரும்பாலும். நியூக்ளியர் டீல் இதற்கு உதாரணம். அதாவது, இந்தியாவிற்கு அணுஆயுத தொழில்நுட்பம், மின்சாரம் போன்றவற்றிற்கு நாங்க உதவுகிறோம். ஆனா, சின்ன கண்டிஷன். அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது. எங்க ஊர் கம்பெனிங்க தான் இந்தியாவில் கடை விரிக்கும். அதில் வரும் லாபம் மொத்தம் எங்களுக்கு. ஆனால், அணுஆயுத விபத்து ஏற்பட்டால், நாங்க நஷ்ட ஈடு தரமாட்டோம். அதை இந்தியாவே கொடுக்கணும்...இப்படி ஒரு அதிபுத்திசாலி டீல். இதே மாதிரி தான் பிடி கத்திரிக்காய் கதையும்.</p><br /><p>ஆஹா...இந்தியா ஒரு லிபரலைஸ்டு எகானமி : ) !<br /><strong></strong></p><br /><p><strong>SUBSIDY</strong></p><br /><p>ஹ்ம்....இதை எப்படி சொல்றது..சரி...<br />உதாரணமா, அரசு, 2500 ரூபாய்க்கு ஷிவாஸ் ரீகல் விஸ்கியை வாங்கி, நம்ம சந்தோஷத்துக்காக 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதற்கு அரசு வழங்கும் மானியம்1000 ரூபாய். இது தான் SUBSIDY. பெட்ரோலியப் பொருட்களை சர்வதேச விலைக்கு வாங்கி, நம்ம ஊர் மக்கள் வாங்குற அளவுக்கு விலையைக் குறைத்து, அதன் இழப்பை அரசு மானியமாகத் தருகிறது.</p><br /><p>இவ்ளோ கஷ்டப்பட்டு அரசு மானியம் கொடுக்குறது சரி...அப்புறம் எதுக்கு, அதே பொருட்களுக்கு மத்திய அரசு தனியா வரி, மாநில அரசு தனியா வரி விதிக்கணும்...அமெரிக்கா போன்ற உலக நாடுகளை விட இந்தியாவில் தான் பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகமா இருக்குன்னு நீங்க கேள்வி கேட்டால்.....அதை அப்படியே நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் தான் forward பண்ணனும் : )<br /></p><br /><p><strong>RATE HIKE:</strong></p><br /><p>கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி எகனாமிக் டைம்ஸ் பேப்பர் படிக்குறதுக்கே பயமா இருக்கும். பல வார்த்தைகள் கேள்விப்படாதவைகளாக,தெரியாதவைகளாக இருக்கும். அதுல ஒண்ணு இந்த வட்டி விகித உயர்வு. ஏன் உயர்த்துறாங்க...ஏன் குறைக்குறாங்கன்னு புரியாமலே இருந்துச்சு...</p><br /><p>ஆனால், இப்போ சின்னக் குழந்தைங்க கூட கரெக்டா சொல்றாங்க....GDP குறையப் போகுதா.....வட்டியை குறை...நிறையபேரு கடன் வாங்குவான், பணப்புழக்கம் ஏற்படும், எகனாமி வலுவு பெரும்......Inflation ரொம்ப ஜாஸ்தியா போகுதா வட்டியை ஏற்று..எவனும் கடன் வாங்கமாட்டான், பணப்புழக்கம் குறையும்...Inflation உம் குறையும்....இது இரண்டுத்தையும் கரெக்டா பேலன்ஸ் பண்ற வேலையைத் தான் நிதி அமைச்சகம், ப்ளானிங்க் கமிஷன் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்றாங்களாம் !</p><p>ஹ்ம்ம்...அதென்னவோ போங்க.....இந்தியாவின் GDP வளரும் போது மட்டும், எங்கள் அரசின் பொருளாதாரத் திட்டத்தில் தான் இத்தனை சதவிகிதம் வளர்ச்சின்னு மார் தட்டுற சிங்கங்கள், விலை ஏற்றம் ஏன் ? என்று கேட்டால் உலகப் பொருளாதார வீழ்ச்சின்னு சொல்ல எப்படித் தான் மனசு வருதோ...தெரியல..</p><p>பொள்ளாச்சியில் விளைகிற தக்காளி விலை ஏற்றத்துக்கும், பஞ்சாப்பில் விளைகிற நெல், பருப்பு போன்ற பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் கூட உலகப் பொருளாதார வீழ்ச்சி தான் காரணம்னு சாமர்த்தியமா எதையாச்சம் சொல்லி, ஜனங்கள நம்பற வைக்கிற, எகனாமிக்ஸ்ட்களின் திறமை நம்ம கிட்ட இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் !</p><p> </p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-62846771570846960622010-03-19T17:03:00.034+05:302010-03-22T15:05:52.605+05:30Pre-KG க்கே கிழியுதே !"என்னங்க....நம்ம தீபுவுக்கு 2 1/2 வயசு ஆகுது....Pre-KG சேர்க்கணும்...எதாச்சும் ஸ்கூல் பார்த்தீங்களா ? இல்லையா ? நம்ம வீட்ல இருந்து ஒரு கிமீ தூரத்துக்குள்ள இருக்கணும். குழந்தையை நல்லா பார்த்துக்கணும். எத்தனை தடவை சொல்லிட்டே இருக்குறது...பொறுப்பே இல்லாம இருக்கீங்களே...மத்தவங்க எல்லோரும் அவங்க அவங்க பிள்ளைங்களுக்கு எப்படி எல்லாம் தேடுறாங்க...நீங்க மட்டும் ஏங்க இப்படி இருக்கீங்க...." என்று தங்கமணி மறுபடியும் ஒரு அலர்ட் விட்டாங்க.<br /><br />சரிம்மா. இன்னைக்கே போய் ஒரு நாலு ப்ளே ஸ்கூல் பார்ப்போம். எது நல்லா இருக்குன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..அதுல சேர்த்துடலாம்.. என்று சொல்லி பையனை கூட்டிட்டு கிளம்பினோம்.<br /><br />ஏங்க...வெங்கட்நாராயணா ரோட்டுல நான் ஒரு ப்ளே ஸ்கூல் பார்த்தேங்க....நல்லா இருக்க மாதிரி தெரியுது....அதுக்கே முதல்ல போவோம் என்று தங்கமணி ஆணை பிறப்பிக்க, நேராக அந்தப் ப்ளே ஸ்கூல்க்கு போனோம். மாடியில் ஒரு வாடகை வீடு. அது தான் ப்ளே ஸ்கூல். கொஞ்சம் நேரம் கழிச்சு ஒரு பெண்மணி வந்தாங்க. Admission Enquiryக்காக வந்திருக்கீங்களா...இருங்க மேடம் வருவாங்க என்றார்.<br /><br />சரி. அவங்க வர்றதுக்குள்ள, லைட்டா ஸ்கூல் உள்ள எட்டிப் பார்த்தேன். ஏறக்குறைய 30 பசங்க இருந்தாங்க. 1 சறுக்காமரம்(Slider),1 சீ சா, வீடு முழுக்க ஸ்டிக்கர், ஒரு ஆயா, ஒரு மேடம். ஓஹோ...இது தான் ப்ளே ஸ்கூலா....அட பெரிய முதலீடே இல்லாம, இப்படி ஒரு அருமையான தொழிலா ? என்று நினைச்சிட்டே இருந்தேன். மேடம் வந்துட்டாங்க.<br /><br />ஒரு சில விசாரிப்புக்களுக்குப் பிறகு, 1 1/2 வயசுக்கு Day Care, 2 வயசு ஆச்சுன்னா ப்ளே ஸ்கூல், 2 1/2 வயசுக்கு Pre-KG, உங்க பிள்ளையை எதுல சேர்க்க வந்திருக்கீங்க என்றார். 2 1/2 வயசு ஆயிடுச்சு...தீபு வை Pre-KGல சேர்க்கணும். என்றோம். என் மகனிடம், பெயர், அப்பா பெயர்,ஊர் பெயர் என அவர்கள் கேட்ட விஷயங்களுக்கு பதில் சொன்னான்.<br /><br />உங்க பையன் ABCD சொல்லுவானா ? என்று கேட்டாங்க மேடம். உடனே...அபியும் நானும் படம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு...உங்க பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா? என்று பிரின்சிபல் கேட்பார். இல்லைங்க மேடம்...இப்போ தான் நடக்கவே ஆரம்பிச்சிருக்கா...என்பார் பிரகாஷ்ராஜ். இல்லைங்க மேடம்...இப்போ தான் ABCD சொல்லி கொடுத்துட்டு இருக்கோம். சரி. இங்கிலீஷ் ரைம்ஸ் ஏதாச்சும் சொல்லு தீபு என்றார் என் மகனிடம். நார்மலா ஒண்ணு ரெண்டு வரி ரைம்ஸ் சொல்றவன், அவங்க கேட்டப்ப, வாயே திறக்கல. சரி தீபு, அதோ அது என்ன என்று கையை நீட்டி கேட்டார். அது என்னடான்னு நான் திரும்பி பார்த்தேன். கண்ணன் வெண்ணை சாப்பிடுற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. தீபு, கண்ணா ஜேஜி சொல்றா என்றேன். "டேடி, வெளியில ஆட்டோ டுர்ர்ர்ன்னு போகுது...டேடி" என்றான் வெளியில் எட்டிப் பார்த்தபடி. அந்த மேடம் குறுக்கிட்டு, அது கேலண்டர் என்றார். அடங்கொய்யால, கண்ணன் படத்தைத் தான் கேட்டாங்கன்னு நினைச்சா...அதுக்கும் கீழ ஒரு கேலண்டர் தொங்கிட்டு இருக்கு. அது, நமக்கே தெரியல.<br /><br />மேஜையில் ஒரு flower vase வச்சிருந்தாங்க. தீபு, அந்த Flower என்ன கலர் சொல்லு பார்க்கலாம் என்றார் மேடம். Sun Flower என்று சொல்லிவிட்டு, என்னை திரும்பிப் பார்த்தான். டேய் ராசா...எனக்கு அது என்ன பூன்னு தெரியாதுடா...ஆளை விட்டுறுடா என்ற பாணியில் பார்த்தேன். உடனே மேடம் குறுக்கிட்டு...நோ நோ....அது Daisy என்றார். நல்ல வேலை, நம்மல கேட்கல என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். சரி தீபு, மேடம்க்கு ஒரு திருக்குறள் சொல்லுடா என்றதும், தங்கமணி சொல்லிக் கொடுத்த 3 திருக்குறளை அப்படியே சொன்னான். ஹோ...தமிழ் தான் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா என்றார் மேடம்.<br /><br />சரிங்க ஃபீஸ் 22000 ரூ. ரிஜிஸ்ட்ரேஷன் 100 ரூ, இன்னைக்கே பண்ணிக்கோங்க. மூன்று நாட்களுக்குள் மொத்த ஃபீஸ் பே பண்ணிடனும் என்று மெயின் மேட்டருக்கு வந்தார். அடேங்கப்பா....22000 ரூபாயா ? Govt பொறியியல் கல்லூரியில், என்னுடைய 4 வருட படிப்பின் மொத்த கட்டணமே 11500 ரூபாய் தானே. Pre-KGக்கே நம்ம ட்ரவுசர் கிழியுதே, அடுத்து ஸ்கூல் காலேஜ்னா....அடேங்கப்பா...சுமாரா வருமானம் வருகிற பொட்டி தட்டுற வேலையில இருக்க நமக்கே இப்படின்னா....குறைவா வருமானம் இருக்கவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க... என்று நினைத்துக் கொண்டேன்.<br /><br />தங்கமணி, ஸ்கூல் டைமிங்க்ஸ் பற்றி விசாரிச்சாங்க. இந்த வருஷம் 9 AM -12 AM, ஆனா, இப்போ syllabus அதிகப் படுத்துறாங்க....நிறைய montessori materials கொடுக்குறாங்க...அதனால 9 AM -1:30 AM வரைக்கும் ஸ்கூல் இருக்கும் என்றார். தங்கமணிக்கு ஒரே ஷாக்...ஐயோ...குழந்தையை 4 1/2 மணி நேரம் தனியா விடணுமா...என்று யோசனையில் மூழ்கினார். சரிங்க மேடம், நாளைக்கு வந்து சொல்றோம் என்று கிளம்பினோம். மேடம் குறுக்கிட்டார். எவ்வளவோ சமாளித்துப் பார்த்தாலும், ரிஜிஸ்ட்ரேஷன் இன்னைக்கே பண்ணிக்கோங்க...என்று ஒற்றைக் காலில் நின்றார். மேடம், அவ்ளோ காசு என்னால உடனே புரட்ட முடியாது என சொல்லி எஸ்கேப் ஆனோம்.<br /><br />அது என்னவோ, தங்கமணிக்கு அந்த ஸ்கூல் பிடிக்கல.அதன் பிறகு, இன்னும் இரண்டு ப்ளே ஸ்கூல் போய் பார்த்தோம். அதே வாடகை வீடு, அதே சருக்காமரம், அதே மாதிரி மேடம், அதே மாதிரி கட்டணம். வீட்டில் இருப்பதற்கும், பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதாக வேறுபாடு இருக்க மாதிரி தெரியல. ஏன்மா...பேசாம, டைரக்டா அடுத்த வருஷமே LKG சேர்த்துடலாமே... .இல்லைன்னா...2 or 3 months மட்டும் நம்ம பக்கத்து வீட்ல சின்னதா ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கே...அதுல சேர்த்துடலாமா? சும்மா போய் விளையாடிட்டு வரட்டும்... நம்ம குழந்தைப் பருவ காலங்களில் எல்லாம், நல்லா விளையாடுவோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் திருடன் போலீஸ், கண்ணாமூச்சி என நமக்கெல்லாம் நல்லா விளையாடும் வாய்ப்புக்கள் இருந்துச்சு. ஆனா, இப்போ, குழந்தைகளை வெளியில் விளையாட விடுறோமா ? அக்கம் பக்கத்துல யாரு இருக்காங்கன்னே நமக்கு தெரியாது. குழந்தையும் நம்ம மூஞ்சியையே 24 மணி நேரமும் பார்த்துட்டு இருக்கு. டேய்...அதைப் பண்ணக் கூடாது, அந்தத் தண்ணியை குடிக்கக் கூடாது, அதைத் தொடக் கூடாது, அதுல ஜெர்ம்ஸ் இருக்கு...இதுல பேக்டீரியா இருக்கு...இதைத் தொட்டா ஜூரம் வரும். இப்படி, இதையெல்லாம் கேட்டு கேட்டு குழந்தைங்க மனசுக்குள்ள நம்மல பச்சை பச்சையா திட்டுற மாதிரியே எனக்கு ஒரு பீலிங்க் : ) ..இதற்கு ஒரு வ்டிகாலாகத் தான், பிள்ளைகளை ப்ளே ஸ்கூல் அனுப்பணும்குறது என்னுடைய கருத்து. என்னம்மா சொல்ற...என்றேன்.<br /><br />நீங்க வேற, உங்களுக்கு ஒண்ணுமே தெரிய மட்டேங்குது... LKG சேர்க்கும் போது, Pre-KG அனுப்பினீங்களா இல்லையான்னு கேட்பாங்க......இதெல்லாம் LKG admissionக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும். தமிழ்மணத்துல,தமிழிஷ்ல இன்னைக்கு யார் அதிக ஓட்டு வாங்கி இருக்காங்க...யார் இந்த வார நட்சத்திரம்.....எந்த ப்ளாக்ல சண்டை ஓடுது....நீங்க அடிச்ச கமெண்ட்டுக்கு யார் உங்களை திட்டி இருக்காங்க....அதையேப் போய் பாருங்க.... என்றார் ஒரு கொதிப்புடன்.<br /><br />தேடல் தொடரும் : ) !கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-57348129259058922842010-02-04T16:35:00.033+05:302010-02-05T13:02:29.780+05:30கிராமத்துப் பாரிஜாதமா ?? நகரத்துப் பிரதிக்க்ஷா வா?<p>கிராமத்துப் பொண்ணா ? நகரத்துப் பொண்ணா ? இதுல, எந்தப் பெண் உனக்கு மனைவியாக வரணும்னு ஆசைப்படுவ ? என்று ஆண்களிடம்(தமிழக) ஒரு கேள்வி கேட்டால், பெரும்பாலானவர்களிடமிருந்து, கிராமத்துப் பொண்ணு தான் என்று சடார்னு ஆணித்தரமா பதில் வரும். </p><br /><p>அது என்னடா பொண்ணுல, கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு அப்படிங்குற வித்யாசம். இதுல நம்மாளுக்கு ஏன் கிராமத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு பிரியம், நகரத்துப் பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு என கொஞ்சம் அலசுவோம்.</p><br /><p>கடைசியில் போட வேண்டிய டிஸ்கிய பதிவிலேயே சொல்லிடுறேன். பொதுவாக ஆண்களின் எண்ணத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம். எல்லா ஆண்களும் இப்படித்தான்னு நான் சொல்ல வரலைங்க. எல்லா கிராமத்துப் பொண்ணும் இப்படித்தான், எல்லா நகரத்துப் பொண்ணும் இப்படித்தான்னு சொல்ல வரல.<br />ஆலமரம், நாட்டாமை, சொம்பு எல்லாம் இங்க இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் : ).</p><br /><p>சரி மேட்டர்க்கு வருவோம்.</p><br /><p>பொதுவாகவே ஒரு மெண்டாலிட்டி. கிராமத்துப் பொண்ணுன்னா(பாரிஜாதம்), அடக்க ஒடுக்கமா இருப்பாள், குடும்பத்து நிலைமையை அனுசரிச்சு நடந்துப்பாள், சொந்த பந்தங்களிடம் நன்றாக நடந்துப்பாள், உள்குத்து வெளிக்குத்து தெரியாத வெகுளியா இருப்பாள். மொத்தத்தில எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டாள். சந்தோஷமா குடும்பத்தை ஓட்டலாம் என்பது நினைப்பு. </p><br /><p>நகரத்துப் பெண் (பிரதிக்க்ஷா), ஈகோ புடிச்ச பொண்ணு, ரூல்ஸ் பேசுபவள்.குடும்பத்தை அனுசரிக்கத் தெரியாதவள், உள்குத்துக்களின் ராணி, கூட்டுக் குடும்பத்தினை உடைக்க வந்த உளவாளி. கிட்ட தட்ட, ஆப்பைத் தேடி தானே உட்கார்ந்து கொள்வது மாதிரி நினைக்குறாங்க. </p><br /><p>இந்த மாதிரி ஒரு definition கொண்ட பெண் தான் கிராமத்துப் பெண், நகரத்துப் பெண் என ஸ்ட்ராங்கா மண்டையில ஏற்றிவிட்டிருக்காங்க. சும்மா ஒரு அடையாளத்துக்குத் தான் இந்த கிராமத்துப் பெண்,நகரத்துப் பெண் என்ற பெயர்களெல்லாம். எல்லா ஊர்களிலும் இவ்விருவரும் இருக்காங்க.</p><br /><p>கிராமத்துப் பொண்ணு, நகரத்துப் பொண்ணு சாதக-பாதகங்கள் என்ன ? ஏன் நம்மாளு கிராமத்துப் பொண்ண prefer பண்றார்னு பார்க்கலாம்.</p><p><br /><strong>ஏன் மா, இன்னைக்கு சனிக்கிழமை...வீக் எண்ட்... பீச் போகலாமா...?</strong></p><p><em>பாரிஜாதம் : </em>ஹ்ம்ம் போகலாங்க...!<br />(பட்ஜெட் பத்மனாபி : ) )<br /><em>பிரதிக்க்ஷா :</em>பீச் வேணாம்ங்க....முதல்ல கிளம்பி, பிட்சா கார்னர் போயிட்டு ஒரு Combo Pack முடிச்சிட்டு...அப்புறம் மாயாஜால் போயிட்டு சினிமா பார்த்துட்டு, அப்படியே வரும்போது அஞ்சப்பர்ல டின்னர் முடிச்சுட்டு வந்துடுலாம்ங்க...<br />(ராயல் சீமா ராஜலக்ஷ்மி : ) )</p><p><strong></strong></p><p><strong>என்ன மா, நேத்து வச்ச, அதே குழம்பை ஃப்ரிட்ஜ்ல வச்சி கொடுக்குற, வேற செய்யக் கூடாதா ?</strong></p><p><em>பாரிஜாதம் : </em>கடைக்குப் போகணும். வீட்ல ஒண்ணுமே இல்லை. உங்க கிட்ட நேத்தே சொன்னேன் நீங்களும் மறந்துட்டீங்க.<br /><em>பிரதிக்க்ஷா :</em>ஏன், இதுக்கு முன்னாடி நேத்து வச்ச குழம்பு, நீங்க சாப்பிட்டதே இல்லையா ? அவ்வளவு பாக்குறவர், நேத்தே, நான் கேட்டதை வாங்கிட்டு வர வேண்டியது தானே...!</p><br /><p><strong>எங்க அக்காவோட கல்யாண நாள் வருது. புடவை எடுத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன்....நீ வர்றீயா...</strong></p><p><em>பாரிஜாதம் :</em>நான் வர்றேங்க....உங்க அக்கா கிட்ட சிவப்பு கலர், ராமர் கலர் புடவை எல்லாம் இருக்கு, மயில் கழுத்துக் கலர்ல வஸ்திரகலா பட்டு எடுத்துக் கொடுப்போம்ங்க. போத்தீஸ் போலாம்...<br /><em>பிரதிக்க்ஷா :</em> ஹ்ம்ம்...வர்றேங்க...உங்க அக்காவுக்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்ல போய் ஒரு அருமையான காட்டன் சேரி எடுத்துட்டு....அப்படியே அங்க இருந்து நல்லி சில்க்ஸ் வந்து, எங்க அம்மாவுக்கு ஒரு சில்க் காட்டன் புடவை எடுத்துட்டு வரலாம்ங்க... </p><p>இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட, கிராமத்துப் பெண்ணின் அணுகுமுறையும், நகரத்துப் பெண்ணின் அணுகுமுறையும் பெருமளவு வித்தியாசமா இருக்குங்க. அதுல கிராமத்துப் பெண்ணின் அப்ரோச் நல்லா இருக்க மாதிரி தெரியுது. </p><p>சரி இதையெல்லாம் ஒரு புறம் யோசிச்சுப் பார்த்தாலும், நமக்குள்ள ஒரு சின்ன டவுட்...</p><p>நம்மாளு பயப்படுறாரோன்னு ஒரு சந்தேகம். இன்றும் கூட, பொதுவாகவே பெண் தேடும் போது தன்னைவிட குறைவா படிச்ச, தன்னைவிட குறைவா சம்பாதிக்குற பெண்ணைத் தான் நம்மாளு தேடுவார். இது தான் பேசிக் மாதிரி ஆயிடுச்சு. ஆக, தன்னைவிட எதிலும் உயர்வான பெண்ணை ஏற்றுக் கொள்ளும் மனம் வரவில்லையோ ? </p><p>அதுவும் இல்லாம, நம்முடைய வீட்டு சூழல் பார்த்தீங்கன்னா, நம்ம அப்பா, அம்மாவை பார்த்து வளருகிறோம். பெரும்பாலான, வீடுகளில் அப்பா ரொம்ப டாமினண்ட் இருப்பார்(அந்த காலத்துல). அம்மா அமைதியா அப்பா சொல்லை எதிர்த்துப் பேசாமல், அப்படியே நடக்கக் கூடியவராக இருப்பார். அதைப் பார்த்தே வளர்ந்த நம்மாளு, நமக்கு வரப் போகின்ற மனைவியும் கிட்ட தட்ட அதே மாதிரி வேணும்னு எதிர்ப்பார்க்குறான்னு நினைக்கத் தோணுது.</p><p>குடும்பம் நடத்துறதுல இரண்டே ஆப்ஷன்ஸ் தான். ஒண்ணு, சிதம்பர ஆட்சின்னு நாம சொல்றது. அதாவது ஆண் தான் CEO. இன்னொன்று மதுரை ஆட்சி,அதில் பெண் தான் CEO. ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்,ஒரு அதிபர் மாதிரி, ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைவர் தான். இந்த வகையில் பார்க்கும் போது, கிராமத்துப் பெண்ணை மணந்தால், அந்தத் தலைவர் பதவி நமக்கே கிடைக்கும் என்று நம்மாளு நினைக்கிறாரோ? நம்மாளு தான் CEO என்றால், கூட்டுக்குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.</p><p>இப்படி நம்மாளு கிராமத்துப் பெண்ணைத் தேடுவதில் பல காரணங்கள் இருக்கு.</p><p>பெண் என்று பார்த்தால் அனைவரும் ஒன்று தான். எல்லோருக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரியான குணம் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தும் முறைகளில் தான் மாற்றமே தவிர, அடிப்படையில் இருவருமே ஒரே மாதிரி தான்!</p><p>சரி, கடைசியா ஒரே ஒரு கேள்வி, பார்த்திபன் கனவுல உங்களுக்கு புடிச்சது (பாரிஜாதம்)சினேகாவா ?<br />(பிரதிக்க்ஷா) சினேகாவா?</p><p></p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-73416571911372424892010-01-09T11:01:00.008+05:302010-01-09T11:27:18.938+05:30எஸ் ஐ உசுரு, அமைச்சருக்கு மசுரு!சமீபத்தில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தது அனைவரும் அறிந்ததே. அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லாத காட்டு மனிதர்களாக நாம் இருந்தாலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு பதிவுக்குள் செல்வோம்.<br /><br />டிவி நியூஸ்ல பார்த்தேன். யாரோ ஒருவர் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். தலையில் பலத்த காயத்துடனும், ஒரு கால் துண்டுபட்ட நிலையிலும், துடித்துக் கொண்டிருக்கிறார். உதவி கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் அமைச்சர்களின் வாகனங்கள், மற்றும் பாதுகாப்பு அலுவலர்களின் வாகனங்கள் வருகிறது. உடல் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விளையாட்டு அமைச்சர் மொய்தீன் கான் மற்றும் மாவட்ட கலெக்டர், ஹெல்த் செக்ரடரி என அனைவருமே அந்த இடத்தில் இருக்கின்றனர்.. காரை விட்டு யாருமே வெளியே வரவில்லை. 8 நிமிடம் கழித்து கலெக்டர் காரிலிருந்து வெளியில் வந்து ஆம்புலன்சிற்கு போன் செய்கிறார். ஆம்புலன்ஸ் வரத் தாமதாகும் என்று கலெக்டர் உணர்கிறார். 20 நிமிடங்கள் வரை அமைச்சர் காரிலேயே அமர்ந்திருக்கிறார். பிறகு வந்து விசிட் அடிக்கிறார். பிறகு கலெக்டரின் உத்தரவுப்படி பாதுகாப்பு அலுவலர்களின் வாகனத்தில் குத்துயிரும், கொலைஉயிருமாய் இருந்த எஸ் ஐ வெற்றிவேலை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால், வழியிலேயே பரிதாபமாக உயிர் இழக்கிறார்.<br /><br />என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அப்படி துடித்துக்கொண்டு உதவிக்காக கதறுகிறார், ஒருத்தர் கூட உதவி செய்யல. இதே மாதிரி நாம அடிப்பட்டு கிடந்து, சுற்றி எல்லோரும் இருந்து, எல்லா அதிகாரியும், அமைச்சரும் இருந்து, நம்மை காப்பாற்ற யாரும் வரலைன்னா எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். ஐயோ....ரொம்ப கொடுமை.<br /><br />கொஞ்சம் முன்னாடியே யாராவது கூட்டிட்டுப் போய் இருந்தால் இந்நேரம் அவர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும்.<br /><br />வெற்றிவேலின் நிலைமையில் நாம இருந்தோம்னா, அந்தக் கடைசி உயிர் பிரியுற நேரத்துல நிஜமா என்ன நினைச்சு இருப்போம்? அவருடைய அந்த நிலைமை எப்படி இருந்திருக்கும்னு நமக்கு தெரியாது. இருந்தாலும், அவர் நிலைமையில் இருந்தால், இப்படித் தான் நான் நினைச்சு இருப்பேன்.<br /><br />எத்தனை தடவை இதே அமைச்சர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இரவெல்லாம் கண்விழித்து வேலை பார்த்திருப்போம். அரசியல் கும்பல் தலைவர்கள் வீட்டு கல்யாணத்திலிருந்து, காரியம் வரை எவ்வளவு செஞ்சி இருப்போம். இந்த நேரத்துல பக்கத்துல இருக்க ஒரு ஆஸ்பித்திரிக்கு கூட கொண்டு போய் சேர்க்க மாட்றாங்களே ! நாம செத்துக்கிட்டுறுக்கோம்...காரை விட்டே வெளிய வரமாட்டேங்குறாங்க...... எத்தனையோ முறை உங்களின் கார் கதவுகளை ஓடி வந்து திறந்துவிட்டிருக்கேன். இப்பொழுது என்னுடைய குருதியின் நாற்றம் உங்கள் கார்களை சேதப்படுத்தும் என்று, எட்ட நின்று வேடிக்கைப் பார்க்கிறீர்களா? உங்கள் வீட்டு மனிதர்கள்... வேண்டாம்..அவங்க நல்லா இருக்கட்டும், உங்க வீட்டு நாய் அடிபட்டிருந்தால் இதே மாதிரி தான் நடந்து கொண்டிருப்பீர்களா? உடல் சிதைந்து குருதி பீய்ச்சும் வலியை விட, என் உயிரை காப்பாற்ற ஒருவரும் வரலியே அப்படிங்குற மன வேதனை தான் அதிகமா இருந்திருக்கும்.<br /><br />இது நார்மல் தானே. இங்க சிட்டிலேயே, ஆக்சிடெண்ட் ஆகி அடிபட்டவங்களை ஒரு பரிதாப லுக் விட்டுட்டு, ஆண்டவா காப்பாத்திடுப்பா ந்னு ஒரு வேண்டுதலை போட்டுட்டு, டைம் பாத்துட்டு, அடிபட்ட மனுஷன கண்டுக்காம போறாங்களே...அப்படின்னு கேட்கலாம். பெரும்பாலான சமயங்களில், விபத்துக்களில் காயம் பட்டவர்களை நல்லுள்ளம் படைத்தவர்கள் உடனடி சிகிச்சை கொடுப்பதை எல்லோரும் பார்த்திருப்போம். அப்பாடி, அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க...அப்படின்னு ஒரு திருப்தி இருக்கும். சிறு காயமாக இருந்தால், அவர்களின் வாகனத்தை ஓரம் கட்டி, அவருக்கு முதலுதவி செய்வதை எல்லாம் பாத்துட்டுத் தானே இருக்கோம்.<br /><br />இங்க வெற்றிவேலுக்கு நடந்த விஷயம் அப்படியல்ல. அவர் நல்லவரா, கெட்டவரா, பின்னணி,என்ன செய்தார் அது இப்போ தேவையில்லாத விஷயம். ஒரு மனுஷன் வெட்டுபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். சக மனுஷனா இருந்தா காப்பாற்ற முயற்சி செய்யணும். ஒரு காகத்திற்கு அடிபட்டதை பார்த்த மற்றொரு காகம், கரைந்து ஒரு கூட்டத்தையே அழைக்குமாம் உதவி செய்ய. அவைகளுக்கு இருக்கும் உணர்வு கூட நம் அரசியல் வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் இல்லாதது ரொம்ப கொடுமை.<br />மக்களின் சேவையே எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லி, எப்படி தான் உங்களுக்கு ஓட்டு கேட்க மனசு வருதோ தெரியல ?<br /><br />சாதாரண ஆளுங்க, இந்த மாதிரி சமயத்துல பெரும்பாலும் பயப்படுவது, ஏதாவது போலீஸ் கேஸ் ஆயிடுமோ...நமக்கு எதுக்கு வம்பு என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் அடிபட்டு உதவிக்காக கதறுகிறார், அதற்கான உரிய அதிகாரிகளே அந்த இடத்தில் இருந்தும், போதாக்குறைக்கு அமைச்சர்களே இருந்தும் இப்படி நடந்திருப்பது மகாக் கேவலம். இரக்கமில்லா மந்திரிகள்(மனிதர்கள்) என்று தான் சொல்லணும்.<br /><br />காரை விட்டு வெளியே கூட வராமல், அமைச்சர் உட்கார்ந்திருக்கிறார் என்றால், சாமானியனின் உயிர், உங்களுக்கு ம....ஆக கூட தோன்றவில்லை என்றே தெரிகிறது.<br /><br />சரிங்க...என்ன பண்றது டிவி பார்த்ததுல இருந்து, ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுச்சு அதான் கொட்டி தீர்த்துட்டேன்.<br /><br />ஜக்குபாய் திருட்டு டிவிடி ரிலீஸ் ஆனதுக்கெல்லாம், வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு ஓரிரு மணித்துளிகளில் ஆக்ஷன் எடுத்த திராவிட சிங்கங்களின் அரசு, இந்த மேட்டர்ல கவனிக்குறது மட்டுமில்லாமல், அந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சேர்த்து கவனிக்குறது தான் வெற்றிவேலின் ஆத்மா சாந்தியடைய உதவும்!<br /><br /><div align="center">குருதி சுகாதாரமற்றது என </div><div align="center">சுகாதாரத் துறை அமைச்சகம் நிராகரிக்க,<br />இது ரவுடிகளின் விளையாட்டு என</div><div align="center">விளையாட்டுத் துறை அமைச்சகம் விலக,</div><div align="center">ஆட்சித்துறையோ அலட்சியப்படுத்த,<br />அரசாங்கமே இருந்தும்,<br />உதவிக்கு நாதியற்று கிடந்தார் வெற்றிவேல்.</div><div align="center"><br />மறித்தது அவர் உயிர்மட்டுமல்ல,<br />நம் மனித நேயமும் தான்!</div><div align="left"> </div>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-14348013532069254162009-11-19T00:35:00.017+05:302009-11-19T10:41:30.646+05:30Curly Hair,Very Fair -RHYMES நமக்காகவா?<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">"ஏங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க....எப்ப பார்த்தாலும் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு நியூஸ் பாக்குறதே வேலையா போச்சு......இங்க வாங்க, நம்ம பையன் ரைம்ஸ் சொல்றான், இங்க வந்து கேளுங்க...." என தங்கமணி சவுண்ட் விட, நானும் போனேன்.<br />"தீபு, டேடிக்கு RHYMES சொல்லி காமி டா..." என்றாள்.</span></p><p><span style="font-size:85%;">Chubby Cheeks,Dimple Chin</span></p><p><span style="font-size:85%;">Rosy Lips,Teeth within</span></p><p><span style="font-size:85%;">Curly Hair,Very Fair</span></p><p><span style="font-size:85%;">Eyes are blue,Lovely Too</span></p><p><span style="font-size:85%;">Mummy's pet, is that you? Yes...Yes...Yes...</span></p><p><span style="font-size:85%;">Very Good..Super da கண்ணா...என பாராட்டிவிட்டு, டிவி பார்க்க திரும்பினேன். அப்போ தான் யாரோ டார்ட்டாய்ஸ் கொசு வத்தியை முகத்துக்கு முன்னாடி சுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்க். ஆமாங்க ஃப்ளாஷ் பாக் தான். ஆஹா...நம்மளும் இப்படி தானே பாடியிருப்போம். என் பையன் பரவாயில்லை கொஞ்சம் கலர். நானெல்லாம், கிட்ட தட்ட தார் கலர் ஆச்சே. நம்ம கூட இந்த பாட்டை சிரிக்காம பாடியிருக்கோமேன்னு தோணுச்சு. குழந்தைங்க என்ன செஞ்சாலும், எது பாடினாலும் ரசிக்கும் படியாகத் தான் இருக்கும் என்பது வேறு விஷயம். இருந்தாலும் அந்த பாடலின் அர்த்தத்தை நினைத்துப் பார்க்கும் போது, இந்தப் பாடல், நம்ம நாட்டு குழந்தைகளுக்கு ஏற்புடையதான்னு யோசிக்கத் தோணுச்சு.</span></p><p><span style="font-size:85%;">ஆரம்பப் பள்ளிக் காலங்களில், காலம் காலமாக நாம் பயின்று வரும் ஆங்கில RHYMES என்கிற பாடல்கள் நமக்கு ஏற்ற மாதிரி இருக்கான்னு ஒரு சின்ன அலசல். முதலில் இந்தப் பாடலையே எடுத்துப்போம்.</span></p><p><span style="font-size:85%;">"chubby cheeks"<br />ஒரு வேளை உணவிற்கே வழியில்லாமல், குழந்தைகளை வேலைக்கு அனுப்பினாங்க பெத்தவங்க..."சாப்பிட சோறே இல்லாத போது எந்தக் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாங்க பெத்தவங்க...இலவசமா பள்ளிக் கூடத்துல சாப்பாடு போடுங்க....கல்வியும் கொடுங்க..." என சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து கல்விப் புரட்சியைத் தொடக்கியவர் காமராஜர். இப்படி கன்னம் ஒட்டி போய், மெலிந்து வரும் குழந்தைகள் பாடும் பாட்டைப் பாருங்க... Chubby Cheeks</span></p><p><span style="font-size:85%;">"Rosy Lips, Teeth within...Curly Hair,Very Fair"<br />இது அதைவிட மோசம். நம்ம ஊர்ல முக்கால்வாசி பேரு கருப்பு தான். இந்த பாடலை நானும் குழந்தைப் பருவத்தில ஆர்வமா கை கால் ஆட்டி பாடி காட்டியிருப்பேன். எங்க வீட்லயும், ரசிச்சு பார்த்திருப்பாங்க. கொஞ்சம் அர்த்தம் தெரிஞ்ச பிறகு, கன்னங்கரேல் நு இருந்துட்டு, சுத்தமா சம்பந்தமே இல்லாம, இப்படி ஒரு பாட்டு பாடி இருக்கனேன்னு சிரிப்பு தாங்க வருது.<br /><br />இந்த மேட்டர்களுக்கு நம்ம அரசியல் கும்பல்கள் என்ன மாதிரி கருத்து தெரிவிப்பாங்கன்னு ஒரு கற்பனை.<br />London Bridge is Falling down,...falling down...falling down......on my Fair Lady.</span></p><p><span style="font-size:85%;"><strong><em>திராவிடர் கழக பிட்டு : </em></strong>"Fair Lady". இந்தப் பாடல் வெள்ளை ஆரியனை உயர்த்தி, கருப்புத் திராவிடனை தாழ்த்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பார்ப்பனீயச் சிந்தனை. இத்தகைய மூடப் பாடல்களைத் சமுதாயத்தில் இருந்து அகற்றுவதே திராவிடர் கழகத்தின் முதல் வேலை. அதற்கு பதிலாக<br />Rain Rain Go away styleல..<br />"God God where are you?<br />Come to me, if you are true..."</span></p><p><span style="font-size:85%;"><strong><em>கலைஞர் பிட்டு: </em></strong>லண்டன் பிரிட்ஜ் என்பது நம்மில் பெரும்பாலானோர் பார்க்காத ஒரு பாலம். அது விழுவதாக பாடல் வரிகளில் வருவதில் நம் ஊரில் எந்த அரசியலும் இல்லை. ஆனால், இதையே கத்திப்பாறா பிரிட்ஜ் என்றோ வேறு ஒரு மேம்பாலம் என்றோ குறிப்பிட்டால், நான் கட்டிய பாலம் எப்படி உடைந்து விழும் என அம்மையார் சண்டைக்கு வருவார். ஆகையால், யாரும் பார்க்காத ஒரு பாலம் விழுவதாகவே பாடலில் இருத்தல் நலம். வேண்டுமென்றால், இல்லாத பாலமான ராமர் பாலம் விழுவதாக வேண்டுமானால் மாற்றுங்கள், சேதுவிற்காவது வழி பிறக்கட்டும்.</span></p><p><span style="font-size:85%;">அடுத்தது இந்தப்பாடல்,<br />"Hot Cross Buns, Hot Cross Buns<br />One a Penny, two a Penny<br />Hot Cross Buns..."<br /><strong><em>பிஜெபி பிட்டு : </em></strong>Bun என்பது சரி. அது என்ன அந்த ரொட்டி மீது ஒரு கிராஸ். ஆங்கிலேயன் கிறித்துவத்தை பரப்புவதற்காக ரொட்டி மீது கிராஸ் போட்டு நம்மிடம் திணித்த பாடல் இது. இது நம் இறையாண்மைக்கு எதிரான பாடல்.</span></p><p><span style="font-size:85%;"><strong><em>கம்யூனிச பிட்டு : </em></strong>Bun என்கின்ற உணவு ஆங்கிலேயன், அவனுடைய பொருட்களை சந்தை செய்ய இந்தியாவிற்கு இறக்குமதி செய்த ஒன்று. ஆரம்பக்கல்வியிலேயே அவனுடைய ஏகாதிபத்யத்தை செலுத்தியதால், இன்று Bun வளர்ந்து Pizza வாக உருவெடுத்து பிசாசாக நிற்கிறது உலகமயமாக்கல். இதற்கு முடிவு கட்டும் முதல் முயற்சியாக இப்பாடலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.</span></p><p><span style="font-size:85%;">சரி, என்ன தான் வெள்ளைக்காரன் நம்முடைய கல்வி வாய்ப்பை திறந்து விட்டாலும், அதுக்காக எத்தனை வருஷமா நமக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாத பாடல்களை, தேவை இல்லாத பாடல்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கோம்னு தோணுதுங்க.. தமிழ் ரைம்ஸ் பாடல்கள் கலக்கலா இருக்குங்க...புதுசா புதுசா அருமையான பாடல்கள் வந்த வண்ணம் இருக்கு...அதுல சந்தேகமே இல்லை. ஆனா ஆங்கில பாடல்கள் இன்னும் அதே தேய்ஞ்ச ரிக்கார்டு மாதிரியே பாடிட்டு இருக்கோம். நம்ம நாட்டுக்கு, ஊருக்கு ஏத்த மாதிரி சொந்தமா ஆங்கில ரைம்ஸ் பாடல்களை நம்முடைய குழந்தைகள் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோன்னு தோணுதுங்க..</span></p><span style="font-size:85%;"><p>என்ன தான் இந்த மேட்டரை, நம்ம கிண்டலா சொன்னாலும், இட்லி-சாம்பார் பத்தியோ, பொங்கல் வடை பத்தியோ, போண்டா- பஜ்ஜி ,முறுக்கு போன்ற நம்ம ஊர் ஐட்டங்களைப் பற்றி, நம்ம குழந்தைகளுக்கு பழகிய ஒன்றைப் பற்றி ஆங்கில ரைம்சுகள் ஒன்றில் கூட வராதது கொஞ்சம் வருத்தம் தான். (அட நன்னாரிப் பயலே...கடைசியிலே உன் புத்திய காட்டிட்டியே டா... : ) ) இங்கு விற்கப்படும் ABCD புத்தகங்களில் கூட பெரும்பாலும், நமக்கு கிடைக்காத பழவகைகள், பார்த்திராத மிருகங்கள், கேள்விப் படாத பறவைகள் போன்றவைகள் தான் இருக்குங்க. என் பையன் அதை எல்லாம் பார்த்துட்டு, டால்பின் பாக்கணும் டேடி...போலார் பியர் பாக்கணும் டேடி...சீல் பாக்கணும் டேடி, SpoonBill பாக்கணும் டேடி, Iquana பாக்கணும் டேடி ந்னு சொல்றான்....இதுக்கெல்லாம் நான் எங்க போறது....டேய் நானே இதெல்லாம் பார்த்தது கிடையாதுடா....ஏதோ, என்னால முடிஞ்ச காக்கா குருவி,குதிரை வேணும்னா காட்டுறேன்..வாடா...ஒரு கதை சொல்றேன்...ஒரு பாட்டி வடை சுட்டுன்னு இருந்தாங்களாம்......@#$%^&*() : )</p><p>டேய் இந்த ரைம்ஸ் மேட்டருக்கு, இவ்வளவு பெரிய ஒப்பாரியா டா ந்னு நீங்க கேக்குறது புரியுது...என்னமோ போங்க... : )</p><p></span> </p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-80703267844545782302009-11-08T01:00:00.015+05:302009-11-09T11:11:18.828+05:30"தம்" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்?<p><span style="font-size:85%;">என்னடா, இவனுக்கு இதைப் பத்தி ஒரு ஆராய்ச்சின்னு நீங்க நினைக்கலாம். பல சமயங்களில் கவனிச்ச ஒன்று தாங்க இது.நிறைய பேரு நின்னுட்டு டீ குடிச்சிட்டு இருப்பாங்க, சமோசா, பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க எல்லாம் பிச்சைக்காரர்களுக்கு முதல் டார்கெட் கிடையாது. யாரு சிகரெட் புடிச்சிட்டு இருக்காங்களோ, அவங்கள தான் முதல்ல அட்டாக் பண்ணுவாங்க. அதுவும் பல தடவை, இல்லைமா, போயிட்டு வாங்க...அப்படின்னு சொன்னாலும் போக மாட்டாங்க. எந்த பக்கம் மாறி மாறி நின்னாலும், எதிர்ல வந்து நின்னு, காசு கொடுக்குற வரைக்கும் விட மாட்டாங்க. </span></p><p><span style="font-size:85%;">சரி, அப்படி என்ன தான்யா தம் அடிக்கிறவங்க கிட்ட இருக்கு. எதுக்கு அவங்கள எல்லா பக்கமும் அணை கட்டுற மாதிரி, சுத்தி சுத்தி வந்து பிச்சை கேக்குறாங்கன்னு, கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சு பார்த்தபோது தான் தோணுச்சு, சரி இதைப் பற்றியே ஒரு பதிவு போட்டுறலாம். </span></p><p><span style="font-size:85%;">எல்லாப் பிச்சைக்காரர்களும் ஒரே மாதிரி இல்லைங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையா இருப்பாங்க.சிலர் வீடு வீடாக சென்று உணவு வாங்கிச் செல்பவர்கள், சிலர் சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் பொட்டிக் கடை,டீக்கடை அருகில் பிச்சை எடுப்பவர்கள், சிலர் கோவில் வாயிலில் பிச்சை எடுப்பவர்கள் என பல வகைகள் உண்டு.</span></p><p><span style="font-size:85%;">ஆனா, என்ன தான் பிச்சைக்காரர்களாக இருந்தாலும், யாரிடத்தில், எப்பொழுது, எப்படி பிச்சைக் கேட்டால் பிச்சை கிடைக்கும் என்பதை சரியாக தெரிந்து வைத்திருப்பார்கள்.இந்த சூழ்நிலையில் பிச்சைக் கேட்டால், அவனால மறுக்கவே முடியாது என்பதை அறிந்து ஒரு Clear Strategy யுடன் பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி ரொம்ப டெக்னிகலா ப்ளான் பண்ணி பிச்சை எடுப்பவர்களிடம் எந்த மாதிரியான சூழ்நிலைகள்ல, நாம எப்படியெல்லாம் மாட்டிக்கிறோம்னு இப்போ பார்ப்போம்.</span></p><p><strong><em><span style="font-size:85%;">சூழ்நிலை 1: வேலை செய்கிற,30 வயதுடைய ஒருவர் தம் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பிச்சை கேட்பதின் நோக்கம்.</span></em></strong></p><p><span style="font-size:85%;">ஐயா, நல்லா இருக்க உடம்பை கெடுத்துக்குறதுக்கே நீங்க ரூ.4.50 செலவு பண்றீங்களே, நாங்கல்லாம் சோத்துக்கே வழி இல்லாம இருக்கோமே, எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன் என்று சொல்வது போல இருக்கும் அவர்களின் பாவணை.</span></p><p><span style="font-size:85%;">பல சமயங்களில் நமக்கே ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும்...என்னடா நம்ம சிகரெட் பிடிக்க இவ்ளோ செலவு பண்றோம், ஆனா அவங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம காசு கேக்குறாங்களே.....கிட்ட தட்ட ஒரு குற்ற உணர்ச்சி மாதிரி தோணும். சரி, கொடுத்துடுவோம்னு பெரும்பாலான தம் பிரியர்கள் நினைக்குறாங்க.</span><br /></p><br /><p><strong><em><span style="font-size:85%;">சூழ்நிலை 2 : கல்லூரி வளாகத்தின் வெளியே ஒரு மாணவன், புகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.</span></em></strong></p><p><span style="font-size:85%;">ராசா, உங்களப் பெத்தவங்க, படிக்கக் கொடுத்த காசை, புகையையாய் எறிச்சுத் தள்ளுறீங்க. கஷ்டப்பட்டு அப்பா அனுப்புற காசை மொத்தமும் ஊதி அழிக்காம, எங்களுக்கும் கொடுத்தீங்கன்னா புண்ணியமாவது வந்து சேரும் ராசா...</span></p><p><span style="font-size:85%;">நம்மாளு வேற வழி இல்லாம 50 காசோ, 1 ரூபாயோ போட்டு அனுப்புவார்.</span></p><p><strong><em><span style="font-size:85%;">சூழ்நிலை 3: காதலனும் காதலியும் தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவர் பிச்சைக் கேட்கிறார்.</span></em></strong></p><p><span style="font-size:85%;">சாதாரண சமயங்களில், எச்சைக் கையில் காக்கா கூட ஓட்டாதவராக இருக்கும் காதலன், காதலியுடன் இருப்பதால், உடனே பர்சை எடுத்து டகால்னு ஒரு 5 ரூபாய் எடுத்துக் கொடுப்பார்(1 ரூபாய் 2 ரூபாய் சில்லரை இருக்கும்). "என்னாங்க...பிச்சைக்காரனுக்கு போய் 5 ரூபாய் போடுறீங்க..இதெல்லாம் டூ மச் ங்க..." என்பாள் காதலி. "இல்லம்மா ...சேஞ் இல்லை..its OK." என்று பொய் சொல்லி, தன் இமேஜை கொடை வள்ளல் ரேஞ்சுக்கு டெவலப் செய்து கொள்வான் காதலன்.</span></p><p><strong><em><span style="font-size:85%;">சூழ்நிலை 4: கல்யாண வயசுல இருக்க பெண்ணை அழைத்துக்கொண்டு, குடும்பத்தோட கோவிலுக்குப் போறாங்க. அங்க, கோவில் வாசலில்<br />ஒருவர் பிச்சைக் கேட்க அமர்ந்திருக்கிறார்.</span></em></strong></p><p><span style="font-size:85%;">"அம்மா, இது உங்க பொண்ணுங்களா அம்மா. எம்பெருமான் அருளால, பொண்ணுக்கு சீக்கிரமா ஒரு வரன் அமையும். சந்தோஷமா கோயிலுக்குப் போயிட்டு வாங்க..."</span></p><p><span style="font-size:85%;">அடடா.....நம்ம நினைச்சுட்டு வந்த விஷயத்தை அப்படியே சொல்றாரே...நுழையும் போதே நல்ல வார்த்தை சொல்றாரே...இவர் வாக்கு பளிக்கனும்னு நினைச்சு...அவர் தட்டுல ஒரு கணிசமான தொகை விழுறது நிச்சயம்.</span></p><p><strong><em><span style="font-size:85%;">சூழ்நிலை 5: பிளாட்பார்ம் கடையில இட்லி சாப்பிட்டுட்டு இருப்போம். அப்போ ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்கிறார்.</span></em></strong></p><p><span style="font-size:85%;">"சாரி பா சேஞ்ச் இல்லை" என்று சொல்லிவிட்டு கடையில் பணம் கொடுக்கிறார். மிச்சம் சில்லரையை கொடுக்கிறார் கடைக்காரர். </span></p><p><span style="font-size:85%;">இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதே பிச்சைக்காரர் மறுபடியும் கேட்கிறார் : ) </span></p><p><span style="font-size:85%;">இந்த மாதிரி பல சூழ்நிலைகளில், பிச்சைக்காரர்களை தவிர்ப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷய்ம் தான்.</span></p><p><span style="font-size:85%;">பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவதிலேயே நமக்குள்ள பல பாலிசிகள் இருக்கும். சின்ன பசங்களுக்கு பிச்சை போடக்கூடாது. உடல் குறைபாடுகள் இருக்கவங்களுக்கோ, முதியவர்களுக்கோ பிச்சை போடலாம்.இப்போதெல்லாம், பிச்சை என்பது பணம் புழங்கும் பெரிய தொழிலாகி விட்டது. இப்படியெல்லாம் சொல்லுவோம்.</span></p><p><span style="font-size:85%;">இப்படி என்ன தான் காரணங்கள் சொன்னாலும், அவர்களுடைய வயிற்றுப் பசியின் கோரம், விகாரமாக ஒலித்தும் ,நம் மூளை அதனை நிராகரிப்பது என்பது பல சமயங்களில் வருத்தமான மேட்டராவே இருக்குங்க : (</span></p><p></p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-30894060394018209352009-11-04T12:20:00.006+05:302009-11-04T12:41:38.503+05:30வந்தே மாதரம் பாடலுக்கு ஃபத்வா !<p>ஆங்கிலேய ஆட்சி காலத்தில் வங்காள தேசத்தில், துணை ஆட்சியாளராக திகழ்ந்தவர் பக்கிம் சந்திர சேட்டர்ஜி. அவர் ஒரு நாள், ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றிருந்தார். </p><p>அப்போது ராமகிருஷ்ண்ர் "உன் பெயர் என்ன?" என்று வினவினார். பக்கிம் சந்திர சேட்டர்ஜி என்றார் அவர்.</p><p>அதற்கு ராமகிறுஷ்ண்ர் "பக்கிம் என்றால் வலைந்த என்று பொருள். சந்திர என்பது சந்திரன். ஆக, வலைந்த சந்திரன் என்பது உமக்கு பொருத்தமான பெயர் தான். ஆங்கிலேயனுக்கு வேலை செய்து, பூட்ஸ் காலில் அடிப்பட்டு வலைந்து போகிறாய். உமக்கு இந்தப் பெயர் பொருத்தமான பெயர் தான்" என்று வேடிக்கையாகச் சொன்னாராம்.</p><p>ஆங்கிலேயனுக்கு வேலை செய்வது அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை இவ்வளவு நாள் செய்துவிட்டோமே என்று எண்ணி, தன் வேலையை ராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இறங்கினார் பக்கிம் சந்திர சேட்டர்ஜி. </p><p>தேசப்பற்றை வளர்க்கும் பல நூல்களை எழுதினார். அதில் "ஆனந்தமடம்" என்ற நூலும் ஒன்று. அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் "வந்தே மாதரம்". இந்திய மக்களை, ஆங்கிலேயனுக்கு எதிராக ஒன்று கூட்டி போராடச் செய்த பாடல் அது. எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், அடித்து கொல்லப்பட்ட போது, தூக்கிலிட்ட போது மரணப்பிடியில் இருந்தும் கூட உணர்ச்சிபொங்க, வீரம் ததும்ப சொன்ன வார்த்தைகள் இது "வந்தே மாதரம்".</p><p>அப்படியாப்பட்ட ஒரு பாடலை முஸ்லிம்கள் பாடக்கூடாது என ஃபத்வா போட்டிருக்கிறது, ஜமாத் இ உலீமா ஹிந்த் என்கின்ற ஒரு அமைப்பு. என்னய்யா...என்ன பிரச்சினை உங்களுக்கு அதுல...அப்படின்னு கேட்டா. அல்லாவைத் தவிர யாரையும் முஸ்லிம்கள் வணங்கக் கூடாது. வந்தே மாதரம் பாடலில் தாய் மண்ணை வணங்குவதாக சொல்கிறதாம். என்ன கொடுமைங்க இது. அந்தப் பாடல் தமிழில் தாய் மண்ணே வணக்கம் என்று தாங்க வருது. ஒரு தாயை, தாய் மண்ணுக்கு வணக்கம் கூறுவதில் என்ன கெட்டுப் போச்சு ? </p><p>சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல் கலாம் ஆசாத் ஒரு மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர். அவரே வந்தே மாதரம் பாடலை வழிமொழிந்திருக்கிறார்.</p><p>2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய சுன்னி உலீமா பேரவை, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பாகங்களை முஸ்லிம்கள் பாடலாம் என ஃபத்வா போட்டது. தாயின் காலில் தலை தாழ்த்துவது என்பது வழிபாடு அல்ல அது ஒரு மரியாதையாக கருத வேண்டும் என அந்தப் பேரவையின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருதீன் குவாத்ரி அஜீலானி கூறி இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று யாரும், யாரையும் வற்புறுத்தவில்லை. இப்படி இருக்க எதுக்காக இப்போ இந்த கும்பல், இதை ஆரம்பிக்குறாங்க....ஒண்ணுமே புரியல....</p><p>தேசப்பற்று மிக்க இந்தப் பாடலுக்கு மதச்சார்பான அர்த்தம் கற்பிப்பது, நம் நாட்டி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகவே கருதப்படும். இதை ஒரு காரணமாக வைத்து, அண்ணன் தம்பியா இருக்க மக்களை சண்டை போட வைக்கணும் அல்லது பல இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் ஜமாத் இ உலீமா ஹிந்த் தான் உண்மையான இயக்கம் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி ஆள் சேர்க்க வேண்டும் என்பது தான் இது போன்ற இயக்கங்களுடைய நோக்கமாகத் தெரிகிறது. எது எப்படியோ, </p><p>வீட்டில் இந்துவாய் இரு<br />வீட்டில் கிறித்துவனாய் இரு<br />வீட்டில் இஸ்லாமியனாய் இரு<br />நாட்டில் இந்தியனாய் இரு.</p><p>அப்படின்னு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.</p><p>வந்தே மாதரம் !</p><p> </p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-89275057268042330122009-10-12T11:33:00.009+05:302009-10-12T11:56:58.433+05:30அருள்வாக்கு ஜெக்கம்மா - ஒரு கற்பனை!<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">அருள்வாக்கு கேட்க, ஜெக்கம்மாவிடம் வரும் சிலருக்கு, அவர்எப்படி அருள் வாக்கு கூறுவார் என்று சின்ன கற்பனை.</span><span style="font-size:85%;">இதை கொஞ்சம் அருள்வாக்கு கொடுக்குறவங்க ஸ்டைல்ல படிக்கவும்...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர் : </em></strong>ஜெக்கம்மா....நம்ம கம்பூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக் கண்ணு வந்திருக்காரும்மா அருள் வாக்கு கேக்க...என்ன சொல்லப் போற..</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>டேய்....ஏகாதிபத்யம்..ஏகாதிபத்யம் னு சொல்றீங்களே...அது என்ன பத்தியம் டா........என் கிட்ட இல்லாத பத்தியமா....டா....ஜெய்ய்ய்ய் ஜெக்கமாஆஆ..........4 1/2 வருஷம் கூடவே இருந்து ஆதரவு கொடுத்து குப்பை கொட்டிட்டு, வெளியே வந்து விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்னு ஓட்டுக் கேட்ட இல்லை....குத்தனாங்க பாருங்க ஜனங்க...ஓட்டு இல்லை...உங்களுக்கு ஆப்பு.......இனிமேலாவது நல்ல புள்ளையா இரு...போ......ஜெய்ய் ஜெக்கம்மா...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர்: </em></strong>ஜெக்கம்மா தாயே...நம்ம வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஷஷி தரூர் வந்திருக்காரு மா...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>வாய்யா...ஷஷி தரூர்....ஒரு மனுஷனுக்கு ஜாதகத்துல ஒரு கட்டத்துல தான் சனி இருப்பார்....ஆனா உனக்கு எல்லா கட்டத்துலயும் சனி சப்பலங்கால் போட்டு உட்காந்துட்டு இருக்காருடா.........இனிமேல், ட்விட்டர்ல திட்டும் போது...ச்சே...ட்விட்டும் போது, அருள்வாக்கு ஜெக்கம்மா துணைன்னு போட்டுட்டு, அப்புறம் ட்விட்டு பண்ணு....எல்லாப் பிரச்சினையும் போயிடும் டா...ஜெய்ய் ஜெக்கம்மாஆஆ....</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர்: </em></strong>அருள்வாக்குத் தாயே....அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வந்திருக்கார் மா...அருள்வாக்கு கேட்க...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>வாய்யா.....ஒபாமா...உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு டா...என் பேரு ஜெக்-கம்-மா....உன் பேரு ஒ-பா-மா. ஒரு நல்ல காரியத்துக்கு குடும்பத்தோட போகும் போது, ஜெக்கம்மாவுக்கு கடா வெட்டி, பொங்கல் வைக்கணும்னு கூட தெரியாதாடா ? நீயெல்லாம் எப்படி அமெரிக்க ஜனாதிபதி ஆன? அப்படி மதிக்காமப் போனீயே, ஒலிம்பிக்ல சிகாகோ பிட்....என்னாச்சு...? நோபல் பரிசு கிடைச்சும், அது உனக்கு தகுதியான்னு உலகமே பேசுறத கவனிச்சியா...? இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்கோ....ஹெல்த் கேர் பில் பாஸ் ஆகணும்னா...உன் கோட் பாக்கெட்ல ஒரு எலுமிச்சம் பழத்தை எப்பவும் வச்சிக்கோ.....ஜெக்கம்மா சொல்றா...ஒபாமா செய்றான்....ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆ....</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர்: </em></strong>எல்லோருக்கும் அருள்வாக்கும் சொல்லும் அருள்வாக்கு அம்மா, உங்களைப் பார்க்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வந்திருக்காரும்மா...அவரே ஏதோ கேக்கணுமாம் தாயே...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>ஜெய்ய்ய்ய் ஜெக்கம்மா......டேய்...ஆசிப் அலி சர்தாரி...பாகிஸ்தான்ல நீயே ஒரு டம்மி பீசு.....நீ எதுக்குடா வந்தே.....நீ போயிட்டு ராணுவத் தளபதி பர்வேஸ் கியானியை வரச் சொல்லுடா....அவன் தாண்டா எல்லாமே.......சரி இவ்ளோ தூரம் வந்துட்ட பரவாயில்ல கேளு. </span><span style="font-size:85%;"><strong><em><br />ஆசிப் அலி சர்தாரி :</em></strong> ஜெக்கம்மா தாயே...பாகிஸ்தான்ல தீவிரவாதம் எப்பம்மா போகும்.....</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>ஹ்ம்ம்ம்ம்...... உலக அமைதிக்கு வாக்கு சொல்லட்டா அல்லது உங்க நாட்டுக்கு மட்டும் நல்லது உலகுக்கே கெட்டது.... அந்த வாக்குச் சொல்லட்டா...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஆசிப் அலி சர்தாரி: </em></strong>எங்க நாட்டு நல்லதுக்கு மட்டும் சொல்லு தாயி...உலகம் கெட்டாலும் பரவயில்லை...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>அதான பார்த்தேன்...எங்க இருந்து புத்தி வந்துருச்சோன்னு நினைச்சேன்.. ஜெய்ய்ய் ஜெக்கம்மா.......உங்க நாட்டோட GDP யே தீவிரவாதத்தை நம்பித் தாண்டா இருக்கு....அது மட்டும் இல்லைன்னா...ஒரு நாய் கூட உங்க ஊரை சீண்டாது...தீவிரவாதி இல்லைன்னா...அமெரிக்க காரன் பைசா கொடுக்க மாட்டான்...இந்தியாவை எதிர்க்கிற தீவிரவாதி இல்லைன்னா...சீனாக் காரன் ஆயுதம் கொடுக்க மாட்டானே டா..........தீவிரவாதம் இல்லைன்னா பாகிஸ்தான் ராணுவம் என்னடா பண்ணும்...அவனுங்க வேலையே அது தானே...? தீவிரவாதம் இல்லைன்னா உங்க நாட்டு மக்களுக்கு என்ன வேலை வாய்ப்புடா கொடுக்க முடியும்...? ஹ்ம்..... கம்முனு போய் அமெரிக்கனுக்கு கால் அமுக்குற வேலையையே கண்டின்யூ பண்ணுடா...அதான் உங்க நாட்டுக்கு சரி...ஜெய்ய்ய் ஜெக்கம்மா....ஹ்ம்ம்ம்....</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர் : </em></strong>இது வரைக்கும் பார்த்த எல்லாரையும் விட ரொம்ப டேஞ்சரான ஆள் ஒருத்தர் வராரு மா....ஜெக்கம்மா...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>ஹ்ம்ம்....டேய்....யாருடா அவன்.....நமக்கே டேஞ்சரான ஆளு யாருடா அவன்....</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர் : </em></strong>வலையுலகத்துல பதிவராம். ப்ளாக்ஸ் எல்லாம் எழுதுவாராம்...ஏதோ கேக்கணும்னு வந்திருக்காரு...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>ஐயோ ஜெக்கம்மா.....வலைப்பதிவரா.....எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பானே டா அவன்....சும்மா நின்னுட்டு இருக்கும் போதே....ஏன்மா நிக்குற அங்க தான் நாற்காலி இருக்கே..ஏன் உட்காரல?ந்னு கேப்பான். சரின்னு உட்கார்ந்த உடனே....என்னா ஜெக்கம்மா நாற்காலி கிடைச்ச உடனே உட்கார்ந்துடுவியான்னு இன்னொருத்தன் கேப்பான்.....அவனை அப்படியே கிளம்பச் சொல்லு.....நம்மால முடியாதுடா.....ஜெய்ய்ய் ஜெக்கம்மா....</span></p><p><span style="font-size:85%;"><strong><em>சிஷ்யர் : </em></strong>அருள்வாக்குத் தாயே..உங்கள பாத்துட்டுத் தான் போகணும்னு அடம்பிடிக்கிறாருங்க அந்தப் பதிவர்..</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>சரி வரச் சொல்லு....ஹ்ம்ம்ம்ம்ம்</span></p><p><span style="font-size:85%;"><strong><em>பதிவர் : </em></strong>ஜெக்கம்மா தாயே...ஒரே ஒரு கேள்வி தான்மா உங்கிட்ட...எப்படிம்மா ஹிட்ஸ் வாங்குறது...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>ஜெய்ய் ஜெக்கம்மாஆஆஆ......இது ரொம்ப சிம்பிள்டா.....நாலு பேரு வலைத்தளத்துக்கு போயி, பதிவைக் கூட படிக்காமல், திட்டிட்டு வரணும். அதற்கு பதிலாக, அந்த நாலு பேரு, நாற்பது பேரை கூட்டிட்டு வந்து உங்க வலைத்தளத்துல திட்டுவாங்க...இப்படியே கண்டின்யூ பண்ணீங்கன்னா....ரேங்கிங்க்ல உன் சைட் கூடிய சீக்கிரம் வந்துடும் டா.......ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆஆ...</span></p><p><span style="font-size:85%;"><strong><em>பதிவர் : </em></strong>நன்றிம்மா...கடைசியா ஒரே ஒரு குட்டிக் கேள்வி...பதிவுலகத்துல இருக்க சண்டை எப்பம்மா முடியும்...?</span></p><p><span style="font-size:85%;"><strong><em>ஜெக்கம்மா : </em></strong>ஹ்ம்ம்ம்...டேய் சிஷ்யா....கேட்டான் பாருடா கேள்வியை....வலைஉலகமா...கொக்கான்னானாம்....இந்தக் கேள்விக்கு பதில் சொல்ற சக்தி என் கிட்ட இல்லைடா........ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா டா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா.....</span></p><p><span style="font-size:85%;"><em>கைதுறப்பு : சிரிப்புக்காக மட்டும் : )<br /></em></p></span>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-55114831534973262132009-10-07T13:36:00.004+05:302009-10-07T13:39:55.329+05:30உங்களுக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கிடையாதுங்க..!<p>"என்னங்க...உங்களைத்தான்...இன்னைக்கு கிருத்திகை, கடைக்கு போய் இலை, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் எல்லாம் வாங்கிட்டு வாங்க....அப்படியே இந்தப் பையனையும்(என் மகன் தீபு) கூடவே கூட்டிட்டி போய்ட்டு வாங்க" என தங்கமணி ஆர்டர் போட்டாங்க. ஆபீஸ்க்கு வேற ரொம்ப நேரமாச்சு..ஹ்ம்ம்..சரி என சொல்லி, எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துட்டு, அவசர அவசரமா ஆபீஸ் கிளம்பினேன்.</p><p>தெரு முனையில், பயங்கர மக்கள் கூட்டம். ஒவ்வொருவர் கையிலும், ரேஷன் அட்டை, மற்றும் ஒரு விண்ணப்பத் தாள் இருந்தது. அதோடு, கருப்பு சிவப்பு கரை வேட்டித் தொண்டர்களும், திமுகவின் கட்சிக் கொடிகளும் ஒரு புறம் என ஏரியாவே கலை கட்டியிருந்தது. அடடா....இந்த மாதிரி, நாம கடைசியா பார்த்தது வெள்ள நிவாரண நிதி கொடுத்த போதும், தேர்தலுக்கு முந்தைய நாள் பைசா கொடுத்த போது தானே. இப்போ என்னவா இருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன்.</p><p><br />சரி, திமுக நிர்வாகியிடம் கேப்போம். என்ன எல்லாரும் ரேஷன் கார்டுடன் நிக்குறாங்கன்னு கேட்டேன். </p><p><br />"கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செஞ்சிட்டு இருக்காங்க...அதாங்க" என்றார் திமுக கட்சி நிர்வாகி.</p><p><br />"என்ன திட்டம், அதுக்கு நான் என்ன செய்யணும்" நு கேட்டேன்.</p><p>"அதாவது, இதயம், கர்பப்பை, சிறுநீரகம் கோளாறுன்னால நடக்குற ஆபரேஷன் செலவு, கேன்ஸ்ர் போன்ற நோய் வந்துச்சுன்னா அதுக்கான ம்ருத்துவசிகிச்சைக்காக, எங்கள் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, ரூ 1 லட்சம் ரூபாய் வரைக்கும் காப்பீடு தர்றாங்க...இது தான் உயிர் காக்கும், உயர்சிகிச்சைக்காக கலைஞரின் காப்பீட்டுத் திட்டம். நீங்க போய் உங்க ரேஷன் கார்டு எடுத்துட்டு வாங்க...அதுல இருக்க நபர்களை கூட்டிட்டு வாங்க....இங்க பதிவு செய்த பிறகு, அதோ அந்த பள்ளிக்கூடத்துல போய் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க...அவ்ளோ தான்....சீக்கிரம் போய் கூட்டிட்டு வாங்க சார்....", என்றார் அவர்.</p><p><br />தங்கமணிக்கு உடனே ஒரு போன். ஏன்மா, உடனே நீயும், பையனும் ரெடி ஆவுங்க....இன்சூரன்ஸ் திட்டத்துக்காக போட்டோ எடுக்கறாங்களாம். கொஞ்சம் போயிட்டு வந்துறுவோம் என்றேன். அவசர அவசரமா கிளம்பி வந்தோம். விண்ணப்பம் வாங்குற இடத்துலயும் சரி, போட்டோ எடுக்குற வரிசையிலும் சரி, மிக நீண்ட வரிசை. நம்ம தான் பயங்கரமா ப்ளான் போடுவோமே... "தங்கமணி, நீ அந்த ஸ்கூல்ல போய் போட்டோ எடுக்குற வரிசையில போய் நில்லு....நான் விண்ணப்பம் பதிவு பண்ணுற வரிசையில போய் நிக்குறேன்...கரெக்டா இருக்கும்" என்றேன். </p><p><br />வெகுநேரக் காத்திருத்தலுக்கு பிறகு, நான் பதிவு செய்யும் முறை வந்தது. ரேஷன் கார்டை கொடுத்தேன். வெள்ளை கார்டு. அப்படியே ஒரு லுக் விட்டுட்டு, "என்ன வேலை செய்றீங்க", என்றார் அங்கிருந்து ஒரு பெண் அலுவலர்.</p><p>"சாப்ட்வேர்ல இருக்கேங்க", என்றேன்</p><p>"எவ்ளோ சம்பளம் வாங்குவீங்க...." என்றார் அலுவலர்.</p><p>என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்..</p><p>"இங்க பாருங்க சார்...தங்களுடைய உடம்பை சரியா பாத்துக்கக் கூட வசதியில்லாத, ரொம்ப ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்றவங்க போன்றவர்களுக்கு அரசாங்கம் கொடுக்குற காப்பீட்டுத் திட்டம் தான் இது. உங்களுக்கு எல்லாம் நீங்க வேலை பாக்குற கம்பெனியிலேயே கொடுத்திருப்பாங்க....ஆனா இவங்களுக்கு அதெல்லாம் கிடையாதுங்களே.... வருட வருமானம் ரூ 72,000 த்துக்கும் கம்மியா இருக்கவங்களுக்குத் தான் இந்த திட்டம். உங்களுக்கு எல்லாம் இந்த திட்டம் இல்லைங்க..." என சொல்லி முடித்தார் அந்த அலுவலர்.</p><p><br />அட எல்லா விவரத்தையும் சொன்ன அந்த கரைவேட்டிக்காரர், இந்த மேட்டர சொல்லாம விட்டுட்டாரேன்னு நினைச்சேன்.</p><p><br />கைப்பேசி அலறியது, மறுமுனையில் தங்கமணி "ஏங்க....சீக்கிரம் வாங்க....அடுத்து நம்ம தான் போட்டோ எடுக்கணும்" என்றார். "இல்லைம்மா...நமக்கெல்லாம் கிடையாதாம்மா.." என்றேன். "இது முதலிலேயே தெரியாதா? உங்களை எல்லாம் என்னா தான் சொல்றதுன்னே தெரியல" என்று புலம்பல்களை கேட்டுக் கொண்டே கிளம்பினேன்.</p><p><br />இதுல என்ன மேட்டர்னா. ஒபாமாவின் ஹெல்த் கேர் பில் க்கு இன்னும் முழு ஒப்புதலே கிடைக்காத நிலையில், நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்பது சந்தோஷத்தைத் தருகிறது. </p><p><br />என்ன தான் கும்பல் கூடி பதிவுகளில் கலைஞரை விமர்சித்தாலும், மக்களின் வாழ்வில், எதிர்பாராத விதமான,தவிர்க்க முடியாத செலவான மருத்துவச் செலவிற்கு காப்பீடு வழங்கும் கலைஞர் அரசுக்கு நிச்சயம் ஒரு Very Good சொல்லியே ஆக வேண்டும்.</p><p> </p><p> </p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-74645244251006889522009-10-03T11:26:00.015+05:302009-10-05T11:05:48.394+05:30பெண்களின் சுகமான திருமண வாழ்க்கைக்கு சில யோசனைகள் !<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiswPDuUaLmjZAQTYj7uhSEvHb9sLFJ7WMYjQtXiFlKFxEEd7e8v_KS-sNfB5ThRfEXuVa8HpmZ4ZNAklZTU3q5iQQC8DuFIiRxSd9dXLqrEFPV0AjTv1GM2jbIEB1wPQtUbi65PPZfBNg/s1600-h/manga.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5388977760672754322" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 252px; CURSOR: hand; HEIGHT: 336px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiswPDuUaLmjZAQTYj7uhSEvHb9sLFJ7WMYjQtXiFlKFxEEd7e8v_KS-sNfB5ThRfEXuVa8HpmZ4ZNAklZTU3q5iQQC8DuFIiRxSd9dXLqrEFPV0AjTv1GM2jbIEB1wPQtUbi65PPZfBNg/s400/manga.JPG" border="0" /></a> <span style="font-size:85%;">திருமண வாழ்க்கை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு இருப்பது சகஜம். ஆனால், திருமணம் முடிஞ்ச ஒன்றிரண்டு மாதங்களிலேயே, "அவர் நம்ம நினைச்ச மாதிரி இல்லயே..." என்று நினைக்கத் தோன்றுவது மிக இயல்பு. இது ரொம்ப பொதுவான மேட்டர். இதுல காதல் திருமணங்களும் விதி விலக்கல்ல. காதலில், காதலர்கள் நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்துவர், மற்றவரை கவருவதற்காக. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு உண்மைக் குணம் வெளியில் வரும். அந்த உண்மைக் குணம், பத்து வருஷ உண்மைக் காதலிலும் வெளிவந்திருக்காது. என்னைப் பொருத்தவரை ஒருவரை ஒருவர் மனதார புரிந்து கொண்டு தான் காதலிக்கிறோம் என்பதே ஒரு பொய்.</span><br /><br /><span style="font-size:85%;">கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்தால், இவை எல்லாவற்றையும் தகர்த்து, நல்ல அமைதியான, சுகமான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்த காலத்து இந்தியப் பெண்களுக்கு, ஏதோ நமக்கு தெரிஞ்ச யோசனைகள் இங்கே !</span></div><div><div><span style="font-size:85%;"></span></div><br /><div><span style="font-size:85%;">1. கல்யாணம் முடிந்து புகுந்த வீடு போகும் போது, புது இடம், எல்லாமே புது உறவுகள். கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும். சாதாரணமா அன்பா பேசுறாங்களா, திட்றாங்களா, கிண்டல் பண்றாங்களான்னு புரியவே கொஞ்ச நாள் ஆகும். நிலைமை இப்படி இருக்க, நீங்க அவங்கள நல்லா புரிஞ்சுக்குற வரைக்கும், அனைவரிடமும் சிரித்த முகத்துடன்,கலகலன்னு,அன்பா பேசுவது தான் முதல் படி. இதை பார்த்ததும், உங்க ஆளு உச்சி குளிர்ந்து, அன்பு மழையைப் பொழிவார்.</span></div><br /><div><span style="font-size:85%;">புகுந்த வீடு செல்வதும், முதல் நாள் கல்லூரிக்கும் செல்வதும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான். சீனியர்சின் ரேக்கிங்க் இருக்கும், கிண்டல் இருக்கும், நான் தான் பெரிய ஆள் ந்னு நிறைய பேரு காமிச்சிக்க முயற்சி செய்வாங்க. எல்லார் கிட்டயும் சரிங்க சார், செய்றேன் சார்ன்னு சொல்றதில்லை? அதே மாதிரி. ஆனா போகப் போக, அப்படி ரேக்கிங்க் செய்தவர்களே நமக்கு உதவும் சிறந்த நண்பர்களாக மாறுவர். அதே போலத் தான் புகுந்த வீடும். </span></div><br /><div><span style="font-size:85%;">இல்லை. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி, புகுந்த வீட்டில் கால் எடுத்து வச்ச உடனே, ஒரு கை பாத்துடுவோம்னு களத்தில் இறங்குவது என்பது...</span><br /></div><br /><div><span style="font-size:85%;">கிரிக்கெட்டில், Opening Batsman, அவர் முதல் முறையாக விளையாடும் கிரவுண்டில், பிட்ச் ரிப்போர்ட் கூட பாக்காம, Helmet,Guard என எந்த கவசமும் அணியாமல், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, Brett Leeயின் முதல் பந்தை சிக்சர் அடிக்க முய்ற்சி செய்ற மாதிரி, ரொம்ப ஆபத்தா தான் முடியும்..<br /><br />2. கணவர் செய்கிற, ஒண்ணுத்துக்கும் உதவாத வேலையா இருந்தாலும், அப்ப, அப்ப சின்ன சின்ன பாராட்டுதல்கள் (appreciation) சொல்றது நிறைய சமயங்களில் நல்லா வொர்க் அவுட் ஆகும். இதுல ஒண்ணும் இமேஜ் டேமேஜ் ஆகப் போறதில்லையே : )<br /></span></div><br /><div><span style="font-size:85%;">பொதுவாகவே, பெண்களுக்கு எப்படி அழகையும் வயதையும் புகழ்வது பிடிக்குமோ, அதே போல ஆண்களுக்கு அவர் செய்யும் வேலைகளை பாராட்டுவதைப் பெரிதும் ரசிப்பர்.<br /></span></div><br /><div><span style="font-size:85%;">உதாரணத்துக்கு, என்னங்க, நேத்து நீங்க வாங்கிட்டு வந்த தக்காளி அவ்ளோ சுப்பரா இருந்துச்சுங்க...எங்க வாங்கிட்டு வந்தீங்க..... அப்படின்னு சொல்லலாம்.<br /></span><span style="font-size:85%;"></span></div><br /><div><span style="font-size:85%;">இதுக்கு பெங்களூர் தக்காளி எப்படி இருக்கும், நாட்டுத் தக்காளி எப்படி இருக்கும்னே தெரியாது...அதுமட்டுமல்ல, இதை எப்படியும் அவர் பொறுக்கி போட்டு வாங்கி வந்திருக்கமாட்டார், கடைக்காரரே எடுத்துக் கொடுத்திருப்பார் என்று நன்றாக தெரிந்தாலும், இப்படி சொல்றதால, அடுத்த முறை கடைக்கு போகச் சொன்னா சந்தோஷமா ஓடி ஓடி போவார் பாருங்க : )<br /><br />3. இரு வீட்டாரிடமும் ஒரே மாதிரியான மரியாதையும்,அன்பையும் வெளிப்படுத்துறது ரொம்ப முக்கியம். இதை செஞ்சாலே பல பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.</span></div><br /><div><span style="font-size:85%;"></span></div><div><span style="font-size:85%;"><em><strong>மனைவி :</strong></em>ஏங்க, இன்னைக்கு மதியம், எங்க பெரியப்பா பையன் வந்திருந்தாருங்க... ஆஸ்திரேலியாவில் இருந்து ஹாரி பாட்டர் டிவிடி வாங்கிட்டு வந்தாருங்க...<br /><strong><em>கணவன் :</em></strong>அப்படியா...சரி வேற யாரு வந்தாங்க...<br /><strong><em>மனைவி : </em></strong>ஹ்ம்ம்...வேற யாரு...உங்க அக்கா தான்...சரவணா ஸ்டோர்ஸ்ல இருந்து ஒரு ஓட்டை சோனி டிவிடி ப்ளேயர் வாங்கிட்டு வந்தாங்க...<br /></span></div><br /><div><span style="font-size:85%;">இந்த மாதிரி விஷயங்கள் நம்ம ஆளை ரொம்ப கடுப்பேத்துற மேட்டர். நம்ம ஆளு,அப்ப, அமைதியா தலையை ஆட்டிப்பார். ஆனா, இன்னொரு சான்ஸ் வரும் பாருங்க...<br /></span></div><br /><div><span style="font-size:85%;"><strong><em>மனைவி : </em></strong>ஏங்க இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்குங்க...?<br /><strong><em>கணவன் : </em></strong>உனக்கு ரொம்ப நல்லா இருக்கு மா...<br /><strong><em>மனைவி : </em></strong>எங்க அம்மா எடுத்து கொடுத்ததுங்க...<br /><strong><em>கணவன் : </em></strong>நெனச்சேன்...ரெங்கநாதன் தெரு பிளாட்பார்ம்ல விற்கிற சுரிதார் பிட்டை, அந்த தெரு சந்துல இருக்க டைலர் கிட்ட கொடுத்து ஒரு மணி நேரத்துல தச்சு வாங்கிட்டு வந்த மாதிரியே இருந்தப்பவே நினைச்சேன்...<br /></span></div><br /><div><span style="font-size:85%;">இப்படித் தான் நம்மாளு கிட்ட இருந்து பதில் வரும். இதை எல்லாம், இருவீட்டாரிடமும ஒரே மாதிரி நடந்துகிட்டா வராது. உள்ளுக்குள்ள யாரு வீட்டுக்கு வேணும்னா சப்போர்ட் பண்ணிக்கோங்க...வெளியில எஃஸ்போஸ் பண்ணாதீங்க...<br /><br />4. நம்மாளு அலுவலகத்திலிருந்து எப்படி வர்றார்னு, அவருடைய Moodஐ புரிஞ்சுக்கோங்க. முகம் லைட்டா நம்ம மூஞ்சூர் மாதிரி இருந்துச்சுன்னா...அல்ர்ட் ஆயிடுங்க. மாமா வொர்க் டென்ஷன்ல இருக்கார். மெதுவா விசாரிச்சுப் பாருங்க. பெரிய ரெஸ்பான்ஸ் இல்லைன்னா அவரை அப்படியே விட்டுறுங்க. அரை மணி நேரத்துல தானா நார்மல் நிலைமைக்கு திரும்பி வந்துருவார். நம்மல கண்டுக்கவே இல்லைன்னு, ஒரு மூளைல மூஞ்சைச் தூக்கிக் கொண்டு உட்கார்ந்து, இன்னொரு மூஞ்சூராக மாறுவதை தவிர்க்கவும் : ) .</span></div><br /><div><span style="font-size:85%;">பொதுவாகவே பிரச்சினைன்னு வந்தா, பெண்களுக்கு அதைப் பற்றி பேசுவதில் தான் திருப்தி இருக்கும். ஆனால், ஆண்களுக்கு அந்தப் பிரச்சினைகளை யாரிடமும் சொல்லாமல் தானே சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பிரச்சினையில் இருந்து வெளிவர தன்னை ஒரு குகையில் தனியாக விட்டுவிடுவதையே ஆண்கள் விரும்புவர்.(Men are from Mars, Women are From Venus - John Gray என்கிற புத்தகத்திலிருந்து சுட்ட கருத்து.<br /><br />5. திருமண வாழ்க்கையில சின்ன சின்ன சண்டை வருவது ரொம்ப சாதாரணம். அந்தச் சண்டையை யார் ஆரம்பித்தாலும், அதில் உணர்ச்சிவசப்பட்டு, வாதத்தை வளர்த்து பெரும் சண்டையாக மாற்றி விடுவது பெரும்பாலும் பெண்கள் தான். அதனால, காதலன் சங்கர் ஸ்டையில்ல, கோபமோ சோகமோ துக்கமோ ஒரு 10 நிமிஷம் தள்ளி போடுங்க மேடம். அப்புறம் 15 ஆவது நிமிடத்துல சண்டை ஆட்டோமேட்டிக்கா போயிடும். இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலா ஹேண்டில் பண்ணா, ஊடலாகவே மாறிடும் வாய்ப்புகள் அதிகம்.<br /></span></div><div><span style="font-size:85%;"><strong><em>மனைவி : </em></strong>உன்னைப் போல் ஒருவன் ரொம்ப நல்ல படம்.<br /><strong><em>கணவன் : </em></strong>யார் சொன்னது அது ஒரு மொக்கை படம்.<br /><strong><em>மனைவி :</em></strong> கமல், எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு வேணும்னே சொல்றீங்களா?<br /><strong><em>கணவன் : </em></strong>கமல், அதுல ஒரு பாசிச கருத்தை சொல்லி இருக்கார்...அது மோசமான படம்...<br /><strong><em>மனைவி:</em></strong> இதையே தான் கொஞ்சம் வேற விதமா இந்தியன்ல சொல்லி இருக்காங்க, அப்புறம் அன்னியன்ல சொல்லி இருக்காங்க...அப்போ எல்லாம் , பூச்சி போறது கூட தெரியாம,ஆ ன்னு வாயை திறந்துட்டுப் பார்த்தீங்க...ஹீரோயின் இடுப்பை காட்டிட்டு ஆட்டம் போடலைன்னா உங்களுக்கெல்லாம் எந்தப் படமும் பிடிக்காதே....<br /></span></div><br /><div><span style="font-size:85%;">ஸ்டாப்.....10 நிமிஷம் பிரேக் கொடுங்க...(Have a Kit kat..)<br /></span></div><br /><div><span style="font-size:85%;"><strong><em>மனைவி : </em></strong>சரி, அதை விடுங்க....வாங்க நம்ம கோலங்கள் சீரியல் பார்க்கலாம். அதுல தோழரை, தில்லா அடித்துக் கொண்டிருக்கிறார்..<br /><strong><em>கணவன் :</em></strong> அடடே...ஆமா..மா...இந்த சமயத்துல அந்த தொல்காப்பியன் எங்க போய் தொலைஞ்சான்...<br />: )<br /></span></div><br /><div><span style="font-size:85%;">6. SEX. </span></div><div><span style="font-size:85%;">சாதாரணமாவே, நம்மாளு ஒரு கல்லுளி மங்கன் மாதிரி. அன்பு, பாசம், காதல் எல்லாம் டின் டின்னா டப்பால இருந்தும்,அதை வெளிப்படுத்தவே மாட்டார். ஆனா, இந்த சமயத்துல, காதல் வசனங்களை அள்ளி வீசுவார். உடல்கள் இணைவது மட்டுமல்ல, அந்த சமயத்தில் மனங்களும் இணையும் அதுவே தாம்பத்யம். கணவன் மனைவியரிடம் தோன்றும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் பாம்பன் பாலமாக இருப்பது இந்த மேட்டர் தான்.<br />(டேய்...டேய்...போதும்டா...நிறுத்து...)<br /></span></div><br /><div><span style="font-size:85%;">7. அன்பு. இந்த விஷயத்தில் பெண்களை அடிச்சிக்க ஆள் இல்லை. அதனால இதுல எந்த யோசனையும் கிடையாது. நம்மாளு அன்பை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அன்பை வெளிப்படியாக பெருவதில் பெரு மகிழ்ச்சி அடைவார். அதைக் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் : )<br /></span></div><br /><div><span style="font-size:85%;">8. மருமகள், மாமியார் - சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு. இதைப் பெரிதுபடுத்தி, நம்ம ஜெண்டில்மேன் கிட்ட போய் சொன்னீங்கன்னா, ஒரு ரெஸ்பான்சும் பண்ண மாட்டார். எவ்வளவோ ப்ரூவ் பண்ண நினைச்சாலும், அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார். அட நம்ம அம்மாவை வில்லியாக சித்தரிக்க முயற்சி செய்றாளே, என உங்களைத் தான் வில்லியாக நினைப்பார். ஏன்னா, எப்பேற்பட்ட, தில்லாலங்கடியா இருந்தாலும், இந்த விஷயத்துல பெரும்பாலான ஆண்கள் ஒரே மாதிரி தான். அப்படி ஒரு நினைப்பை வளர விட்டால், உங்கள் மேல் செலுத்தும் அன்பு அரை குறையான அன்பாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, பெண் வீட்டாரிடம் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதும் இதில் இருக்கிறது.<br /></span></div><br /><img id="BLOGGER_PHOTO_ID_5388983610804214402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 175px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPSOGfJiZKutYzRD2ksGQLG07ce-aTty61hXhcAZMMZ0nDXERf6vEqTBl9zSuZ8zJxA_XwOjXLeekH71s8K3zLKp1VQbxyebWu09-_bZrKm3VGWAqqwOi-CIO3tNBN0aP4tsnfaRUclh0/s400/referee.JPG" border="0" /><br /><div><span style="font-size:85%;">இதுல மட்டும் சீரியசா இல்லைன்னா, நம்ம ஜெண்டில்மேன் WWF ல நடக்கும் குத்துச் சண்டை வீரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொள்ளும் Referee வேலையையே, வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டி வரும். அன்பிற்கு நேரம் இருக்காது : )<br /><br />இதெல்லாம் கொஞ்சம் adjust பண்ணி, ஒரு இரண்டு வருடம் பின்பற்றினால், அப்புறம் என்ன எல்லாமே சூப்பர் தான். ஜெண்டில்மேன் மட்டும் இல்ல, அந்த மொத்த குடும்பமே உங்களை மகாராணியா தூக்கி வைத்து கொண்டாடும். பிறகென்ன, கணவனும்,மனைவியும், டிவி விளம்பரத்தில் வரும் சன்ரைஸ் ஜோடி மாதிரி ஒருவொருவருக்கொருவர் அன்பாகவும்,சந்தோஷமாகவும் காபி குடிச்சே காலத்தை ஓட்டலாம் : )<br /><br /><em>கைதுறப்பு: நகைச்சுவைக்காக எழுதியவையே, யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல.</em></span></div><div><span style="font-size:85%;"><br /> </div></span></div>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-91675345274057610922009-09-29T16:05:00.024+05:302009-09-30T11:08:45.218+05:30குடி போதையில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?<p><br /><span style="font-size:85%;">குடிப்பதே தவறு : ) அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது மகா மோசமான தவறு என்பதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். இது உண்மையாக நடந்த சம்பவம்.</span><br /></p><p><span style="font-size:85%;">இரவு சுமார் 9:00 மணிக்கு, கைப்பேசி அலறியது. எடுத்து பேசினேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் அழுகுரல், "ஏன் பா, ரமேஷ்க்கு Accident ஆயிடுச்சு பா....அவன் போன காரை ஒரு லாரி மோதிடுச்சாம் பா...தலையில அடியாம், ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டு இருக்காங்களாம்.....போலீஸ் கேஸ் அது இதுன்னு சொல்றாங்கப்பா...எங்களுக்கு ஒண்ணுமே புரியல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீயா பா..". இதோ உடனே வர்றேங்க...நீங்க பயப்படாதீங்க..தைரியமா இருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். விபத்து நடந்த இடம் சென்னையில் இருந்து 3 மணிநேரப் பயணம். நானும் எனது நண்பரும் காரில் புறப்பட்டோம்.</span><br /></p><p><span style="font-size:85%;">அதிகாலை சுமார் 1:30 மணிக்கு விபத்து நடந்த பகுதிக்கு வந்தடைந்தோம். புத்தம் புது கார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் ரமேஷ்,அந்த காரை எடுத்தார். நம்பர் இடப்பட்டிருந்தது, ஆனால் RC புத்தகம் வரவில்லை. காரின் வலது புறம் முற்றிலும் நொறுங்கி இருந்தது. லாரி இடித்த வேகத்தில், கார் கிட்டத் தட்ட 160 டிகிரி சுழன்று சாலையில் இருந்தது. அங்கு நடந்த சம்பங்களைப் பார்த்த போது, தவறு நம்ம ரமேஷ் மீது தான் என்பது தெளிவாக தெரிந்தது. </span></p><p><span style="font-size:85%;">பிறகு, ரமேஷின் உடல்நிலை விசாரித்தோம். "தலையில் லேசாக அடி மற்றபடி ஒன்றுமில்லை. ஆனால்,Drink and Drive கேஸ் புக் பண்ணி, FIR போட்டாச்சாம். லாரி ஸ்டேஷன்ல இருக்காம். காரையும் tow பண்ணி ஸ்டேஷனுக்கு தான் கொண்டு போகணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க போய் கொஞ்சம் ஸ்டேஷன்ல பார்த்து பேசுறீங்களா...அவரை கைது பண்ணி ஜெயில்ல வச்சுடப் போறாங்க..கொஞ்சம் பார்த்துக்கோங்க..." என்றார் ரமேஷின் மனைவி. </span></p><p><span style="font-size:85%;">ஓகே. சரியான ஆளு கிட்ட தான் கேட்டு இருக்கீங்க. நம்ம்லே இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் ஏறினது கிடையாது. சட்டமும் தெரியாது. கிழிஞ்சது கிருஷணகிரின்னு நினைச்சுகிட்டேன். சரி, முதல்ல காரை ஸ்டஷ்னுக்கு எடுத்துட்டு போகணும். Tow செய்கிற வண்டியை வரவழைத்தோம். சுமார் ஒரு கிமீ தூரத்துல இருக்க ஸ்டேஷன்ல விட 3500 ரூ. அந்த நேரத்துல விலை பேச முடியல. ஆளும் கிடைக்கல. மெதுவா ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். அங்க ஆம்புலன்சுக்கு 1500 ரூபாய்.</span></p><p><span style="font-size:85%;">வேற ஏதோ பிரச்சினைகளில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. பலரும் கை கால்களில் பேண்டேஜ்களுடன் போலீசாருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். மெதுவா உள்ளே போனோம். </span></p><p><span style="font-size:85%;">"என்னப்பா..என்னா" என்றார் அங்கிருந்த ஏட்டு. </span></p><p><span style="font-size:85%;">"சார்...இந்த கார் Accident சம்பந்தமா..." என்று இழுத்தேன்.</span></p><p><span style="font-size:85%;">"ஓஹோ...அந்த Drink and Drive கேசா? நீங்க யார்..என்ன பண்றீங்க.." என்றார். </span></p><p><span style="font-size:85%;">"அவரோட சொந்தக்காரர் சார்...சென்னையில கம்புயூட்டர்ல வேலை செய்றேன்.." என்றேன்.</span></p><p><span style="font-size:85%;">"ஏன்யா...குடிங்க வேணாம்னு சொல்லல....குடிச்சுட்டு எதுக்குய்யா வண்டியை ஓட்டுறீங்க...லாரிக்காரன் பிரேக் பிடிச்சி இருக்கார்....அவன் தான்யா மப்புல வந்து இடிச்சு இருக்கான்...சொல்லுங்க...என்ன பண்ணனும்.." என்றார்.</span></p><p><span style="font-size:85%;">"சார்..எப்படியாச்சும் கேஸ் போடாம விட்டுற்ங்க சார்...லாரிக்காரரோட சமாதானம் பேசிக்கலாம்" என்றேன்.</span></p><p><span style="font-size:85%;">"ஆமாம்யா...இப்போ சொல்லுங்க இதை....அப்பவே சொல்லி இருந்தா பேசி முடிச்சு இருக்கலாம்..யாருமே சொல்லலியே...சரக்குல இருந்த பார்ட்டி கூட சொல்லலியே...இப்போ FIR எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணி ஆச்சு...அது முடியாது...கேஸ் போட்டா தான்யா வண்டிக்கு இன்சுயூரன்ஸ் கொடுப்பான்...உங்களுக்கு நல்லது அது தான்" என்றார்.</span></p><p><span style="font-size:85%;">(எம்டன் மகன்ல வடிவேலு சொல்ற மாதிரி...முன்ன பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க...சரியாப் போச்சே...அப்பா...நீ எங்க இருக்க அப்பா...)</span></p><p><span style="font-size:85%;">"சார்...Drink & Driveனு கேஸ் போடாம விபத்துன்னு மாத்திடுங்களேன்" என்றேன்."எல்லாமே ரொம்ப லேட்டாவே சொல்றீங்களே...படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க...இதை முதல்லேயே சொல்லி இருந்தீங்கன்னா...அவரை GHக்கு கொண்டு போகாம தனியார் ம்ருத்துவமனைக்கு கொண்டு போய் இருப்போம். இப்போ டாக்டர் ரிபோர்ட்ல , ரமேஷ் குடிச்சுட்டு தான் வண்டி ஓட்டினார்னு எழுதிட்டாரே..இனிமே Hit & Runனு மாற்றம் செய்ய முடியாது " என்றார்.</span></p><p><span style="font-size:85%;">"சரிங்க சார்...இப்போ என்ன தான் வழி...நாங்க என்ன பண்ணனும்... அவ்வளவா...இதை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது சார்...நீங்களே சொல்லுங்களேன்..." என்றேன்.</span></p><p><span style="font-size:85%;">"நாளைக்கு ரமேஷை எல்லா ஒரிஜினல் டாகுமெண்டையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்கள்,கைது செஞ்சி, ஸ்டேஷன் பெயிலில் உடனே விட்டுறுவோம். எப்பொழுது ஆஜராகச் சொல்றோமோ...அப்போ வந்து கோர்ட்ல 750 ரூ ஃபைன் கட்டிருங்க..அவ்ளோதான்...காரைப் பொறுத்த வரை, ஆர் டி ஒ க்ளியரன்ஸ் கொடுக்கணும். ஆர் டி ஓ பொதுவா இங்க வரமாட்டாங்க....கொஞ்சம் கவனிச்சீங்கன்னா...இங்க வருவாங்க...அவங்க க்ளியரன்ஸ் கொடுத்த உடனே, எங்க கிட்ட FIR காபி வாங்கிட்டு இன்சுயூரன்ஸ் க்ளைம் க்கு போங்க....அதுக்கு முன்னாடி, இன்சுயூரன்ஸ் கம்பெனிக்காரங்கள வந்து வண்டியை ஒரு போட்டோ எடுத்துக்க சொல்லுங்க...அவ்ளோதான்..." என்றார்.</span></p><p><span style="font-size:85%;">(ஆஹா....இப்பவே கண்ண கட்டுதே....டேய் ரமேஷ்....கம்முன்னு குவார்ட்டரை அடிச்சுட்டு குப்புற படுத்திருந்தா...இவ்ளோ கஷ்டம் வந்திருக்காதே.....)</span></p><p><span style="font-size:85%;">"அவ்ளோ தானா சார்...ரொம்ப தேங்க்ஸ் சார்..." என எழுந்தேன்.</span></p><p><span style="font-size:85%;">"அப்புறம், அதோ இருக்கார் பாருங்க கான்ஸ்டபிள், அவர் கிட்ட போங்க...Formalities எல்லாம் சொல்லுவார்...முடிச்சிட்டு போங்க..." என்றார்.</span></p><p><span style="font-size:85%;">(ஹ்ம்ம்....லஞ்சத்துக்குப் பேரு Formalities ங்களா ஐயா?...ஓகே... )</span></p><p><span style="font-size:85%;">2500 ரூபாய் கொடுத்தேன்.</span></p><p><span style="font-size:85%;">"சரிப்பா....எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க..." என சொல்லி அனுப்பி வைத்தார். மணி காலை 5:30. மறுநாள் ஆர்.டி.ஓ 2000 ரூபாய், காரை சர்வீஸ் செண்டர்க்கு விட 2500 ரூபாய் என காந்தி பறந்துகொண்டிருந்தார். மொத்தம் கிட்ட தட்ட 12000 ரூபாய் செலவு. பண விரயத்தை விடுங்க, ரமேஷ்க்கு ஒண்ணும் அடி படாம இருக்கே...அதுவே ரொம்ப நல்லதுன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்.</span></p><p><span style="font-size:85%;">இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா...</span></p><p><span style="font-size:85%;">1. இவ்வளவு கஷ்டங்களுக்கும், பண விரயத்துக்கும், அலைச்சலுக்கும் வொர்த்தா குடிபோதையில் வண்டி ஓட்டுவது.<br />(12000 ரூபாய், புது கார் நொறுங்கி கிடக்குது,லேசா அடி வேற பட்டு இருக்கு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்..ஃபைன்...அப்பப்பா...நிச்சயமா...அவ்ளோ வொர்த் கிடையாது....)<br /><br />2. நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா...நம்மை விட, நம் டாகுமெண்ட்ஸ் தான் பேசும். அதை பத்திரப் படுத்தி பாதுகாக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஒரிஜினல் டாகுமெண்ட் இல்லைன்னா....பல செக்ஷன்ல கேஸ் போட்றுவாங்க. பெரிய வெயிட் கையா இருந்தா சமாளிக்கலாம்...நம்மல மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்.</span></p><p><span style="font-size:85%;">(தங்கமணி, என் டிகிரி சர்டிபிகேட் எந்த பரணை மேல இருக்கு...கொஞ்சம் தேடிக் கொடுக்குறீயா...)<br /><br />3. சரக்கு அடிச்சீங்கன்னா...வண்டி எடுக்காதீங்கோ.....ஏன்னா, நம்மாளுடைய Split Personality, மது உள்ள போன பிறகு தான் தெரியவரும்.</span></p><p><span style="font-size:85%;">(வடிவேலு பாணியில், ஆமா....அது வேற வாயி....இது நார்ற வாயி...)</span></p><p><span style="font-size:85%;">4. அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?</span></p><p><span style="font-size:85%;">(அட நன்னாரிப் பயலே இதெல்லாம் ஒரு வாதமா? )</span></p><p><span style="font-size:85%;">இவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்..."டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்..."</span></p><p> </p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-1615115049455570432009-09-18T11:43:00.013+05:302009-09-18T12:23:54.962+05:30பிரபலங்களின் வேண்டுதல்கள் !<p align="left"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG5fhxl7B6GBYc9RZKKFENYGuOGDuDMWVbYqYHeX54kV1UvJ-SSQTU71LO7HzJsOWytb7nKJ0BrVqU3uIVFdRL9PSq1N-2hOXDYTtYNXJ5OKw0bhphcpX4GOl4loxVrd_hiL2P9h4H74c/s1600-h/karuna.JPG"></a></p><br />பொதுவாகவே கோவிலுக்கு போயிட்டு வரும்போது மனசு ரொம்ப நிம்மதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். இதுக்கு ஒரு முக்கிய காரணம், நம்ம மனசுல இருக்குறது அப்படியே இன்னொருத்தர் கிட்ட சொன்ன திருப்தி கிடைக்குறது தான் இந்த நிம்மதிக்கு முக்கிய காரணமாக தெரியுது.<br /><br />சரி. இந்த மாதிரி நம்முடைய பிரபலங்கள் இப்ப இருக்க நிலைமையில தங்கள் மனசுல இருக்குறத கடவுள் கிட்ட சொல்ற மாதிரி இருந்தா...என்ன சொல்லுவாங்க...என்ன கேப்பாங்கன்னு ஒரு கற்பனை தான், சீரியசா எடுத்துக்காதீங்க : )<br /><br /><strong><em>சோனியா காந்தி : </em></strong>கடவுள்ஜி, எப்படியாவது என் மகன் ராகுலை பிரதமர் ஆக்கிடுங்கஜி. இப்போ, லுதியானாவிலிருந்து டில்லிக்கு ரயிலில் அனுப்பி வச்சது போல, தில்லியிலிருந்து திருப்பதிக்கு நடை பயணம் அனுப்பி, மொட்டை அடிச்சு காது குத்துறேன் பெருமாள் ஜி...!<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5382695201998613010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 286px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhMJ9iKNfVapuGkqIXCo7GXt1Kn6bi-UzCZ4C_EuhTVOR3ypJYfDit8B7xwG3ho8MYyebHgDAfoyIMihKV25Ng_oQWSIW97E9vwbC_2JP-LwuXVm2o-p6Ed34KeiO4jkA0ZWuq7DlDR_I/s400/karuna.JPG" border="0" /><br /><strong><em>கருணாநிதி : </em></strong>என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!<br /><br />(<em><strong>கடவுள் :</strong></em> ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)<br /><br /><strong><em><br />ஜெயலலிதா : </em></strong>என்னுடைய பிரதமர் ஆசையை கூட விட்டுடுறேன்....ஆனா, எப்படியாவது இந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செஞ்சுடு.<br /><br />(<strong><em>கடவுள்:</em></strong> என்னம்மா....என்னிடமும் மைனாரிட்டி திமுக அரசு அடைமொழி தேவையாம்மா?)<br /><br /><strong><em>விஜய் : </em></strong>என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் ! இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...!<br /><br /><strong><em></em></strong><br /><strong><em>கி.வீரமணி :</em></strong> முருகா நான் திருந்திட்டேன் முருகா...கடவுள் இல்லைன்னு கூட்டத்துல பேசுறத பார்த்து தப்பா நினைச்சுக்காத முருகா....அதெல்லாம் சும்ம லுலுலாயிக்கு....திராவிட கழகத்தின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன, ஆனால் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே.....கல்வியறிவு படைத்தவரிடம் நம் கொள்கையை விற்று காசாக்க முடியவில்லையே....ஆகையால், சாமானிய மக்களுக்கு கல்வி அறிவை கொஞ்சம் பொறுமையாகவே கொடு, பதவியையும் பணத்தையும் மட்டும் எங்களுக்கு உடனே அள்ளிக் கொடு !<br /><br />(<strong><em>கடவுள்:</em></strong> உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு. ரத்தம் சூடா இருக்க வரைக்கும் ஆட வேண்டியது, அதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் ஓடி வர வேண்டியது. சரி வாங்க...வந்து பஞ்சாமிர்தம் சாப்பிடுங்க..! )<br /><br /><strong><em>விஜய டி.ஆர் :</em></strong> வேலாயுதா, லட்சிய திமுக ஆரம்பிச்சு கிட்ட தட்ட 5 வருஷம் ஆகப் போகுது, ஆனா, போன தேர்தல்ல என் பையன் கூட என் கட்சிக்கு ஓட்டு போடல. என் குடும்பத்துல இருக்கவங்க மட்டுமாவது எனக்கு ஓட்டு போட வச்சுடு. டண்டனக்கா...டனக்கனக்கா....<br /><br /><strong><em>அழகிரி : </em></strong>எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9dv-jRzyzpwN_c7fQHM-5wC8JGaHe_Kq7YYXyfbVT-v-HqCxIR-KGDLGx-xVD3r1D7oXVW1g5VNf5qCSILklq19mq7lgIxr7-wEyTrHu8Um_2qQNbc0lhgxJAAr_5UMWetMMEnC2ANOU/s1600-h/manmohan.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5382694760997975186" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 237px; CURSOR: hand; HEIGHT: 261px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9dv-jRzyzpwN_c7fQHM-5wC8JGaHe_Kq7YYXyfbVT-v-HqCxIR-KGDLGx-xVD3r1D7oXVW1g5VNf5qCSILklq19mq7lgIxr7-wEyTrHu8Um_2qQNbc0lhgxJAAr_5UMWetMMEnC2ANOU/s400/manmohan.JPG" border="0" /></a><strong><em>மன்மோகன் சிங் :</em></strong> My God, People of India, Love you . Ho, GOD, Inflation, GDP, Consumer Price Index, Fiscal deficit, 123 Agreement..........<br /><br /><br /><br />(<strong><em> கடவுள்: </em></strong>ஹலோ மன்மோகன், ஜனங்களுக்கு புரியுற மாதிரி பேசலைன்னா கூட பரவாயில்லை....எனக்கு புரியுற மாதிரியாவது பேசுறீங்களா?)கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-22069634076399676422009-08-31T16:07:00.006+05:302009-08-31T16:25:07.825+05:30ஆலோசனை வழங்க போறீங்களா..ஒரு நிமிஷங்க..!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiJfDp2pd9o3vbzWZCCYhXgnEBeaEOsuMAAY3JgJjLIQW-QJS8MRv3ezQde1ZIpYRQMhx4W9ycGsH_vWrNGM-U5NEr-cV2vFa43rPyi4UYoBlj3G2cRqQbLD1vhRUkXDL9dUdhawfv9bs/s1600-h/confusion.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5376077379737611874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 360px; CURSOR: hand; HEIGHT: 377px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiJfDp2pd9o3vbzWZCCYhXgnEBeaEOsuMAAY3JgJjLIQW-QJS8MRv3ezQde1ZIpYRQMhx4W9ycGsH_vWrNGM-U5NEr-cV2vFa43rPyi4UYoBlj3G2cRqQbLD1vhRUkXDL9dUdhawfv9bs/s400/confusion.JPG" border="0" /></a><br />பொதுவாகவே, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்பது நமக்கு அல்வா சாப்பிடுவது போல இருக்கும். தெரியாத்தனமா ஒருத்தர் வந்து நம்ம கிட்ட ஆலோசனை கேட்டார்னா...அவ்ளோ தான், அவரை ஒரு அரை மணி நேரம் மொக்கை போட்டு அனுப்புவோம். அவருக்கு தகுந்த, சரியான ஆலோசனை கிடைத்ததா இல்லையா என்பது மறுபடியும் அவர் நம்மிடம் ஆலோசனை கேட்டு வருகிறாரா, அல்லது நம்மைப் பார்த்த உடனே ஓடுகிறாரா என்பதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.<br /><br />அறிவுரை என்பது சான்றோர், எளியவனிடம் வழங்குவது. ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் கொடுப்பது தான் அறிவுரை. இன்றைய கால கட்டத்தில் அறிவுரை(Advice) வழங்குவது என்பது, ஆப்பைத் தேடி நாமே உட்காருவதற்கு சமம். ஆனால், ஆலோசனை வழங்கவோ, கேட்கவோ இவை போன்ற பாகுபாடுகள் இல்லை. அதுமட்டுமல்லாமல், அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் மனநிலையில் உள்ளது. ஆகையால்,எதைச் சொல்வதானாலும் அதனை ஒரு ஆலோசனையாக(suggestion) சொல்வதே சிறந்தது..<br /><br />அப்படி ரொம்ப சின்சியரா, நம்ம கிட்ட வந்து ஒருத்தர் ஆலோசனை கேட்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.<br /><br />அப்படி ஆலோசனை வழங்கும் போது நாம் கடைபிடிக்கவேண்டிய அத்தியவாசியமான அணுகுமுறைகளை இங்கு பார்ப்போம். அனைவருக்கும் தெரிந்தது விஷயங்கள் தான் என்றாலும் ஒரு சின்ன ரிமைண்டர்.<br /><br />1. மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முதல் தகுதியே, நாம் , அவருடைய நிலையில் இருந்து பிரச்சினையை யோசிக்க வேண்டும். வருகிறவரின் மனநிலையை நன்கு உணர்ந்தால் தான், அவருக்கு சரியான முறையில் ஆலோசனைகளை எடுத்துச் சொல்ல முடியும்.<br />ரொம்ப கஷ்டத்தோட ஒருத்தர் அவருடைய வேதனையை நம்மிடத்தில் சொல்லி வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,<br /><br />2.அவர் சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே ஆலோசனை வழங்கலாம். தெரியவில்லை என்றால் இதைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது என்று பளிச்சென்று கூறிவிடுவது நல்லது. "அதெப்படி, என் கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்...தெரிலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்.." என்று நினைக்கக் கூடாது. தவறான ஆலோசனை சொல்வதை விட, ஆலோசனை சொல்லாமல் இருப்பதே மேல்!<br /><br />3.நம்ம கிட்ட ஒருத்தர் வந்து கேக்குறார்னா....அவரை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும்.நாம் அதனை கவனித்துக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும், இடையில் குறுக்கிடக் கூடாது. நம்மில் பலர், அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முந்திக்கொண்டு சொல்யூஷன் சொல்லிடுவாங்க. என்ன சொல்ல வர்றார்னே தெரியாம, கொடுக்குற ஆலோசனை நிச்சயம் utter flop தான்.<br />ஆசிரியர் கேள்வியை முடிப்பதற்குள், மாணவர்கள் பதிலளித்தல், பள்ளியில் வேண்டுமானால் நமது திறமையை நிரூபிக்கலாம், ஆனால் இங்க அது ஒத்து வராதுங்க.<br /><br />4.இன்னொரு முக்கியமான மேட்டர். எவ்வளவோ குழப்பத்துக்கு நடுவில், நம்மையும் ஒரு ஆளாக மதித்து, ஒருவர் ஆலோசனை கேட்கிறார். அப்படி வருகிறவரிடம், இது தான்யா சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, நம்முடைய பொது அறிவையோ, மொழித் திறமையையோ வெளிப்படுத்தி பந்தா காண்பிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி....நெகடிவ் எஃபெக்ட் தாங்க.<br /><br />5. தவறான விஷயங்களுக்கு ஆலோசனை அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். உலகத்தில் எந்த ஒரு மனிதனும், தவறு செய்வதற்கு முன்னால் எவரிடமாவது நேர்முகமாக, மறைமுகமாகவோ ஆலோசனை பெற்றவர்கள் தான். அதனால, தவறான விஷயங்களுக்கு, இது தவறு என்று புரிய வைத்து, ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட வேண்டும்.<br /><br />6. ஆலோசனை என்கின்ற பெயரில் நம்முடைய கருத்தை மற்றவரிடம் திணிப்பது ரொம்ப அநாகரிகமான மேட்டர். அதனால, இது தான் பிரச்சினையா, இதுக்கு இத்தனை வழிகள் இருக்கு....இந்த வழியில் போன இது நல்லது இது கெட்டது..என பல வழிகளைச் சொல்லி, அதில் அவருக்கு பொருத்தமானவற்றை அவர் தேர்ந்தெடுக்க வழி வகை செய்ய வேண்டும்.<br /><br />7. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நம்மிடம் ஆலோசனை கேட்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான். ஏதோ பிரச்சினைன்னு நம்ம கிட்ட வந்து, அவர்கள் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளியில் சொல்லும் போதே, பாதி சரி ஆயிடுவாங்க. மனசுல இருக்குற பாரமும் குறைஞ்சுடும். மேற்கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்துறதான், ஆலோசனை வழங்குவதன் முக்கிய நோக்கம்.<br /><br /><br />ஏதாவது முக்கியமான பாய்ன்ட் விடுபட்டிருந்தால்...மறுமொழிகளில் தங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது : )கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-4749834682346661612009-08-28T11:33:00.012+05:302009-08-28T12:15:30.220+05:30தாத்தா...தப்புப் பண்ணிட்டேன் தாத்தா...!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnhtjcETjEQ84ndfaG996hNreKjKoDyuyMcLHyEdLMbGhxK_JgZsqOAkd_7mcztLwZl3yMi-sZTEFcF4z1u21PnFQfI-tMtuMGscLSmUG6cbkPe7G37isy1y2bM0clPHJ3ri1Qr4POz68/s1600-h/sivaraj.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5374899515905771250" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 98px; CURSOR: hand; HEIGHT: 96px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnhtjcETjEQ84ndfaG996hNreKjKoDyuyMcLHyEdLMbGhxK_JgZsqOAkd_7mcztLwZl3yMi-sZTEFcF4z1u21PnFQfI-tMtuMGscLSmUG6cbkPe7G37isy1y2bM0clPHJ3ri1Qr4POz68/s320/sivaraj.JPG" border="0" /></a> தமிழ்நாட்டுல ஒரு ஆம்பளை கூட சரியான ஆண்மைத் தன்மையோட இல்லங்கறது தான் உண்மை. சின்ன வயசுலே இருந்தே அவன் தப்பான பழக்கத்துக்கு ஆளாயிடுறான். சராசரியா, ஒரு பையன், 14,15 வயசுல தப்பு பண்ண ஆரம்பிக்குறான்(என்ன தப்புன்னு எல்லாம் கேக்கக் கூடாது). அவன் பண்ற தப்புல ஒவ்வொரு முறையும் 40 சொட்டு ரத்தம் வீணா போகுது. இப்படி செஞ்சி செஞ்சி, அவன் கல்யாண வயசு வர்றதுக்குள்ள, நாடி நிரம்பெல்லாம் தளர்ந்து போய், எல்லா சக்தியையும் இழந்துட்டு நிக்குறான். அதுக்கு அப்புறம், தாத்தா தப்பு பண்ணிட்டேன் தாத்தா, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் தாத்தான்னு என் கிட்ட ஓடி வர்றான்....அவனை எல்லாம் பார்த்தா எனக்கு பளார்னு அறையனும் போல இருக்கும்...இந்த நிலைமையில இருக்குற நீ கல்யாணம் பண்ணிக்கலாமா? வீணா கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பண்ணிடாத...உன்ன எல்லாம் என் பேரப்பசங்களா நினைச்சி தான், திரும்பி திரும்பி இதையே சொல்லிட்டு வர்றேன். உங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல கூச்சப்பட்டீன்னா....நீ மட்டும் தனியா வா...முதல்ல குணம் ஆக்கிட்டு, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...ஆசையா வர்ற பொண்ண ஏமாத்தாத....<br /><br /><br />ஐயா....இதெல்லாம் நான் சொல்லலிங்க....எந்த தமிழ்ச் சேனல் பக்கம் திருப்பினாலும், நம்ம தாத்தா : ) வந்து நம்மல பாடா படுத்துறார். அவர் பேர் சொல்லணும்னு அவசியமே இல்லை...அந்த அளவுக்கு அவர் பாப்புலரான தாத்தா. அவர் சொல்கிற வைத்தியம் உண்மையோ, பொய்யோ , ஆனா, இந்த மாதிரியான எசக்கு சக்கான மேட்டர்ல அப்பாவி பசங்கள பயமுறுத்தி, பணம் பறிக்கும் வேலை மட்டும் நடந்துகிட்டு தான் இருக்கு.<br /><br /><br />நிஜமாவே, அவர் பேசுறத எல்லாம் பார்த்தா, நல்லா இருக்குறவனுக்கு கூட ஒரு வித பயம் வந்துடும். ஏன்னா, அவர் சொல்ற அறிகுறிகள் பாத்தீங்கன்னா ரொம்ப பொதுவானவை. ஆங்கில மருத்துவத்தில், இதெல்லாம் நார்மல் தான், அனைவருக்கும் இவ்வாரெல்லாம் இருப்பது இயல்பு தான்னு சொன்னாலும், நம்ம தாத்தா விடுற உடான்சும், அவர் சொல்கிற விதமும், (ரொம்ப விறுவிறுப்பாக இருந்தாலும்), அனைவருக்கும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதிலும், இது போன்ற விஷயங்களில் பெரும்பாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் தான்.<br /><br />பொதுவாகவே, போர் யுக்தி முறைகளில் Psychological Warfare என்ற ஒரு வகை உண்டு. அதாவது எதிரியின் படைகளின் மன வலிமையையும், உற்சாகத்தையும் அழிப்பது. ஆப்கான் போர் தொடங்கிய போதே, அமெரிக்கா ஹெலிகாப்டரின் மூலமாக துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாம். அதில் "அமெரிக்க ராணுவம் பல முக்கிய இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் மற்ற இடங்களையும் பிடித்துவிடுவோம். பல முக்கிய தாலிபான் தலைவர்கள் அவ்ர்களாகவே எங்களிடம் வந்து சரண் அடைந்து வருகின்றனர். நீங்களும் சரண் அடைந்து விடுங்கள். இல்லையேல் எங்கள் போரின் உச்சத்தைப் பார்க்க நேரிடும்." என்பது போல எழுதி வினியோகித்தனர். இப்படி தான் ஒருத்தனை மனதளவுல பலவீனப் படுத்தி, பணத்தை பறிக்க நம்ம ஊர்ல பெரிய கூட்டமே தயாரா இருக்குங்க.<br /><br />அதே மாதிரி தான் பல சித்த வைத்தியர்கள் இருக்காங்க. இவர் மட்டுமல்ல, இது மாதிரி யுனானின்னு சொல்லி ஏமாத்துறது, ஏன் லேகியம் கூட விக்குறாங்க டிவி மூலமா.<br /><br />இதுல என்ன காமெடின்னா, தாத்தாவை அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனா, நம்ம தாத்தா திடீர்னு "இதோ பாருப்பா, உனக்கும் தான் சொல்றேன், நீயும் என் பேரன் மாதிரி, நீ சின்ன வயசுல நிறைய தப்பு பண்ணி இருந்தா சொல்லிடு, எந்த பிரச்சினை இருந்தாலும் சரி பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ...வீணா ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணாத " அப்படின்னார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு எப்படி ரியாக்ட் பண்றதுண்ணே தெரியாம வழிஞ்சது சிரிப்போ சிரிப்பு.<br /><br />எந்தெந்த விஷயங்களை நாம் வெளிப்படையாக பேச கூச்சப்படுகிறோமோ, அதையே மூலதனமாக வைத்து, இவரைப் போல பல வைத்தியர்கள் தங்கள் கஜானாவை நிரப்பி வருகிறார்கள். பணம் மட்டும் விரயமானால் கூட பரவாயில்லை, மனதளவில் தாக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவைகளாக இருக்கிறது இவர்களது தந்திர பேச்சுக்கள்.<br /><br />இதை எல்லாம் தடுக்கணும்னா, எந்த ஒரு விஷயமா இருந்தாலும், பெற்றோர்களிடத்தில் ஆலோசனை கேட்பது தான் மிகச் சிறந்த வழி. பெற்றோர்களும் பிள்ளைகளிடம் எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசத் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் உடல் சம்பந்தமான, செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை பொதுவாக வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆகையால், அன்றைய பெற்றோர்கள், இவற்றை எடுத்தக் கூறவில்லை. ஆனா, இப்போ, தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக சகல விஷயங்களும் மிகவும் இளம்பருவத்திலேயே பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால, யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மூலமாக நம் பிள்ளைகளுக்கு இவைகளை தெரியப்படுத்துவதை விட, நாமே நல்ல விதத்தில் எடுத்துக் கூறுவது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். பிள்ளைகளும் தமக்கு உள்ள பிரச்சினைகளை கூச்சப்படாமல் வெளிப்படையாக பெற்றோர்களிடம் சொல்ல இது வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது !<br /><br />டேய், இதைப் பற்றி எல்லாம் எப்படிடா பிள்ளைங்க கிட்ட பேச முடியும்னு நீங்க கேக்குறது புரியுது.....கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-17847312161618298282009-08-25T15:50:00.011+05:302009-08-26T11:00:08.471+05:30டேடி.... உச்சா....உச்சா வருது !<p>போன வாரம், நான், என் மனைவி,என் பையன் தீபு(2 வயசு ஆகப் போகுது) மூணு பேரும் தி நகர்க்கு ஷாப்பிங்க் கிளம்பினோம். பல்சர எடுத்தேன். டேடி, Frontla, டேடி, Frontlaனு சொல்லி முன்னாடி வந்து உட்கார்ந்துகுட்டு...டுர்ர்...டுர்ர்...ந்னு acceleratora ஒரு சுழட்டு சுழட்டிட்டு கொடுத்தான்.இங்க பாரு மா, கையில பைசா இல்ல, அதனால ஏ டி எம் போயிட்டு, போகலாம்னு வண்டியை நிறுத்தினேன். நான், பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். என் மனைவி, பக்க்துல இருக்க மெடிக்கல் ஷாப்ல, என் பையனுக்கு செர்லாக் வாங்க போய்ட்டா. சரின்னு, வண்டியில உட்கார்ந்தபடி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.</p><p>திடீர்னு ஒருத்தர் வந்தார். சின்ன பையன் தாங்க..ஒரு 16 வயசு இருக்கும். நெற்றியில விபூதி குங்குமம், தோளில் ஒரு ஜோல்னா பை மாட்டிட்டு இருந்தார். </p><p>சார், நாங்க முருகன் கோவிலுக்கு நடைபயணம் போயிட்டு இருக்கோம், உங்க கையை காட்டுங்க, ஜோசியம் பார்த்து சொல்றேன்னு சொன்னார். </p><p>இல்லை, ராஜா, நான் ஏற்கனவே ஜோசியம் பார்த்து இருக்கேன். வேணாம்பான்னு சொன்னேன். என்னாங்க சார், இத்தனை பேரு இருக்காங்க...அவங்க எல்லாரையும் விட்டுட்டு, உங்க கிட்ட மட்டும் வந்து கேக்குறேன்னா எப்படி...ஆண்டவன் என் மூலமா ஏதோ சொல்லி விட்டுறுக்காருங்க சார்...கொஞ்சம் கேட்டுப் பாருங்க.. </p><p>அடடா...கடைக்குப் போன மனைவி இன்னும் வரலியே...எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா..முடியாது போல இருக்கேன்னு நினைச்சேன்.<br />இல்லை ராஜா, வேணாம்பான்னு சொன்னேன். சரிங்க சார், இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சார்...மனசுல ஏதாச்சும் தலையில் சூடுகிற போடுகிற ஒரு பூவை நினைச்சிக்கோங்க.<br /><br />சரிப்பா நினைச்சுக்கிட்டேன். (இங்க தான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன்..)</p><p>நீங்க நினைச்ச, பூவை நான் சரியா சொல்லிட்டேன்னா....உங்களுக்கு நான் ஜோசியம் பாக்குறேன்னு சொன்னார் அந்த ஜோல்னா ஜோசியர்.<br />விட மாட்டாங்க போல இருக்கே....சரிப்பா...சொல்லு...</p><p>மல்லிப் பூ....சரியாங்க சார்..</p><p>அடங்கொக்கா மக்கா.....கரெக்டா சொல்லிட்டானே.....முருகா...இனிமே இந்தக் கைப்புள்ளையை நீ தான்யா காப்பாத்தணும்......ஆமாம் பா சரியா சொல்லிட்டே..</p><p>சரிங்க சார்...வண்டியை விட்டுட்டு கொஞ்சம் இப்படி வாங்க சார்னு கூப்பிட்டு, வழக்கமா சொல்ற கதைகள் ஓரிரு வரிகள் சொல்லிட்டு,உங்க பிடிச்ச தெய்வம் யாருங்க சார் நு கேட்டார்.</p><p>சிவபெருமான் பிடிக்கும் பா ந்னு சொன்னேன்.</p><p>பாக்கெட்ல இருந்து சிவன்-பார்வதி படத்தை எடுத்து அவர் கையில வச்சார். ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு சொன்னார். நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்...</p><p>எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு...என்னப்பா ந்னு கேட்டேன்...<br />இருங்க சார்...வீட்ல வளர்க்கிற ,கோயிலில் இருக்கிற பறவை எதாவது ஒண்ணை நினைச்சுக்கோங்கன்னு சொன்னார். நினைச்சிக்கிட்டேன். என்ன நினைச்சீங்க..சொல்லுங்க...</p><p>காக்கா ந்னு சொன்னேன். சார், காக்காவையா வீட்டில வளர்ப்பாங்க...சரி மைனான்னு சொன்னேன். சார், மைனாவா கோயிலில் இருக்கும். சரி, புறா ந்னு சொன்னேன்.</p><p>சரிங்க சார். இப்போ நீங்க நினைச்ச புறாவையே இந்த ரூபாய் நோட்டுல நான் எழுதி இருந்தா...இந்த பணம் கோயில் அன்னதானத்துக்கு போயிடும்னு சொல்லிட்டு...அந்த ரூபாய் நோட்டை எடுத்து காட்டினார்...கரெக்டா புறான்னு எழுதி இருந்தது..</p><p>நமக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு...ஐநூறு ரூபாயா.....ராஜா...ஒரு நூறு ரூபாய் எடுத்துக்கோ...மிச்சம் கொடுத்துடு.....</p><p>தெய்வ குற்றம்,அது இதுன்னு சொல்லி இருநூறு ரூபாய் உருவிட்டார்...<br />சார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.</p><p>கடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க. என் பையன் ஓடி வந்தான்....டேடி உச்சா....உச்சா வருது....</p><p>அப்பாடி இதோட தப்பிச்சடணும்டா சாமி....வேலை இருக்குப்பா..போதும்...கிளம்புறேன்...</p><p>சார்...கடைசியா ஒரு கேள்வி சார்....ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வைங்களேன்...சார்...</p><p>ஐயா...போதும்யா....இருநூறு ரூபாயே ரொம்ப ரொம்ப ஓவர்......அப்படின்னு என் பையன் சொன்ன மேட்டரை கவனிக்க போய்ட்டேன்....</p><p>ஆனா, ஒண்ணுங்க....என் பையனுக்கு மட்டும் சரியான நேரத்துல உச்சா வரலைன்னா....ஆயிரம் ரூபாயை விட்டு இருப்பேங்க.....</p><p>"ஒரு சின்னப் பையன், 10 நிமிஷம் பேசி, இருநூறு ரூபாய் வாங்கிட்டான் பாருங்க...உங்கள எல்லாம்....." என்று மனைவியின் புலம்பல்களோடு, ஷாப்பிங்க் போயிட்டு வந்தோம்...<br /></p><p>எப்படி எல்லாம் டெக்னிகல ஏமாத்துறாங்க பாருங்க.....</p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-77841137268109598742009-08-18T16:57:00.047+05:302009-08-19T11:17:31.995+05:30ஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoYJdMphkRFnAXsde4AY-47J0HNVpdw33zrCV1HQfk1fjjvGBhmd6RQ8eFgXj3m_F6U8Wed5OXAfc_sYdP-KltKPP1oNjqp4954ZTe76UBlVI01c5aMsQuzPim2hyphenhyphenz1tgXiZ1U3sT-Cy4/s1600-h/map1.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371266465698008594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 329px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoYJdMphkRFnAXsde4AY-47J0HNVpdw33zrCV1HQfk1fjjvGBhmd6RQ8eFgXj3m_F6U8Wed5OXAfc_sYdP-KltKPP1oNjqp4954ZTe76UBlVI01c5aMsQuzPim2hyphenhyphenz1tgXiZ1U3sT-Cy4/s400/map1.JPG" border="0" /></a><br />சமோவான்னு ஒரு நாடு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்துல ஆறு மணி நேரம் பயணம். குட்டி குட்டி தீவுகள் எல்லாம் சேர்ந்தது தான் சமோவா. அதுல முக்கியமான தீவுகள் உபோலு மற்றும் சவாய். மக்கள் கொஞ்சம் அதிகமாக வாழும் தீவு உபோலு அதன் தலைநகரம் ஆபியா. அங்க தான் நம்மல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா அனுப்பி இருந்தாங்க. நண்பர் சரவணகுமாரும் என்னுடன் வந்திருந்தார்.<br /><p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtnhOOccho8mTpBNjx5hXr4FeZfYxoFgT7LHzCCavXIwtTiStCkLlAJCrtlOCthEN9NW13rq6zoL_-wjY3iC6Xy7zcOyAetannTYOfN9x2Rciu13iywaGnkpwfr8OsDjIVwdd-4Tvq0P8/s1600-h/upolu.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371269981171814258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtnhOOccho8mTpBNjx5hXr4FeZfYxoFgT7LHzCCavXIwtTiStCkLlAJCrtlOCthEN9NW13rq6zoL_-wjY3iC6Xy7zcOyAetannTYOfN9x2Rciu13iywaGnkpwfr8OsDjIVwdd-4Tvq0P8/s320/upolu.JPG" border="0" /></a></p>அருமையான ஊரு, எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருக்கு. ரொம்ப மரியாதையான,அன்பான ஜனங்க, நம்ம ஊர் மாதிரியே. பழ வகைகள் எல்லாம் அங்கேயே விளைந்தாலும், உணவுப் பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் நியூசிலாந்தில் இருந்து தான் இறக்குமதி பண்றாங்க. நல்ல சுற்றூலாத் தளம் சமோவா. ஆனா, மலேசியா, சிங்கப்பூர் மாதிரி ஒரு Lively,ஆரவாரமான ஊர் இல்லை. கொஞ்சம் அமைதியான இடம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பெரியவர்கள் தான் சுற்றுலாவிற்கு பெரும்பாலும் வர்றாங்க. சூரியன் கடைசியாக பார்க்கிற நாடு சமோவா தான்னு சொல்றாங்க. கிட்ட தட்ட ஒரு நாள் time difference இருக்குங்க, இந்தியாவோட ஒப்பிடும் போது.<br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguEibTf15-9UiM6St9cx_vz12nzNo5B2zCRf-7f6NtEWYj-Vt9it1FNP4BM9fTGP9dOI_AnEYN-Pk21eYYfXJhIug-u7vjUk6C56iH7-4QAPzqJ1u_TuuutK_pr3ueueMPcU4mHs_Rc1A/s1600-h/lalmano+beach.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371270906862660722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguEibTf15-9UiM6St9cx_vz12nzNo5B2zCRf-7f6NtEWYj-Vt9it1FNP4BM9fTGP9dOI_AnEYN-Pk21eYYfXJhIug-u7vjUk6C56iH7-4QAPzqJ1u_TuuutK_pr3ueueMPcU4mHs_Rc1A/s320/lalmano+beach.JPG" border="0" /></a><br />Weekendல ஊரை சுற்றி காட்டினாங்க. இதோ இது தான் அந்த ஊர்ல இருக்க லால் மானோ பீச். Clear Water Beach ஐ பார்க்குறது நமக்கு இதுவே முதல் முறை, நல்லா ஒரு குளியலை போட்டுட்டு கிளம்பினோம். கிட்ட தட்ட ஒரு 6 மணி நேரத்துல, அந்த தீவை முழுவதுமாக சுற்றி வந்து விட்டோம். வழி நெடுக்க அடர்ந்த மரங்கள், தொடப்படாத இயற்கை என அப்படி ஒரு விருந்து நம் கண்களுக்கு.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1YEpoiXfyqo0qkr7MuByyUEhq0J9xuHOoDlEqoJzpDI7x3D2vllc9V0sbUl8QczLLz3ZfVCtFtjTPTCDmsuONfsElkhho9K7rq_PkPiO3FYLmxtXkRCCDeOz_AiKMO0EDYvMwk4cr4F4/s1600-h/Ferrysavaii.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371269973400782418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1YEpoiXfyqo0qkr7MuByyUEhq0J9xuHOoDlEqoJzpDI7x3D2vllc9V0sbUl8QczLLz3ZfVCtFtjTPTCDmsuONfsElkhho9K7rq_PkPiO3FYLmxtXkRCCDeOz_AiKMO0EDYvMwk4cr4F4/s320/Ferrysavaii.JPG" border="0" /></a><br />அதே மாதிரி அடுத்த வார இறுதியில், மற்றொரு தீவான சவாய்க்கு போக பயண ஏற்பாடு செஞ்சாங்க. ஃபெர்ரி மூலமாகத் அந்த தீவுக்கு போக கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது. நம்ம ஊர்ல கன்னியாகுமர்ல படகு சவாரி செஞ்சி இருந்தாலும், இவ்வளவு நேரம் கடலில் பயணித்தது கிடையாது. நல்ல அனுபவம்.<br /><br />இரவு ஏழு மணி இருக்கும் ஒரு ரிசார்ட்க்கு வந்தோம். எனக்கும் சரவணனுக்கும் தனித் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியைக் கொடுத்தார்கள். சரின்னு, ரூம்க்கு வந்து பார்த்தோம். ரெண்டு மாடி கொண்ட ரூம். கீழ்த்தளத்தில் ஒரு ஹால், அதோடு இணைந்த சமையலரை, அதன் அருகில் குளியலரை. மேல்மாடியில் ஒரு டபுள் பெட், மற்றும், தனியாக ஒரு சிங்கிள் பெட் என பெரிதாக இருந்தது அந்த அறை. நம்ம தான் திருவெல்லிக்கேணி மேன்ஷன்ல எட்டுக்கு எட்டு ரூம்ல 4 பேரு தங்கினவங்க ஆச்சே...அதனால பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி, நம்ம ரெண்டு பேரும் இதே ரூம்லியே இருந்துக்கலாம் சரவணா, எதுக்கு வீணா Client காசை(170$) வீணாக்கனும், இன்னொரு ரூம் சாவியை கொடுத்துடலாம்னு போனோம். ஒரு ரூம் போதுங்க...நாங்க ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னோம். அவ்ளோ தான், எல்லோராட பார்வையும் எங்க பக்கம் திரும்புச்சு...ரிசப்ஷனிஸ்ட் ஒரு மாதிரியா சிரிச்சாங்க..எங்க கூட வந்தவங்களும் ஒரு மாதிரியான நக்கலா பார்த்தாங்க.."உங்க ரெண்டு பேருல யாரு கம்பெனி இல்லாம படுக்க மாட்டீங்கன்னு" கேட்டாங்க. நாங்களும் அசடு வழிய...அப்படி எல்லாம் இல்லைங்க...ரூம் பெருசா இருக்கு..பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்..ஒரு இரவு தானே ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னேன். ஒரு வழியா ரூம்க்கு வந்துட்டோம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDsIjAxW1sBXnSpCYQpncm9srmSDEXGK94oZvV4IYEKHX2k_yftol0_jg0XxFbUOHG00VkAB1mLQ_0NEhR1WXvdKU0SwXl8WWGi6fQfcaGf85c7R9J3-C3N9iUiRkbnBzPPcd7aYWMzak/s1600-h/savaiihotel.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371272535369452610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDsIjAxW1sBXnSpCYQpncm9srmSDEXGK94oZvV4IYEKHX2k_yftol0_jg0XxFbUOHG00VkAB1mLQ_0NEhR1WXvdKU0SwXl8WWGi6fQfcaGf85c7R9J3-C3N9iUiRkbnBzPPcd7aYWMzak/s320/savaiihotel.JPG" border="0" /></a><br />ரூம் எதிரிலேயே கடற்கரை, அருமையான் காற்று என அம்சமா இருந்துச்சு. நல்லா தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை உணவுக்கு போனோம். வழக்கம் போல, தட்டை தூக்கிட்டு பிரட், கார்ன் ப்லேக்ஸ்,முட்டை, மஞ்சள் கலர்ல ஒரு ஜூஸ் எல்லாம் எடுத்துட்டு போய் சாப்பிட்டோம். அங்க ஒரு அம்மணி வந்து காபி வேணுமான்னு கேட்டுச்சு. வேணாங்கன்னு சொன்னோம்..ஒரு நிமிஷம் எங்களை ஒரு மாதிரியா பார்த்துட்டு..<br /><br />"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு " கேட்டுட்டு நக்கலா சிரிச்சிட்டு போகுது. அட நன்னாரிப் பயலுகளா....ஒண்ணுமே இல்லாத விஷயத்தை, இப்படி கிரி படத்துல வர்ற அக்கா & கணபதி ஐயர் மேட்டர் ரேஜ்சுக்கு, ஊரே நம்மல கிண்டல் பண்ணுதேன்னு நினைச்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் சாதாரணமா ஒண்ணா தங்கினது அவ்வளவு பெரிய தப்புங்களா..அந்த அளவுக்கு இருக்குங்க....அங்க.... ஆஹா...நம்ம ஊர்லயும் இப்ப சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஓகே சொல்லிட்டாங்களே...இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ஊர்லயும் இப்படி தான் பார்ப்பாங்க போல இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.<br /><br />மேலும் படங்கள்<br /><br /><div align="center"><strong>அந்த ஊர்ல பஸ் </strong><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFC7j6Db7V23tPfqTSs1ZkK8e5dOk7rw_6xyfljPQtrlWwkXpkCNJExLftlo0360OiDkoOJltF29_END5b4VW_KOA3bEKuUQUixOAc0SF0_P1Fw37TIM6nbAGm0wf0Jy6691ltG_mJ4TI/s1600-h/bus.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371268139384329298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFC7j6Db7V23tPfqTSs1ZkK8e5dOk7rw_6xyfljPQtrlWwkXpkCNJExLftlo0360OiDkoOJltF29_END5b4VW_KOA3bEKuUQUixOAc0SF0_P1Fw37TIM6nbAGm0wf0Jy6691ltG_mJ4TI/s400/bus.JPG" border="0" /></a><br /><br /><strong>எரிமலையினால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டோம் (நானும், சரவணனும்)</strong><br /></div><div align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheIAfDOTAGzvHMaiAh8WDgwE813urnzf3flXQYw4NlzjQ3ZB8qmVuyGUBZyEXmwFRlMdco7HHn7wietkCoNzMtaiNeoKnzC7SaZXvAjvyofdn5OWcZgM5wqUZ7mUlpLb1Po0zg7u8-jp8/s1600-h/lavaruins.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371268137587436994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheIAfDOTAGzvHMaiAh8WDgwE813urnzf3flXQYw4NlzjQ3ZB8qmVuyGUBZyEXmwFRlMdco7HHn7wietkCoNzMtaiNeoKnzC7SaZXvAjvyofdn5OWcZgM5wqUZ7mUlpLb1Po0zg7u8-jp8/s400/lavaruins.JPG" border="0" /></a><br /><strong>நாங்க தங்கின ரிசார்ட்(ஒரு சின்ன விளம்பரம் கூட இல்லாம எப்படி : ) )</strong> <div align="left"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuwj7ohHW1XnoBBuKs9FaF1p7WXHdU7xa2Vhc7Xi5U4Hzpx1g0MB25_LGtSQW_N0gf1-YncTumsM_CFt6PY_iV0QlOrfpBqfbTKZdRMpqOh6ssZgZ-GeoQRP6ACiaapHZGwsGsSnH4O10/s1600-h/savaii+hotel.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5371267622471668882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuwj7ohHW1XnoBBuKs9FaF1p7WXHdU7xa2Vhc7Xi5U4Hzpx1g0MB25_LGtSQW_N0gf1-YncTumsM_CFt6PY_iV0QlOrfpBqfbTKZdRMpqOh6ssZgZ-GeoQRP6ACiaapHZGwsGsSnH4O10/s400/savaii+hotel.JPG" border="0" /></a><br />ஒரு வழியா, சுற்றி பார்த்துட்டு, ஆபியாவில் உள்ள எங்க ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9 மணி, நல்ல கலைப்பு, Buffet க்கு போனோம். அங்க வச்சு இருந்த உணவைப் பாருங்க....பதிவை படிச்ச கலைப்புல இருப்பீங்க...இதையும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு போங்க... : )<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5371267133659561442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgLhusrgsytIVC21-wgjoYYrAJOmS_ryjdwr5lVmBBHPklrhuMK4L2R0pSaIQHnTowz8OnbtgUjhBj_72qAu17ZGz3F46nND-1L3tlC5ZDZhk1pS2BnDRg3TVdjibfbVRKWzmEPjCWQec/s400/pork.JPG" border="0" /> </div></div>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-61534833459655896312009-08-17T12:30:00.007+05:302009-08-17T12:39:12.529+05:30ஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXIEq8N6_EX2LxKjBuYrb_PpC3nauWZsSYJAbWEKrxJBbKbr203pcSmRfZ7Rb53nFhRtPU9MoQ1Wr-7HGi1JkH1uvH2iwMH_T409h3_l1YuNUjF2_eIPc1Zvl4NWMJQ_GvKDIds736cSw/s1600-h/shahrukh.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5370824634391810578" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXIEq8N6_EX2LxKjBuYrb_PpC3nauWZsSYJAbWEKrxJBbKbr203pcSmRfZ7Rb53nFhRtPU9MoQ1Wr-7HGi1JkH1uvH2iwMH_T409h3_l1YuNUjF2_eIPc1Zvl4NWMJQ_GvKDIds736cSw/s320/shahrukh.JPG" border="0" /></a><br />ஆகஸ்ட் 15, நம்மோட சுதந்திர தினம். சரி, நாட்டின் கொண்டாட்டங்களை பார்க்கலாமேன்னு ஆங்கில நியூஸ் சேனல்கள் பக்கம் திருப்பினா...BREAKING NEWS: Shah Rukh Khan detained and questioned for 2 hours. எந்த ஆங்கில, இந்தி சேனல்கள் திருப்பினாலும் இதே செய்தி தான். அடப் பாவிகளா, செய்தி போட வேண்டியது தான், அதுக்காக, சுதந்திர தினத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, முந்தியடித்துக்கொண்ட வெளியில் தெரிந்த செய்தி இது தான்.<br /><br />சரி, இப்போ மேட்டர். "My Name is Khan" என்கிற அவரது படம் சமீபத்தில் தான் சான் பிரான்சிஸ்கோவில் படமாக்கப்பட்டது. அதன் இயக்குனர் கரன் ஜோகர். இந்த முறை இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை துவக்கி வைக்க, ஷாரூக் கான் அமெரிக்கா சென்றார். அப்போது அவருடைய பேக்கேஜ் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால முதலில் ஷாரூக் கானின் டாகுமெண்ட்சை சரி பார்த்துள்ளனர் அமெரிக்க குடியேற்றத் துறையினர். பிறகு அவரைத் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முன்னாடி, பலருக்கு விசாரணை செய்ய வேண்டி இருந்ததால்,அங்கு, அவர் வரிசையில் காக்க வைக்கப் பட்டார். பிறகு, அவர் முறை வந்ததும், அவரை விசாரித்திருக்கின்றனர். எங்க, எதுக்கு வந்தீங்க...என்ன பண்றீங்க...இது தானே அவங்க நார்மலா கேக்குற கேள்வி..அதை கேட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். விசாரணை முடிஞ்சதும் அனுப்பிட்டாங்க. இது தான் நடந்தது.<br /><br />நம்ம ஊர் ராசா தாங்க ஷாரூக் நீங்க...பெரிய நடிகர்....எல்லாம் சரி தாங்க..இன்னொரு நாட்டுக்குப் போறீங்க...அவங்க நாட்டோட பாதுகாப்புக்காக, நாட்டு உள்ள வர்றவங்களை சோதனை செய்ய எல்லா உரிமையும் உண்டு. இது ரொம்ப நியாயமா தானே இருக்கு. இதுக்கு இப்படி ஒரு மீடியா கவரேஜ் தேவையா? அதுவும், சுதந்திர தினச் செய்தியை விட கூடுதல் கவனம் இதுக்கு தேவையா? இதுக்கு போய் ஒரு அரசாங்கம் தலையிடனுமா? என்ன கொடுமை சார் இது..?<br /><br />அது அமெரிக்கா...நம்ம ஊர் மாதிரி இல்லை...எல்லா குடிமகனையும் ஒரே மாதிரி தான் அங்க பாப்பாங்க...யாராக இருந்தாலும், விதிமுறை ஒன்று தான்...ஏழைக்கு ஒன்னு, பணக்காரனுக்கு ஒன்னு, நடிகனுக்கு ஒன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவுகோல் கிடையாது. இதுல இன்னும் ஒரு காமெடி என்னான்னா...மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, "நாமும் அமெரிக்கர்களிடம் அதே போல நடந்து கொள்ள வேண்டும்(Tit for Tat)" என்பது போல பேசி இருக்காங்க. இது சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு....(கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...அங்க ஒரு கொடுமை......)<br /><br />நிஜமா சொல்லணும்னா, நம்ம அரசாங்கம் இதை ஒரு பாடமா எடுத்துக்கணும். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தணும். நம்ம ஊர் எம்பி க்களுக்கு இந்த மாதிரி சலுகை கொடுத்து, அவங்க பொண்ணுங்களை யாருக்கும் தெரியாம கனடாவுக்கு அனுப்புன கதை எல்லாம் இருக்கு.<br /><br />இதே மாதிரி நம்ம நாட்டோட முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமுக்கு நடந்தது. அவரும் அதை பெருசு படுத்தல.<br /><br />இதுல என்ன தெரியுதுன்னா....சுதந்திர தினத்தன்று, பொதுவா சூடான செய்திகள் இருக்காது, ஏனென்றால், எல்லோரும் கொடியேற்றம், விழான்னு பிசியா இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் அமைதியா பேசுவாங்க. அதனால, இந்த நியூஸ் மீடியாக்கள் இதை ஒரு மேட்டரா எடுத்து, சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்குறாங்கன்னு தான் தோணுது !<br /><br />இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விசாரிக்கப்படும் போது, நமக்கும் இதே போல கோவமும், வெறுப்பும் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், அதுக்காக, இனிமேல் நான் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன், அப்படி இப்படின்னு சொல்றது கொஞ்சம் ஓவராத் தான் தோணுது. நாங்க எல்லாம், சட்டத்துக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று மமதையில் கூறுவது போல இருக்குங்க.<br /><br />உங்களைப் போலவே ஷாரூக் கானை எனக்கும் பிடிக்கும், அதுக்காக கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி தான் "என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட .." என்கிற ரேஞ்சுக்கு குரல் கொடுப்பது, ரொம்ப குழந்தைத் தனமா இருக்குங்க..!கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-47054857454518459532009-08-11T16:00:00.018+05:302009-09-19T11:37:38.031+05:30முதலாளி Vs தொழிலாளி!எனக்கே ரொம்ப மொக்கையா இருந்த மாதிரி தெரிஞ்சுது. அதுவுமில்லாம அதுல பல மேட்டர்ல எனக்கு கொஞ்சம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த இடுகையை நீக்கிவிட்டேன். தங்கள் வருகைக்கு நன்றி. மன்னிக்கவும்.கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-819385178975689152009-07-18T01:49:00.014+05:302009-07-18T10:02:13.691+05:30எதையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்!<div align="left"> ஆபீஸ்ல இருந்து நம்மல Samoa என்கிற நாட்டில் ஒரு ப்ராஜெக்ட் Implementationகாக அனுப்பி இருக்காங்க. ஆஸ்திரேலியவுக்கும், நியூசிலாந்துக்கும் நடுவில் உள்ள ஒரு சிறு தீவு தான் Samoa. </div><div align="left"><br />நேரடி விமானம் இல்லாததால், ஆஸ்திரேலியாவிலிருந்து செல்ல வேண்டும். விசா, டிக்கெட், டாடுமென்ட் அது இதுன்னு எல்லா எடுத்துட்டு கிளம்பினோம், நானும் என் அலுவலக நண்பர் சரவணனும். </div><div align="left"><br />இது தான் பயண விவரம். ஆஸ்திரேலியாவிற்கு Single Entry Visa, சமோவிற்கு On Arrivalஇல் Visa.<br />சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா<br />சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை </div><p align="left">செக் இன் செஞ்சிட்டு, அடுத்து நம்ம ஊர் Immigration.<br />ஆபீசர் : நீங்கள் ஆஸ்திரேலியா செல்வது முதல் முறையா?<br />நம்ம : ஆமாங்க, ஆனா, எங்க வேலை சமோவால..<br />ஆபீசர் : Western Samoa ? என்ன கேபிடல் அந்த நாட்டுக்கு?<br />(நல்லா கேக்குறாங்கய்யா...டீடெய்லு...)<br />நம்ம : ஆமாங்க..கேபிடல் ஆபியா..<br />(ஆப்பு + ஐயா = ஆப்பையா=> ஆப்பியா மரூஉ மொழி..ஹி ஹி..)<br /></p><div align="left"><br /></div><p align="left">சரின்னு முடிச்சுட்டு அதி காலை 2:45 AM மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். ஹாங்காங்க் வந்து சேர்ந்தோம். பத்து மணி நேரம் கழிச்சு தான் சிட்னிக்கு விமானம். டாலர்ல விலை போட்டு இருந்ததால, அதை நம்ம ஊரு காசுக்கு மாத்தி கணக்கு போட்டு, ஐயோ இவ்வளவா ?அப்படின்னு சொல்லிட்டு, வழக்கம் போல, ட்யூட்டி ஃப்ரீ கடைகள் உள்ள போயிட்டு, எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, எதுவும் வாங்காம சுத்திக்கிட்டு இருந்தோம். நம்ம ஊர், Old Monkல லைட்டா தண்ணி ஊத்தி வச்சா எப்படி ஒரு கோல்டன் பிரவுன் கலர்ல இருக்குமோ, அதே மாதிரி கலர்ல, அதையே நல்ல பாட்டில்களில் கலர்புல்லா, பேக் செய்து வைத்து மாதிரியான நிறைய பாட்டில்கள்.பெருசு,சிறுசுன்னு பலரும்,அந்தக் கடைகளில் தான் வாங்கிட்டு இருந்தாங்க.<br /></p><div align="center"><br /></div><img id="BLOGGER_PHOTO_ID_5359650938221219730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBgg3OuD3YqgZfVZ7G-Yoo8zASSQZVlr7Q-Y7zD-UKCQEYO0-K_kn6tB1jkDt_TxU3QrW_Vz_nehNadSqY7MahcpK9HtWqdi1GK-JHq4Avl_kwW-Iryyq21OLBU6M5PjA5QSdEwlmRZqY/s320/kabilan3.JPG" border="0" /> <em>லெப்ட்ல சரவணன், ரைட்ல நான் ஹாங்காங்க் டிரான்சிட்டின் போது....<br /></em><br /><p>சரி,நேரம் ஆயிடுச்சு. சிட்னி விமானத்துல ஏறத் தயாராகிக் கொண்டிருந்தோம். கேட் உள்ள வந்துட்டோம். ஒருத்தர் ஓடி வந்து நண்பரிடம் பாஸ்போர்ட் கேட்டார். என்னிடமும் கேட்டு வாங்கிப் பார்த்தார். You have to change your passport, as your foto doesnt resemble you" அப்படின்னாரு அந்த ஜெண்டில்மேன். டேய் ராசா, இது நான் சின்ன வயசுல கோல்ட் ஸ்பாட் குடிச்சிட்டு இருந்த போது எடுத்தது, இப்போ.... முகம் மாறி இருக்காதான்னு சொல்ற மாதிரி சொன்னேன்.(இந்த கோழி சிறுசா இருக்க சொல்ல உறிச்சது இது, இதே கோழி பெருசா இருக்க சொல்லு உறிச்சது அது...ந்னு மகராசன் படத்துல கமலஹாசன் சொல்ற மாதிரி). சரி டா ராசா...கிளம்புங்கோன்னு சொல்லி அனுப்பிட்டாரு...<br /></p><br /><p>9 மணி நேரப் பயணத்திற்கு பிறகு ஹாங்காங்கிலிருந்து சிட்னி வந்து சேர்ந்தோம். ஆகா, இப்போ ஆஸ்திரேலியவுல வேற அது இதுன்னு பிரச்சினைன்னு சொல்றாங்களே...நம்ம வேற முதல் முறையா வர்றோம் ஆஸ்திரேலியாக்கு, Immigrationல பிண்ணிப் பெடல் எடுக்கப் போறாங்கன்னு நினைச்சிட்டே போனோம்...நம்ம Triplicane ரத்னா கேப் கேஷியர் மாதிரி, காலை ஆட்டிக் கொண்டு ஒரு ஆபீசர் உட்கார்ந்துட்டு இருந்தார். அவர் கிட்ட போனேன்.ஆனா ஒண்ணுமே சொல்லல, எங்க போறீங்கன்னு கேட்டுட்டு, பட்டுன்னு ஒரு சீல் போட்டுக் கொடுத்துட்டாரு. எல்லாம் முடிஞ்சுதன்னு நினைச்சு பெரு மூச்சு விடுறதுக்குள்ள, அவர் ஒரு அம்மணியை கைக்காட்டி, உங்க பாஸ்போர்ட்டை இவங்க கிட்ட கொடுங்க, சரி பார்த்துட்டு தருவாங்கன்னு சொன்னார். அந்த அம்மணி,நீங்க எங்க போறீங்க, லெட்டர் கொடுங்க, பிசினஸ் கார்டு கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு, கொஞ்சம் நேரம் காத்து இருக்கச் சொல்லுச்சு. அதானே பார்த்தேன், நம்ம மூஞ்சி தான் லோக்கல் தமிழன் நு எழுதி ஒட்டின மாதிரி இருக்குமே...ஒண்ணுமே கேக்காம விடுறாங்களேன்னு நினைச்சேன்.<br /></p><br /><p>கொஞ்சம் நேரம் கழிச்சு அம்மணி வந்துச்சு. எல்லாம் ஓகே. ஆனா, நீங்க எடுத்து இருக்குறது Single Entry Visa. இப்போ ஒரு Entry முடிஞ்சிடுச்சு. அதனால, இதே விசாவை வச்சிட்டு, நீங்க திரும்பி சிட்னிக்கு வர முடியாது. சமோவால போய் டிரான்சிட் விசா எடுத்தால் தான் வர முடியும்னு சொன்னாங்க. நம்ம client கிட்ட இந்த மேட்டரை உடனே சொன்னேன். விசாவை பத்தி எல்லாம் கவலை படாதீங்க...நாங்க பாத்துக்குறோம்னு சொன்னாங்க. சரின்னு கஸ்டம்ஸ் அது இதுன்னு முடிச்சுட்டு வெளியில வந்தோம். வரவேற்க அலுவலகத்துல இருந்து வந்து இருந்தாங்க. இங்கேயே இருக்கீங்களா? இல்லை சாப்பிட போலாமா? இன்னும் 5 மணி நேரம் இருக்கு உங்க விமானத்துக்குன்னு சொன்னார். ஐயா, முதல்ல நாங்க குளிச்சு ரிப்ரேஷ் ஆகணும், அதுக்கு ஏதாச்சும் ஒரு வழி பண்ணுங்கன்னு சொன்னேன். ஆமாங்க, இரண்டு நாள் பயணத்துல, ஒரு சில விஷயங்கள நிம்மதியா கூட பண்ண முடியல : ). அதான். எங்கள் நிலைமையை புரிந்து கொண்ட அந்த நல்ல மனிதர், அவருடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார். </p><p>கும்முன்னு ஒரு குளியல் போட்டோம். மீதி இருக்குற நேரத்துல ஷார்ட் டிரைவ் கூட்டிட்டு போறேன்னு ஹார்பர் பிரிட்ஜ்,அது இதுன்னு வேகமாக சுற்றிக் காட்டினார். பல ஊர் போய் இருந்தாலும்,வழக்கம் போல பட்டிக் காட்டான் முட்டாய் கடையை வேடிக்கை பாத்த மாதிரி பாத்துட்டே வந்தேன். அவ்வளவு அருமையான ஊர். கட்டிடங்கள் எல்லாம் எழிலோடும்,பழமையின் சின்னமாகவும் அழகாக இருந்தது. "சிட்னி நகரம் என்பது வந்து நம்ம கை விரல்கள் மாதிரியான தோற்றம். விரல்கள் தான் இடங்கள், அதனுடைய இடைவெளிகள் முழுவதும் கடல்" என நறுக்கென்று விவரித்தார் அந்த ஆஸ்திரேலிய நண்பர். </p><p><img id="BLOGGER_PHOTO_ID_5359651224801191826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP064RcLzq10H1QPuVzvMdNklatw1jGIdnr_5RJJmeoroSrL9uIpFSeRe6nDHKCHd3L8mTxV_ZRAUq81rJoTeorc4Eddv8BnBbKERUw5ckjS2gLel9QAepN3jvQLrVD7Zdk5eYF9wcNfE/s320/kabilan2.JPG" border="0" /></p><p align="center"><em>இது, நான் தான், ஒரு சுய விளம்பரத்துக்காக எடுத்தது!</em></p><p>எல்லாம் முடிந்து, சமோவா, விமானத்துக்கு செக் இன் செய்ய ஏர்போர்ட் வந்தோம். ராசா, நீங்க சமோவ போறதுக்கு முன்னாடி, டிரான்சிட் விசாவை காண்பித்தால் தான் போர்டிங்க் பாஸ் தருவோம் அப்படின்னு சொல்லுச்சு அந்த விமான அலுவலக பெண்மனி. </p><p>சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா (இதுலயே ஒரு Entry/Exit முடிஞ்சிடுச்சு..விசா காலி)<br />சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை (விசா முடிஞ்சுப்போச்சே...எப்படிய்யா நீ சமோவவில் இருந்து சிட்னிக்கு திரும்பி வருவே? இது தான் அவங்க கேட்ட கேள்வி) </p><p>அங்கே போய் விசா எடுத்துக்குறோம், அது இது...நாங்க எல்லாம் லார்ட் லபக்தாஸ், அப்படி இப்படின்னு கதை விட்டும் ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஓகே வேற வழியே இல்லைன்னு, சிட்னியிலேய ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு கொடுத்துட்டாங்க. </p><p>ஐயோ வடை போச்சேன்னு ஒரு புறம் கவலையா இருந்தாலும். கம்பெனி செலவுல சிட்னில நல்லா சுத்திப் பாக்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு ஒரு சந்தோஷம் தான் ! Multiple Entry Visa நாளைக்கு வந்துடுமாம். ஞாயிறன்று சமோவா கிளம்புற மாதிரி ப்ளான். </p><p>இதுக்கு தான் வடிவேல் சொல்ற மாதிரி, "எந்த ஒரு விஷயத்தையும், ப்ளான் பண்ணாம செய்யக் கூடாது, ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்.... அஜுக்,பஜக்,புஜுக்....அஜுக்,பஜக்,புஜுக்..."</p><p>நெக்ஸ்டு மீட் பண்றேன், சமோவாவில்!</p><p>நம்முடைய முதல் பயணக் கட்டுரை, ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, இதை தொடராம, இனிமே நமக்கு வொர்க் அவுட் ஆகுற மாதிரியே பதிவையே போடுறேன்..!</p><br /><br /><p></p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-36687416995213120312009-07-13T11:03:00.011+05:302009-07-13T11:55:22.520+05:30சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டுமா?<p><br />சாதாரணமாவே நம்ம திருமணம், மற்றும் ஷாப்பிங்க் போறதுக்கே, இந்த டிரஸ் மேட்சிங்கா இருக்கா, இதுக்கு ஷூ போடலாமா, செருப்பு போட்டுக்கலாமா ? இப்படி எல்லாம் யோசிப்போம். அதுமட்டுமல்ல, நம்ம நண்பர்கள் கிட்ட பேசும் போது கூட, ஓரளவுக்கு யோசிச்சு, நம்ம சரியா தான் பேசுறோமா? சரியா தான் நடந்துக்குறோமான்னு ரொம்ப கவனமா நடந்துப்போம்.<br /><br />இதுக்கே இப்படின்னா, பல லட்சம் பேர் நம்மல கவனிச்சு பாக்குறாங்கன்னா, அதற்கு எவ்வளவு முன்னேற்பாடு செய்யனும். இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாம, நானும் VJ தான்னு வந்து நம்மல பண்ற கொடுமை இருக்கே...சாமி. ஆசையா எதாச்சும் ஒரு பாட்டு கேக்கலாம்னு, மியூசிக் சேனலை வச்சா போதும், லப லபன்னு, என்ன பேசுறோம்னே தெரியாம கத்திட்டு இருப்பாங்க. பொண்ணா இருந்தாலும் சரி, பையனா இருந்தாலும் சரி. இதுல வேற பல நிகழ்ச்சிகளில் இரண்டு VJ. உங்களையும் மதிச்சு ஒருத்தர் போன் பண்றார்னா, அவரிடம் ஒழுங்காக பேசாமல், இவர்களுக்குள்ளேயே கடலை வறுத்துக் கொண்டிருப்பது, இவங்க ஏதோ லார்ட் லபக்தாஸ் மாதிரியும், போன் பண்றவங்க ஏதோ முட்டாள்கள் மாதிரியும் நினைச்சு பேசுற மாதிரியே இருக்கும் இவர்களுடைய தோரணை.</p><br /><p>அதுமட்டுமல்ல, போன் செய்ற பெரியவங்க, ரொம்ப ஆசையா, தன் பையன் கிட்ட, பொண்ணு கிட்ட பேசுற மாதிரி அன்பா பேசுவாங்க. அப்படி பேசுறவங்கள இவங்களுக்குள்ளேயே நக்கல் பண்றது,கிண்டல் பண்றது. தன்னுடைய குரல் டிவில கேக்காதாங்கற ஆசையில போன் செய்றவங்களை என்னமா கொடுமை பண்றாங்க இவங்க.</p><img id="BLOGGER_PHOTO_ID_5357819948106235362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 234px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOwxJ6ZhpRei96JhgXRpAxtD8mSf7nJA10eynKiounDPGOOkExLTUtRWPI3mfcN-jVqZzSleexiLaFLeQMS_HOTRwWP-l91r177OkBcxjnXzCIuJ-zBVeav4vAZbsBDvht7P0QAIKurzM/s320/vj2.JPG" border="0" /><br /><p></p><p>சரி நம்ம மேட்டர்க்கு வருவோம். எத்தனையோ மிகச் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு மத்தியில், இப்படியும் நாலு பேர் இருக்கத் தான் செய்றாங்க. இந்த மாதிரியான ஒரு ஒப்புக்குச் சப்பானி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டுமா ? நீங்களே உங்களை சோதித்துக் கொள்ள எளிய வழிகள் இங்கே!</p><p><br />1.நிகழ்ச்சியின் போது என்ன டிரஸ் போடுவீங்கன்னு தோணுதோ, அந்த டிரஸ்சை போட்டுட்டு, ரோட்டில் போய் நில்லுங்கள். உங்களை குறைந்த பட்சம் 5 நாய்களாவது துரத்தினால், டெஸ்ட் 1 ல நீங்க பாஸ்.<br /></p><br /><p>2.நிகழ்ச்சியில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம், preferably பாட்டியிடம் போய் பேசுங்கள். "ஐயோ, புள்ளைக்கு காத்து கருப்பு ஏதாச்சும் புடிச்சுருச்சா" அப்படின்னு பாட்டி ரியேக்ஷன் கொடுத்தாங்கன்னா நீங்க டெஸ்ட் 2 லயும் பாஸ்.<br /></p><br /><p>3.காலையில் இட்லி சாப்பிட்டேன் என்கிற விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, உங்கள் பெண் நண்பியிடம் 1 மணி நேரம் பேசுபவரா நீங்கள் ? ஆமான்னு தலையை ஆட்டுனீங்கன்னா, ஐயா, மூன்றாவது டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க.<br /></p><br /><p>4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்? அல்லது Wrong Number க்கு கால் செய்து அரை மணி நேரம் பேசக் கூடிய திறமை கொண்டவரா நீங்கள்? இதுக்கும் ஓகே சொன்னீங்கன்னா....கிட்ட தட்ட முக்கா கிணறு தாண்டிட்டீங்க நீங்க..<br /></p><br /><p>5.நீங்கள் படித்த கல்லூரியிலோ, பள்ளியிலோ, ஆசிரியரிட்ம், உங்களைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள். "எத்தனையோ பசங்கல பாத்து இருக்கேன். சில பேர் ரொம்ப பழம் மாதிரி இருப்பான், சில பேர் ரொம்ப அரட்டையா இருப்பான். ஆனால் இவன் ஒரு மாதிரி, எப்பவும் மர கழண்ட மாதிரியே சுத்திட்டு இருப்பான்".</p><p>இப்படி ஒரு பதில் வந்துச்சுன்னா.....அடேங்கப்பா....நெருங்கிட்டீங்க....ஐந்தாவது டெஸ்டிலும் நீங்க பாஸ்.<br /></p><br /><p>6. கடைசியா ஒரு கஷ்டமான கேள்வி. பால் குடிக்கிற குழந்தை என்ன குடிக்குது? இந்த கேள்விக்கு எவ்வளவு யோசிச்சும் உங்களால பதில் சொல்ல முடியலையா? சூப்பர். இந்த டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க!<br /></p><br /><p>அட, எல்லா டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்களா?<br /></p><br /><p>Congratulations! நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக சன் மியூசிக் அல்லது இசையருவியில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது ! அதே வேகத்தோடு, இதோ இதையும் கொஞ்சம் சொல்லி பழகிக்கோங்க.</p><p><br />"இதுவரைக்கும் நாடோடிகள் படத்துல இருந்து ..பாட்டு பாத்து எஞ்சாய் பண்ணோம். இப்போ அடுத்து நம்ம கிட்ட பேச போற நெக்ஸ்ட் காலர் யார்னு பாக்குறதுக்கு முன்னாடி ஒரு short commercial break.! </p><br /><em>டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல</em><br /><p></p><br /><p></p>கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com27