Saturday, January 9, 2010

எஸ் ஐ உசுரு, அமைச்சருக்கு மசுரு!

சமீபத்தில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தது அனைவரும் அறிந்ததே. அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லாத காட்டு மனிதர்களாக நாம் இருந்தாலும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு பதிவுக்குள் செல்வோம்.

டிவி நியூஸ்ல பார்த்தேன். யாரோ ஒருவர் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். தலையில் பலத்த காயத்துடனும், ஒரு கால் துண்டுபட்ட நிலையிலும், துடித்துக் கொண்டிருக்கிறார். உதவி கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் அமைச்சர்களின் வாகனங்கள், மற்றும் பாதுகாப்பு அலுவலர்களின் வாகனங்கள் வருகிறது. உடல் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விளையாட்டு அமைச்சர் மொய்தீன் கான் மற்றும் மாவட்ட கலெக்டர், ஹெல்த் செக்ரடரி என அனைவருமே அந்த இடத்தில் இருக்கின்றனர்.. காரை விட்டு யாருமே வெளியே வரவில்லை. 8 நிமிடம் கழித்து கலெக்டர் காரிலிருந்து வெளியில் வந்து ஆம்புலன்சிற்கு போன் செய்கிறார். ஆம்புலன்ஸ் வரத் தாமதாகும் என்று கலெக்டர் உணர்கிறார். 20 நிமிடங்கள் வரை அமைச்சர் காரிலேயே அமர்ந்திருக்கிறார். பிறகு வந்து விசிட் அடிக்கிறார். பிறகு கலெக்டரின் உத்தரவுப்படி பாதுகாப்பு அலுவலர்களின் வாகனத்தில் குத்துயிரும், கொலைஉயிருமாய் இருந்த எஸ் ஐ வெற்றிவேலை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால், வழியிலேயே பரிதாபமாக உயிர் இழக்கிறார்.

என்ன சொல்றதுன்னே தெரியல. அவர் அப்படி துடித்துக்கொண்டு உதவிக்காக கதறுகிறார், ஒருத்தர் கூட உதவி செய்யல. இதே மாதிரி நாம அடிப்பட்டு கிடந்து, சுற்றி எல்லோரும் இருந்து, எல்லா அதிகாரியும், அமைச்சரும் இருந்து, நம்மை காப்பாற்ற யாரும் வரலைன்னா எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். ஐயோ....ரொம்ப கொடுமை.

கொஞ்சம் முன்னாடியே யாராவது கூட்டிட்டுப் போய் இருந்தால் இந்நேரம் அவர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும்.

வெற்றிவேலின் நிலைமையில் நாம இருந்தோம்னா, அந்தக் கடைசி உயிர் பிரியுற நேரத்துல நிஜமா என்ன நினைச்சு இருப்போம்? அவருடைய அந்த நிலைமை எப்படி இருந்திருக்கும்னு நமக்கு தெரியாது. இருந்தாலும், அவர் நிலைமையில் இருந்தால், இப்படித் தான் நான் நினைச்சு இருப்பேன்.

எத்தனை தடவை இதே அமைச்சர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இரவெல்லாம் கண்விழித்து வேலை பார்த்திருப்போம். அரசியல் கும்பல் தலைவர்கள் வீட்டு கல்யாணத்திலிருந்து, காரியம் வரை எவ்வளவு செஞ்சி இருப்போம். இந்த நேரத்துல பக்கத்துல இருக்க ஒரு ஆஸ்பித்திரிக்கு கூட கொண்டு போய் சேர்க்க மாட்றாங்களே ! நாம செத்துக்கிட்டுறுக்கோம்...காரை விட்டே வெளிய வரமாட்டேங்குறாங்க...... எத்தனையோ முறை உங்களின் கார் கதவுகளை ஓடி வந்து திறந்துவிட்டிருக்கேன். இப்பொழுது என்னுடைய குருதியின் நாற்றம் உங்கள் கார்களை சேதப்படுத்தும் என்று, எட்ட நின்று வேடிக்கைப் பார்க்கிறீர்களா? உங்கள் வீட்டு மனிதர்கள்... வேண்டாம்..அவங்க நல்லா இருக்கட்டும், உங்க வீட்டு நாய் அடிபட்டிருந்தால் இதே மாதிரி தான் நடந்து கொண்டிருப்பீர்களா? உடல் சிதைந்து குருதி பீய்ச்சும் வலியை விட, என் உயிரை காப்பாற்ற ஒருவரும் வரலியே அப்படிங்குற மன வேதனை தான் அதிகமா இருந்திருக்கும்.

இது நார்மல் தானே. இங்க சிட்டிலேயே, ஆக்சிடெண்ட் ஆகி அடிபட்டவங்களை ஒரு பரிதாப லுக் விட்டுட்டு, ஆண்டவா காப்பாத்திடுப்பா ந்னு ஒரு வேண்டுதலை போட்டுட்டு, டைம் பாத்துட்டு, அடிபட்ட மனுஷன கண்டுக்காம போறாங்களே...அப்படின்னு கேட்கலாம். பெரும்பாலான சமயங்களில், விபத்துக்களில் காயம் பட்டவர்களை நல்லுள்ளம் படைத்தவர்கள் உடனடி சிகிச்சை கொடுப்பதை எல்லோரும் பார்த்திருப்போம். அப்பாடி, அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டாங்க...அப்படின்னு ஒரு திருப்தி இருக்கும். சிறு காயமாக இருந்தால், அவர்களின் வாகனத்தை ஓரம் கட்டி, அவருக்கு முதலுதவி செய்வதை எல்லாம் பாத்துட்டுத் தானே இருக்கோம்.

இங்க வெற்றிவேலுக்கு நடந்த விஷயம் அப்படியல்ல. அவர் நல்லவரா, கெட்டவரா, பின்னணி,என்ன செய்தார் அது இப்போ தேவையில்லாத விஷயம். ஒரு மனுஷன் வெட்டுபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். சக மனுஷனா இருந்தா காப்பாற்ற முயற்சி செய்யணும். ஒரு காகத்திற்கு அடிபட்டதை பார்த்த மற்றொரு காகம், கரைந்து ஒரு கூட்டத்தையே அழைக்குமாம் உதவி செய்ய. அவைகளுக்கு இருக்கும் உணர்வு கூட நம் அரசியல் வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் இல்லாதது ரொம்ப கொடுமை.
மக்களின் சேவையே எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லி, எப்படி தான் உங்களுக்கு ஓட்டு கேட்க மனசு வருதோ தெரியல ?

சாதாரண ஆளுங்க, இந்த மாதிரி சமயத்துல பெரும்பாலும் பயப்படுவது, ஏதாவது போலீஸ் கேஸ் ஆயிடுமோ...நமக்கு எதுக்கு வம்பு என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் அடிபட்டு உதவிக்காக கதறுகிறார், அதற்கான உரிய அதிகாரிகளே அந்த இடத்தில் இருந்தும், போதாக்குறைக்கு அமைச்சர்களே இருந்தும் இப்படி நடந்திருப்பது மகாக் கேவலம். இரக்கமில்லா மந்திரிகள்(மனிதர்கள்) என்று தான் சொல்லணும்.

காரை விட்டு வெளியே கூட வராமல், அமைச்சர் உட்கார்ந்திருக்கிறார் என்றால், சாமானியனின் உயிர், உங்களுக்கு ம....ஆக கூட தோன்றவில்லை என்றே தெரிகிறது.

சரிங்க...என்ன பண்றது டிவி பார்த்ததுல இருந்து, ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுச்சு அதான் கொட்டி தீர்த்துட்டேன்.

ஜக்குபாய் திருட்டு டிவிடி ரிலீஸ் ஆனதுக்கெல்லாம், வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு ஓரிரு மணித்துளிகளில் ஆக்ஷன் எடுத்த திராவிட சிங்கங்களின் அரசு, இந்த மேட்டர்ல கவனிக்குறது மட்டுமில்லாமல், அந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சேர்த்து கவனிக்குறது தான் வெற்றிவேலின் ஆத்மா சாந்தியடைய உதவும்!

குருதி சுகாதாரமற்றது என
சுகாதாரத் துறை அமைச்சகம் நிராகரிக்க,
இது ரவுடிகளின் விளையாட்டு என
விளையாட்டுத் துறை அமைச்சகம் விலக,
ஆட்சித்துறையோ அலட்சியப்படுத்த,
அரசாங்கமே இருந்தும்,
உதவிக்கு நாதியற்று கிடந்தார் வெற்றிவேல்.

மறித்தது அவர் உயிர்மட்டுமல்ல,
நம் மனித நேயமும் தான்!

35 comments:

மந்திரன் said...

நறுக்குன்னு சொன்னீங்க ..
இந்த நாசமா போறவங்க எப்போ திருந்துவாங்களோ ?

கபிலன் said...

இவங்கள கேட்க ஆள் இல்லை என்பதால் ஏற்படுகிற பதவித் திமிர் என்று தான் சொல்ல வேண்டும்.
உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க மந்திரன்!

MURUGS said...

- enna solrathunnu theriyala......manthiruye vetittu carla ukkanthu vedikka paththa mathiri irukku...romba kodumai

கபிலன் said...

murugs said...
- enna solrathunnu theriyala......manthiruye vetittu carla ukkanthu vedikka paththa mathiri irukku...romba kodumai

இந்த ஆங்கிள்ல விசாரிக்க தனி விசாரணைக் கமிஷன் தான் போடணும். இந்தப் பிரச்சினையையே எப்படி திசை திருப்புவாங்கன்னு கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாருங்க முருக்ஸ்..!

Niruban.N said...

ஒரு பாமரன் நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்டால் அது ஒரு வரி செய்தியாக(எத்தகைய கொடூரமாக இருந்தாலும்) இருந்துருக்கும்.ஆனால் ஒரு மக்களை காக்கும்(காப்பதாக கூறப்படும்) காவல் துறை அதிகாரி நடுரோட்டில் வெட்டுப்பட்டு உயிர் பிழைக்க கெஞ்சும் போது ஆளும் வர்க்கம் வேடிக்கை பார்த்தது மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் மனிதாபிமானம் கொலை செய்யப்பட்டதை (ஒரு முறை சட்டகல்லுரரி ) உறுதிபடுத்துகிறது.

காசுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை...காட்டுமிராண்டிகள் அமைச்சர்கள் ஆகவும்,முட்டாள்கள் அதிகாரிகளாகவும் இருப்பதை யாரும் ஒன்றும் செய்யா முடியாது...இது தான் தரி கெட்ட ஜனநாயகத்தின் விதி.....

உங்களின் இந்த கோபம் சரியானது. சிந்திக்க தெரிந்தவனின் கோபம் வெற்றிக்கு வித்திடும்.
நமது இந்த கோபம் வெற்றிவேல் அவர்களின் குடும்பத்துக்கு அருதல் தாரட்டும்.

தண்டனைக்குரியவர்கள் அமைச்சர்களும்,அதிகாரிகளும் மட்டும் அல்ல...வீடியோ பதிவு செய்த நபரும் தான்....

என்றும் அன்புடன்,
ந.நிருபன்

கபிலன் said...

சரியாக சொன்னீர்கள் நிரூபன். வீடியோ பதிவு செய்த நபர், இதை உலகுக்கு தெரியப்படுத்தி, மந்திரிகளின் முகத்திரைகளைக் கிழித்திருக்கிறார் என்ற வகையில் நல்லதே செய்திருக்கிறார்.

Anonymous said...

My friend,

My comments are based on what I read in news portals. I haven't seen the TV news nor video.

1. I don't believe any (well 99% including me) Indian have the basic quality/characteristic to help fellow citizen in distress.

2. Because our brought up is like that. It is imbibed again and again through parents and society to be selfish. Never bother about others.

3. Common man blaming the ministers and police officials are right. But, are they going to be punished? Never! The powers that be in the current government never gave me that confidence.

4. There is utter lack of common sense right from ministers, collector, officials, police force right to public. This is for two reasons. Lack of general knowledge and apathy. Both needs to be taught from young age.

5. Famous saying: When you don't learn from history, you are condemned to repeat it.

Well, as Indians we are cursed to never learn lessons and are condemned to repeat it again and again.

6. In this generation, we won't change unless there is a miracle. Some leader to drive the change in the nation, ala Lee Kuan Yew of Singapore.

At least we can teach good qualities of life to our kids.

7. The story of the incident is already twisted. It is told that the officials feared attack on the ministers. Hence they were told to stay put inside the car.

8. The family of the police officers are stating that the government and officials are well equipped to handle the situation best. Either they have been paid or threatened to against airing their voice.

9. It is eye-opener for those officials who believe politicans, superiors would protect them in the need of the hour. Disclaimer: I'm not inciting anyone here.

அண்ணாமலையான் said...

சன் ந்யூஸ் பாருங்க, இன்னிக்கு காலைலேருந்து எத்தன கம்மனாட்டி பேட்டி கொடுக்காறான்னு... --------------------------------------------------------------இதெல்லாம் கெட்ட வார்த்தைதான்...

கபிலன் said...

உங்கள் உணர்வுகளை முன்வைத்ததற்கு நன்றி அனானி!

கபிலன் said...

"அண்ணாமலையான் said...
சன் ந்யூஸ் பாருங்க, இன்னிக்கு காலைலேருந்து எத்தன கம்மனாட்டி பேட்டி கொடுக்காறான்னு... --------------------------------------------------------------இதெல்லாம் கெட்ட வார்த்தைதான்..."

ரொம்ப மோசமா போச்சுங்க....நம்ம ஊர் சேனல்கள்.....
மனிதாபிமானம் கிலோ என்னா விலைன்னு கேட்குற மாதிரி இருக்கு நடந்திருக்க சம்பவம் !
ஜீரணிச்சிக்கவே முடியல !

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்தமைக்கு நன்றிங்க அண்ணாமலையான்!

சந்தனமுல்லை said...

இதுலே பேட்டி வேறே கொடுக்கறாங்க...காட்டுமிராண்டித்தனமா இருக்கு!

கபிலன் said...

இந்தியா முழுவதும் நம்ம ஊர் அமைச்சர்களைப் பற்றித் தான் பெருமையா பேசிட்டு இருக்காங்க.....இவங்க கொடுக்குற காரணம் கொஞ்சம் கூட ஏத்துக்கக் கூடிய வகையில இல்லை.

தனக்கு முன்னாடியே ஒருத்தன் துடி துடிச்சு செத்துட்டு இருக்கான்...அதை வேடிக்கைப் பார்த்த இவங்களா....கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பார்கள் ?என்னமோ .....

தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க சந்தனமுல்லை!

Anonymous said...

Thevdiya pasanga.

Ratham kodhikudhu.

guyfromsg said...

உங்கள் குமுறல் எனக்கு புரிகிறது. நான் நேற்று தூங்க முடியாமல் தவித்தேன். இந்த விடியோவை அவர் குடும்பத்தார் பார்த்தால்..நினைச்சால பதறுது. இந்த லட்சணத்துல் நக்கீரன் இத திரிச்சு வேற போடுது...என் மன உளைச்சல பகிர்ந்துக் கொள்ள ஆரம்பிச்ச பதிவு...

http://verrupu.blogspot.com/2010/01/blog-post.html

அரசூரான் said...

அமைச்சர்களை விடுங்கள், அந்த கூட்டத்தில் இருந்த கலெக்டர், மற்ற அரசு பாதுகாப்பு அதிகாரிகள்... அவர்கள் ஒருவரிடமும் மனிதாபிமானம் இல்லாதது வேதனைக்குரிய விசயம்...

கபிலன் said...

கண்ணன் said...
உங்கள் குமுறல் எனக்கு புரிகிறது. நான் நேற்று தூங்க முடியாமல் தவித்தேன். இந்த விடியோவை அவர் குடும்பத்தார் பார்த்தால்..நினைச்சால பதறுது. இந்த லட்சணத்துல் நக்கீரன் இத திரிச்சு வேற போடுது...என் மன உளைச்சல பகிர்ந்துக் கொள்ள ஆரம்பிச்ச பதிவு...

http://verrupu.blogspot.com/2010/01/blog-post.html"

ரொம்ப வேதனையான நிகழ்வு இது. உங்கள் பதிவைப் படித்தேன். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது நக்கீரன். வீடியோ ஆதாரங்கள் மக்களுக்கே சென்றுவிட்டது. இனி திரித்து சொல்வதை மக்கள் நம்புவது கடினம்.

எண்ணங்களை பதிவு செய்தமைக்கு நன்றி கண்ணன்!

கபிலன் said...

"அரசூரான் said...
அமைச்சர்களை விடுங்கள், அந்த கூட்டத்தில் இருந்த கலெக்டர், மற்ற அரசு பாதுகாப்பு அதிகாரிகள்... அவர்கள் ஒருவரிடமும் மனிதாபிமானம் இல்லாதது வேதனைக்குரிய விசயம்..."

இதுல அமைச்சர்களை விட முடியாதுங்க அரசூரான். தலை இருக்கும் போது வால் ஆடாதேங்க....
அதுமட்டுமல்ல, "சார், உங்க கார்ல, வெற்றிவேலை ஏற்றி, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகட்டுமா? " அல்லது "சார், உங்க பாதுகாப்புக்காக வந்த காரில் அவரை ஏற்றி செல்லட்டுமா ?"என கலெக்டர் /காவல் துறை அதிகாரிகளோ கேட்கமுடியுமா ? அது அமைச்சரே சொன்னால் தான் உண்டு. பாதுகாப்பு அதிகாரிகளை தன் பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, ஒரு டிரைவரை விட்டாவது வெற்றிவேலை ஹாஸ்பிடல் சேர்த்திருக்கலாம். அமைச்சர் காரில் கூட வேண்டாம், பாதுகாப்பு அலுவலர்கள் காரில். இதை உடனே செய்திருந்தால், வெற்றிவேல் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க அரசூரான்.

Anonymous said...

naaykku adi padda kekkarathu blue cross irukku...

manushanukkau adipadda kekka oru naayi kooda illa... :-(

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க கபிலன்....

எப்பத்தான் திருந்துவாங்களோ

அஹோரி said...

உலகத்துல இருக்குற மோசமான கெட்ட வார்த்தைகள் அந்த நாய்களுக்கு உரித்தாகுக.

கபிலன் said...

"Anonymous said...
naaykku adi padda kekkarathu blue cross irukku...

manushanukkau adipadda kekka oru naayi kooda illa... :-( "

மோசமான நிலைமை தாங்க அனானி!

கபிலன் said...

"ஆரூரன் விசுவநாதன் said...
சரியாச் சொன்னீங்க கபிலன்....

எப்பத்தான் திருந்துவாங்களோ"

இவங்க திருந்த்றாங்க, திருந்தலை ங்கறது ஒரு கதை. இவங்கள பார்த்து, உதவி செய்யும் நல்லுள்ளம் படைத்தவர்கள் கெட்டுப் போகாம இருக்கணும். ஏன்னா...அப்படி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திட்டாங்களே!

உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க ஆரூரன்!

கபிலன் said...

"அஹோரி said...
உலகத்துல இருக்குற மோசமான கெட்ட வார்த்தைகள் அந்த நாய்களுக்கு உரித்தாகுக."

அதனால், அவர்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டால் சரி தான் !
நன்றிங்க அஹோரி!

thiruchchikkaaran said...

இந்த ரேஞ்சுல போனால் போலீசு கமிசனர், இந்தியப் படைத் தளபதி உட்பட யார் உயிருக்கும் உத்தரவாதம் இருக்காது போலே இருக்கே.

ஏதோ நாம அதிர்ஷ்டத்தினால் உயிர் வாழ்கிறோம் என்பதே உண்மை.

தலைவா, உன் வீட்டு செடி கொடிக்கு தண்ணீர் வூற்றும் வேலை இருந்தால் போட்டுக் கொடு, அப்படியே ஒரு ஓரமா தங்கிகிறேன்.

இல்லை என்றால் உன் மவ, மவன் வீட்டுல வீட்டு வேலைக்கு ஆள் தேவை அங்கேயே தங்கிக்கலாம் என்றால் அதுவும் பரவயில்லை.

இந்த வேலை எதுவும் காலி இல்லை என்றால் என்ன செய்வது?

என் ஜாதகம் அப்படி, என்ன நடக்கனுமோமோ நடக்கட்டும் என்று எதையும் தாங்கும் இதயத்துடன், அரிவாள் வெட்டை தாங்க முடியாத உடலுடன், விதியை நம்பி வாழ வேண்டியதுதான்.

கபிலனின் கட்டுரைக்கு பாராட்டுகள்.

சரவணன். ச said...

//மறித்தது அவர் உயிர்மட்டுமல்ல,
நம் மனித நேயமும் தான்!//

முற்றிலும் உன்மை....

அன்பரசு said...

மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்!தினம் தினம் நமது சாலைகளில் நடந்து கொண்டிருப்பது, இப்போது காவல்துறை அதிகாரி மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பது, மேலும் வீடியோ பதிவு போன்றவை மீடியாக்களின் வெறிக்குக் கிடைத்த தீனி.

பொதுவாக ஒரு சமுதாயம் மேம்படும்போது கல்வி வளர்ச்சியுடன், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவையும் வளரும். (இங்கு பண்பாடு என்பதில் மற்றவர்களுக்கு உதவுவதும் அடங்கும்). மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் வளர்ச்சி என்பது இப்படித்தான் ஏற்பட்டிருக்கிறது. இங்கு நம் நாட்டில் தான் வளர்ச்சி என்பது தனி மனித வளர்ச்சியோடு நின்றுவிடுகிறது. சமூக வளர்ச்சியைப்பற்றி யாரும் அக்கறைப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தான போக்கு.

ஒரு மனிதனின் சமூகக் கடமைகள், பொது இடங்களில் நமது கடமை, பொறுப்பு என்ன, நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை போன்றவை சிறுவயதிலிருந்தே பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் இழந்து வரும் மனிதத்தன்மையை அடுத்த தலைமுறையிலாவது மீட்கலாம்!இங்கே பதிவிட்டுக்கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த காவல்துறை அதிகாரியை மருத்துவமனைக்குக் கொண்டுபோக முயற்சித்டிருப்பார்கள்? நான் யாரையும் குறை கூறவில்லை. நாம் நமது சட்டங்களையும், சமூகத்தையும் அப்படி வளர்த்துவைத்திருக்கின்றோம்.

நன்றி!

மணிப்பக்கம் said...

கண்டிப்பாக 2 அமைச்சர்களும் நெல்லை ஆட்சியரும் நீக்கபடவேண்டும்! நமது பத்திரிக்கைகளும் இதை பெரிது படுத்தும் என்று எதிர்பார்ப்போம்! வட இந்தியாவில் நாறிபோய் விட்டது, எந்த நடவடிக்கையும் இல்லை என்றால், கலைஞர் ஒருவரே தமிழ்நாட்டை அதிகம் அறிந்தவர்!

சாமக்கோடங்கி said...

மனித நேயம் வளர நாம் அனைவரும் இனைந்து புதிய தலை முறையினரை உருவாக்குவோம். தற்போதைய சுயநல சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கம். குற்றம் சொல்வதால் மட்டும் நாம் ஒரு சரியான பிரஜை ஆகி விட மாட்டோம். வருங்காலத்திற்கு மனித நேயத்தை உணர்த்த நாம் முதலில் நல்லவர்களாக இருப்போம். வருங்கால சமுதாயத்தினருக்காக என்னுடைய பக்கத்தில் ஒரு இடுகை இட்டுள்ளேன். முடிந்தால்பார்க்கவும்.

கபிலன் said...

இனியாவது இந்நிலைமையை மாற்ற முயற்சி செய்யணும்.
எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க திருச்சிக்காரர்!

கபிலன் said...

"சரவணன். ச said...
//மறித்தது அவர் உயிர்மட்டுமல்ல,
நம் மனித நேயமும் தான்!//

முற்றிலும் உன்மை...."

வெட்கித் தலை குணிய வேண்டிய உண்மைங்க சரவணன்!

கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றிங்க சரவணன்!

கபிலன் said...

"பனங்காட்டான் said...
ஒரு மனிதனின் சமூகக் கடமைகள், பொது இடங்களில் நமது கடமை, பொறுப்பு என்ன, நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை போன்றவை சிறுவயதிலிருந்தே பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் இழந்து வரும் மனிதத்தன்மையை அடுத்த தலைமுறையிலாவது மீட்கலாம்!"

நிதர்சனமான உண்மை. வழிமொழிகிறேன்!


"இங்கே பதிவிட்டுக்கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த காவல்துறை அதிகாரியை மருத்துவமனைக்குக் கொண்டுபோக முயற்சித்டிருப்பார்கள்? நான் யாரையும் குறை கூறவில்லை. நாம் நமது சட்டங்களையும், சமூகத்தையும் அப்படி வளர்த்துவைத்திருக்கின்றோம்."

நிஜம் தான். நம்முடைய சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த மாதிரியான சம்பவங்கள், நமக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தையே தருகின்றன என்பது வருந்தத்தக்க செய்தி.

தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க பனங்காட்டான்..!

கபிலன் said...

"மணிப்பக்கம் said...
கண்டிப்பாக 2 அமைச்சர்களும் நெல்லை ஆட்சியரும் நீக்கபடவேண்டும்! நமது பத்திரிக்கைகளும் இதை பெரிது படுத்தும் என்று எதிர்பார்ப்போம்! வட இந்தியாவில் நாறிபோய் விட்டது, எந்த நடவடிக்கையும் இல்லை என்றால், கலைஞர் ஒருவரே தமிழ்நாட்டை அதிகம் அறிந்தவர்!"

நமது பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் இவைகளைப் பெரிது படுத்துவது கஷ்டம் தான். திசை திருப்ப மட்டுமே செய்ய முடியும்.

உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க மணிபக்கம்!

கபிலன் said...

" பிரகாஷ் said...
...குற்றம் சொல்வதால் மட்டும் நாம் ஒரு சரியான பிரஜை ஆகி விட மாட்டோம். வருங்காலத்திற்கு மனித நேயத்தை உணர்த்த நாம் முதலில் நல்லவர்களாக இருப்போம். வருங்கால சமுதாயத்தினருக்காக என்னுடைய பக்கத்தில் ஒரு இடுகை இட்டுள்ளேன். முடிந்தால்பார்க்கவும்."

வழிமொழிகிறேன் பிரகாஷ்!

தங்கள் இடுகையைப் பார்த்தேன். தங்கள் சமூகப் பணித் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Ganesh said...

Niyamana kopam. Oyiroda mathippu theriyatha genmangal. Thanakku vanthal mattume thalai vazhi theriyum genmangal. Oru pothum nadu orupidathu ivargal irukkum varai.

கபிலன் said...

" Ganesh said...
Niyamana kopam. Oyiroda mathippu theriyatha genmangal. Thanakku vanthal mattume thalai vazhi theriyum genmangal. Oru pothum nadu orupidathu ivargal irukkum varai. "


தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கணேஷ்!

LinkWithin

Blog Widget by LinkWithin